ஒடி ஒடி சம்பாதித்தாலும் ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியவில்லையா? ஒரே ஒரு கைப்பிடி பருப்பை மட்டும் இப்படி பயன்படுத்துங்கள் போதும். வீண் விரயங்களை தடுத்து சேமிப்பை அதிகரிக்க செய்யும் தாந்தீரக பரிகாரம்.

makalashmi saving dal
- Advertisement -

சம்பாதிக்கும் பணத்தில் இருந்து தினமும் ஒரு ரூபாயாவது நம்மால் எடுத்து வைக்க முடிந்தால் அதுவே பெரிய காரியமாக இருக்கிறது. அப்படியிருக்க பணத்தை எடுத்து வைக்க முடியாமல் போவதுடன், வருமானத்திற்கு மேல் செலவுகள் ஆகி கொண்டு இருந்தாலும் அல்லது தேவையற்ற வீண் விரயங்கள் ஆகி கொண்டிருந்தாலும் நம்மால் சேமிக்க முடியாததோடு மேலும் கடனுக்கு ஆளாகும் சூழ்நிலையும் உண்டாகும். இத்தகைய வீண் விரயங்களை தடுக்க ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ஒரு ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு பாடுபட வேண்டி இருக்கிறது என்று தினம் தினம் பணத்திற்காக ஓடி அலைபவர்களுக்கு நன்றாகவே புரியும். அப்படி சம்பாதித்த பணத்தில் வீட்டிற்காக ஏதோ ஒன்று வாங்கினாலும், குழந்தைகளுக்கு ஆசைப்பட்டதை வாங்கி கொடுத்தாலோ அது மனதிற்கு ஒரு நிறைவைத் தரும். அப்படி அல்லாமல் மருத்துவ செலவு, வட்டி கட்டுவது, சில நேரங்களில் வழக்குகளில் சிக்கிக் செலவு ஆவது இவையெல்லாம் தேவையில்லாத செலவு தான். ஒரு செலவை செய்யும் போது இது தேவையில்லாதது என்று நாம் வருந்தும் படியான செலவு அனைத்துமே வீண் விரயத்தை தான் குறிக்கும். அப்படியானவற்றை யெல்லாம் தடுத்து பணத்தை கையில் தங்க வைக்கும் ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க
இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு சிறிய சிகப்பு நிற துண்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு சமையலுக்கு பயன்படுத்தும் மைசூர் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இது இளம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இந்த இரண்டு பொருளையும் வைத்து தான் இப்போது இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

சிகப்பு நிற துணியில் அந்த மைசூர் பருப்பை ஒரு கைப்பிடி அளவு மட்டும் எடுத்து வைத்து ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை வைத்து வீட்டில் உள்ள அனைவரையும் அமர செய்து உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கிளாக் வயசில் சுற்றி போட வேண்டும். இப்படி 11 முறை சுற்ற வேண்டும். ஆன்ட்டி கிளாக் வைசில் சுற்றக் கூடாது என்பது கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த முறையில் வீட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக அமர வைத்தும் சுற்றி போடலாம். அப்படி இல்லையென்றால் தனித் தனியாகவும் சுற்றி போடலாம். இதை சுற்றிய பிறகு வீட்டின் மூலையில் வைத்து விடுங்கள். இப்படி சுற்றி போடுவதை மாலை 6:00 மணிக்கு மேல் செய்தால் மிகவும் நல்லது. ஏனென்றால் எப்பொழுதும் எதிர்மறை ஆற்றலை நீக்க செய்யப்படும் இந்த திருஷ்டி கழித்தல் முறையை விளக்கு வைத்த பின் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை எந்த நாளில் வேண்டுமாலும் செய்யலாம்.

வீட்டில் உள்ள அனைவருக்கும் சுற்றி முடித்த பிறகு இந்த பருப்பு முடிச்சை ஓடும் தண்ணீரில் விட்டு விட வேண்டும். இதை நம் வீட்டின் சிங்கில் கொட்டி சுத்தப்படுத்தக் கூடாது. இதை ஓடும் நீரில் தான் விட வேண்டும். நீங்கள் சுற்றிய உடனே கொண்டு சென்று போட முடியவில்லை என்றாலும் சுற்றிய இந்த முடிச்சை வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் நீங்கள் வெளியில் செல்லும் போது கூட போட்டு விடலாம்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருந்து புறப்படும் போது இவையெல்லாம் உங்கள் கண்ணில் தென்பட்டால், நீங்கள் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றியை தரும்.

இதுவும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய திருஷ்டி கழித்தல் முறை போன்றதொரு தாந்திரீக பரிகாரம் தான். எப்போதுமே திருஷ்டி கழித்தல் என்பது நம்முடைய எதிர்மறை ஆற்றல், கண்திருஷ்டி, தீய சக்திகள் அனைத்தையும் நம்மில் இருந்து எடுத்து வெளியேற்றி விடும். வீண் விரயங்கள் ஆகாமல் இருந்தாலே நம்மிடம் பணம் தாராளமாக புழங்கும். இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் அத்தகைய வீண் விரயங்களை தடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உடையவர்கள் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -