வெற்றிக்கு மேல் வெற்றி கொடுக்கும் மந்திரம்

vetri manthiram
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல காரியங்களை நாம் செய்வோம். அப்படி செய்யும் பொழுது அந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடைகிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த தோல்விக்கு காரணம் நம்முடைய கவனமின்மையாக இருக்கலாம் என்று ஒரு புறம் யோசித்தாலும் நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலாலும் அந்த காரியம் வெற்றி அடையாமல் தடைப்பட்டு நிற்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த பொருளை கையில் வைத்துக்கொண்டு எந்த மந்திரத்தை கூறினால் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு வகையான பொருள் இருக்கிறது. ஒரு மந்திரத்தை நாம் மனதார உச்சரித்தோம் என்றால் அந்த மந்திரத்திற்கு உரிய பலனை நம்மால் முழுமையாக பெற முடியும். இதில் முழு நம்பிக்கையுடன் செய்வதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி இருக்கும் பொழுது நம்மிடம் தீய சக்திகள் எதுவுமே அணுகாமல் இருப்பதற்காக பல மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மந்திரங்களை மட்டுமே நாம் உபயோகப்படுத்துவதை விட மகத்துவமிக்க பொருட்களை கையில் வைத்துக்கொண்டு உச்சரிக்கும் பொழுது அதன் பலன் மிகவும் அதிகமாகவே இருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் ஆண்கள் தங்கள் கைகளில் கருங்காலி கட்டை மிகவும் சிறியதாக யார் கண்ணிற்கும் படாத அளவிற்கு இருந்தால் போதும். அதை வாங்கி கையில் வைத்துக் கொண்டு மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். எந்த கிழமை வேண்டுமானாலும் கருங்காலி கட்டையை வாங்கலாம். கருங்காலிக் கட்டை கிடைக்காதவர்கள் வெள்ளெருக்கு கட்டையை கூட வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

தங்களுடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து வாங்கி வர வேண்டும். பிறகு அதை மஞ்சள் தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டில் தீபம் ஏற்றி இந்த கட்டையை கையில் வைத்துக் கொண்டு “ஓம் வஜ்ரகாய நமஹ” என்னும் மந்திரத்தை 16 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த கட்டையை அவர்களுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம் அல்லது பர்சில் வைத்துக் கொள்ளலாம். இப்படி வைத்துக்கொண்டு வெளியில் கிளம்பும் பொழுது அவர்கள் எந்த காரியத்திற்காக கிளம்புகிறார்களோ அந்த காரியம் வெற்றி அடையும். அவர்களிடம் எந்த விதமான தீய சக்திகளும், எதிர்மறை ஆற்றல்களும் அண்டாது.

இதே போல் பெண்கள் தங்கள் கையில் விரலி மஞ்சளை வைத்துக்கொண்டு இதே மந்திரத்தை 16 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு வெளியில் செல்லும் பொழுது அந்த விரலி மஞ்சள் தங்களுடன் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். திரும்ப வீட்டுக்கு வந்த பிறகு இந்த பொருளை மஞ்சள் தண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு சந்தனம் குங்குமம் வைத்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் கிளம்பும்போது அதேபோல் 16 முறை மந்திரத்தை ஜெபித்து விட்டு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நடக்க மார்கழி தீபம்

இந்த அற்புதமான தாந்திரீக முறையில் முழு நம்பிக்கை வைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து வெற்றிக்கு மேல் வெற்றி  அடையலாம்.

- Advertisement -