பீரோவுக்கு அடியில் இந்த 2 பொருட்கள் இருந்தால், பீரோவுக்குள் இருக்கும் பணம் வீண்விரயம் ஆகாது. பண வசதி பல மடங்கு பெருகும்.

bero-lakshmi
- Advertisement -

சில குடும்பங்களில் வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஏதாவது ஒரு வகையில் வருமானம் வந்து கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு வீட்டு வாடகை, வரும் கடை வாடகை வரும், செய்யக்கூடிய தொழிலில் கைநிறைய லாபமும் கிடைக்கும். இவ்வளவு வருமானம் வந்தாலும், அந்த வருமானம் ஆனது சேமிப்பில் தாங்காது. வரக்கூடிய வருமானம் இரட்டிப்பாக வீண் விரைய செலவு ஆகும். உதாரணத்திற்கு மருத்துவ செலவு, தேவையில்லாத எதிர்பாராத விரைய செலவு என்று பணத்தை தண்ணீர் போல செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

ஒரு சில பேருக்கு இப்படி அதிகப்படியான வருமானம் எல்லாம் இருக்காது. சம்பாதித்தால் தான் சாப்பாடு என்ற நிலைமை இருக்கும். வயிற்றை கட்டி வாயைக் கட்டி, அந்த செலவை குறைத்து, இந்த செலவை குறைத்து, ஒரு ஆயிரம் ரூபாய் சேமித்து வைப்பாங்க. ஆனால், அந்த ஆயிரம் ரூபாயை செலவு செய்வதற்கு திடீரென ஒரு மருத்துவ செலவு வந்து நிற்கும். இப்படி வரக்கூடிய வீண் விரைய செலவுகளை தடுப்பதற்கு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருக்கும் அத்தனை கண் திருஷ்டியையும், எதிர்மறை ஆற்றலையும் ஈர்ப்பதற்கு பீரோவுக்கு அடியில் எந்த இரண்டு பொருட்களை வைக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிமையான பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

விரைய செலவை குறைக்க பீரோவுக்கு அடியில் வைக்க வேண்டிய 2 பொருள்:
கண் திருஷ்டியை நீக்க கஷ்டங்களைப் போக்க, வீண் செலவை குறைக்க பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் இரண்டு. அது எந்தெந்த பொருள் தெரியுமா. கல் உப்பு, எலுமிச்சம் பழம். எந்த பரிகாரம் செய்தாலும் அதில் கல்லுப்பு தானா, என்று சில பேர் நினைக்கலாம். நெகட்டிவிட்டியை அடியோடு அழிக்கக்கூடிய சக்தி கல்லுப்புக்கு உண்டு. எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக் கொண்டு, நீங்கள் மனதில் என்ன நினைத்தாலும் அதை நமக்கு நடத்தி தரும் சக்தி ராஜகனியான இந்த எலுமிச்சம் பழத்திற்கு உண்டு. ஆகவே இந்த இரண்டு பொருட்களையும் குறைவாக எடை போட வேண்டாம்.

ஒரு சிறிய கிண்ணத்தில் நிரம்ப உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.  ஒரு எலுமிச்சம் பழத்தை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உங்களுடைய வேண்டுதலை குலதெய்வத்திடம் சொல்லுங்கள். பீரோவில் வைத்த படம் வீண் செலவு ஆகக்கூடாது. சேமிப்பில் தங்க வேண்டும். அந்த பணத்தில் கண் திருஷ்டி ஏதாவது இருந்தால் கூட அது நீங்கி விட வேண்டும். பணத்திற்கு பாதுகாப்பாக எலுமிச்சம்பழம் இருக்கட்டும் என்று சொல்லியே வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்படியாக வேண்டிக்கொண்டு, அந்த எலுமிச்சம் பழத்தை கல் உப்பின் மேல் வைத்து விடுங்கள். இப்போது தயார் செய்த இந்த கிண்ணத்தை அப்படியே பீரோவுக்கு அடியில் வைத்து விடுங்கள். பீரோ நிற்கும் இரண்டு கால்கள் இருக்கும். அதற்கு இடையே கொஞ்சம் கேப் இருக்கும் அல்லவா. அதன் உள்ளே கையை விட்டு இந்த கிண்ணத்தை உள்ளே தள்ளி வைத்து விடுங்கள். தரையிலேயே இந்த கிண்ணத்தை வைக்கலாம்.

இப்படி ஒரு பரிகாரத்தை செய்தீர்கள் என்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியவே கூடாது. பீரோவுக்குள் இருக்கும் அந்த கிண்ணம் அப்படியே இருக்கட்டும். இந்த வாரம் இந்த பரிகாரத்தை செய்தால் 7 நாட்கள் கழித்து அந்த பீரோவுக்கு கீழே இருக்கும் கல் உப்பையும் எலுமிச்சம் பழத்தையும் வெளியே எடுத்து, கல் உப்பை தண்ணீரில் கரைத்து, மண்பாங்கான இடத்தில் ஊற்றி விட வேண்டும். அப்படி இல்லை என்றால் சிங்கில் கொட்டி விடுங்கள். எலுமிச்சம் பழத்தை கால் படாத இடத்தில் செடி கொடிகள் கீழே போட்டு விடுங்கள். உங்களுடைய வீட்டின் அருகில் ஓடும் தண்ணீர் இருந்தால் அங்கே கொண்டு போய் இந்த இரண்டு பொருட்களையும் விட்டுவிட்டு வரலாம். அது உங்களுடைய சௌகரியம்.

இதையும் படிக்கலாமே: ஒடி ஒடி சம்பாதித்தாலும் ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியவில்லையா? ஒரே ஒரு கைப்பிடி பருப்பை மட்டும் இப்படி பயன்படுத்துங்கள் போதும். வீண் விரயங்களை தடுத்து சேமிப்பை அதிகரிக்க செய்யும் தாந்தீரக பரிகாரம்.

புதியதாக வாங்கிய கல் உப்பை, சமையலுக்கு பயன்படுத்தாத கல் உப்பை பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். இந்த பரிகாரத்திற்காகவே ஒரு புது கல் உப்பு பாக்கெட்டை வாங்கி பூஜையில் வைத்துக் கொள்ளுங்கள். கரும்புள்ளிகள் இல்லாத மஞ்சள் நிற எலுமிச்சம் பழத்தை பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பீரோவுக்குள் இருக்கும் பணம் உங்கள் வீட்டில் தங்கம். வருமானம் அதிகரிக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். சேமிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -