பீரோவில் இந்த 1 பொருள் மட்டும் இருந்தால், உங்கள் வீட்டில் பணம் காசு இல்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. கட்டு கட்டாக பணம் பீரோவில் கொட்டும்.

bero-lakshmi
- Advertisement -

வீட்டில் வாங்கி வைத்திருக்கக் கூடிய தங்க நகை அடமானத்துக்கு போகக்கூடாது. கையில் சேமித்து வைத்திருக்கும் பணம் காசு அளவோடு தான் செலவாக வேண்டும். அப்படியே செலவாகினாலும் அதற்கு இரண்டு மடங்காக சம்பாதித்து சேமிப்பில் மீண்டும் வைக்க வேண்டும். இவை எல்லாம் சாத்தியமாக வேண்டும் என்றால் கட்டாயமாக விடாமுயற்சி தேவை. உடல் உழைப்போடு விடாமல் வேலை செய்து கொண்டே இருந்தால்தான், நமக்கு காசு பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். சேமித்து வைத்து இருக்கக்கூடிய இருப்பு குறையாது. சில பேர் ஸ்மார்ட் ஆக ஒர்க் பண்ணுவாங்க. அதாவது கொஞ்ச நேரம் வேலை செய்தால் லட்சக்கணத்தில் சம்பாத்தியம் கிடைக்கும்.

சில பேர் 24 மணி நேரம் உழைத்தாலும் கூட ஆயிர கணக்கில் தான் சம்பாதிப்பார்கள். இது அவரவருடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப கடவுள் கொடுத்த வரம். நம்முடைய தகுதிக்கு நம்மால் என்ன சம்பாதிக்க முடியும். நம்மால் எதை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். அப்போது நிச்சயமாக நம் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் தங்கும். வீட்டில் இருக்கும் பொன் பொருள் எல்லாம் நம் வீட்டை விட்டு போகாது. இதுதாங்க முதல் விஷயம். இதை நினைவில் வைத்துக் கொண்டு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

பணம் சேர பீரோவில் வைக்க வேண்டிய பொருள்:
மேல் சொன்ன விஷயங்களை கடைப்பிடித்து பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை செய்பவர்களுக்கு பீரோவில் நிறைய பணம் காசு தங்கும். அப்படி ஒரு ஆன்மீகம் சார்ந்த குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். பொதுவாகவே எல்லோர் வீட்டிலும் பீரோவில் பணம் வைப்போம் அல்லவா. பீரோ, இரும்பு பீரோ, சாவி இரும்பு, நீங்கள் மரக்கட்டையில் பீரோவை வாங்கி வைத்தாலும் அது லாக்கர் கட்டாயமாக இரும்பில் தான் செய்யப்பட்டு இருக்கும். அதற்கு உண்டான சாவியும் இப்போது இரும்பில் தான் கொடுக்கப்படுகிறது.

அந்த இரும்பை தொட்டபடி எப்போதுமே ஒரு வெள்ளி உலோகம் இருக்க வேண்டும். அதாவது சாவியில் வெள்ளி கீ செயின், பீரோவுக்குள் வெள்ளி உலோகம் சார்ந்த நாணயம், வெள்ளி கிண்ணம், வெள்ளி டம்ளர், ஏதாவது ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். சில பேர் பீரோ இல்லாமல், லாக்கர் என்று தனியாக ஒன்று தனியாக வைத்திருப்பார்கள். அந்த லாக்கர் வீட்டுக்கு உள்ளேயே இருக்கும். அந்த லாக்கருக்குள் வெள்ளி, தங்க பொருட்களை பத்திரப்படுத்தி விடுவார்கள். இருந்தாலும் ஒரு சின்ன வெள்ளி நாணயத்தை யாவது எடுத்து பணம் வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டும்

- Advertisement -

பணம் வைக்கக்கூடிய இடத்திலும் சரி தங்கம் வைக்கக்கூடிய இடத்திலும் சரி, சிறிதளவு வெள்ளி நாணயம் இருக்கும் போது நமக்கு சுக்கிர பகவானின் அனுகிரகம் முழுமையாக கிடைக்க பெற்று செல்வ வளம் அதிகரிக்கும். சுக்கிர பகவானுக்கு உரிய ஒரு உலோகம் தான் வெள்ளி. ஆகவே இந்த வெள்ளி பொருளை தவறாமல் இரும்பு பீரோவிலும் வையுங்கள். மரப்பட்டியில் செய்த பீரோவிலும் வையுங்கள். பணம் மேலும் மேலும் சேருவதை நிச்சயமாக உணருவீர்கள்.

இதையும் படிக்கலாமே: வைகுண்ட ஏகாதேசி அன்று தப்பி தவறியும் கூட இந்த 1 பொருளை சாப்பிடவே கூடாது. நம் குடும்பத்திற்கு மகா பாவம் வந்து சேர்ந்துவிடும்.

அதே சமயம் வீட்டில் இருக்கும் செல்வ வளம் நம் வீட்டை விட்டு செல்லாமல் நம்மோடு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -