மழை தண்ணீரை வைத்து, பண மழையை பொழிய வைக்கும் குபேரர் பரிகாரம்.

gubera
- Advertisement -

வீட்டில் பண மழை பொழிந்தால் யாராவது வேண்டாம் என்று சொல்லுவீர்களா. நிச்சயம் சொல்ல மாட்டீர்கள். அப்போது மழை பெய்யும் போது நீங்கள் மறக்காமல் இந்த ஒரு விஷயத்தை செய்திடுங்கள். இதை செய்தால் குபேரர் உங்களுக்கு கோடி கோடியாக பணத்தை வாரி கொட்டிக் கொடுப்பார். மழை பெய்யும் போது செய்ய வேண்டிய பரிகாரம் என்ன தெரிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

மழை பெய்யும் போது மழை தண்ணீரை நீங்கள் சுத்தமான பாத்திரத்தில் சேமிக்க வேண்டும். பைப்பிலிருந்து மொட்டை மாடியில் ஊற்றும் தண்ணீரையெல்லாம் சேகரிக்க கூடாது. நேரடியாக வானத்திலிருந்து விழும் மழை தண்ணீரை சேகரித்து ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும். இது அவ்வளவு எளிதில் கெட்டுப் போகாது. தண்ணீரை திறந்து மட்டும் வைக்கக்கூடாது. மூடி ஸ்டோர்ஸ் செஞ்சுக்கோங்க.

- Advertisement -

குபேரர் பரிகாரம்

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீடு பூஜை செய்ய சுத்தபத்தமாகத்தான் இருக்கும். அப்போது ஒரு சின்ன கிண்ணத்தில் கொஞ்சம் கோமியம், கொஞ்சமாக இந்த மழை தண்ணீர், கொஞ்சமாக மஞ்சள் தூள், கொஞ்சமாக பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை வீடு முழுவதும் மூளை முடுக்குகளில் நன்றாக தெளித்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருப்பவர்களுடைய தலையிலும் இந்த தண்ணீரை தெளிக்கலாம்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் செய்து வந்தால் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி, வீட்டில் பண மழை பொழியும் என்பது நம்பிக்கை. பெருசாக இந்த பரிகாரத்திற்கு நாம் எந்த காசு பணமும் செலவு செய்யப்போவது கிடையாது. மழை நீரை சேகரிக்க போகின்றோம். அவ்வளவுதான். அந்த ஒரு வேலையை செய்து விட்டால் போதும் உங்களுடைய வீட்டில் பண மழை பொழிவது நிச்சயம்.

- Advertisement -

நம்பிக்கையோடு இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். மூன்று வெள்ளிக்கிழமைகள் இதை செய்யும் போது உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டத்தில் நல்ல மாறுதல்கள் தெரியும். பரிகாரத்தை மட்டும் செய்தால் பலன் கிடைக்காது. நீங்கள் உழைப்பையும் முதலீடாக போட வேண்டும். மந்திரத்தால் மாங்காய் காய்க்க வைக்க முடியாது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் சனியின் ஆதிக்கம்மா? குருவின் யோகமா என்பதை முடிவு செய்வது உங்களின் இந்த செயல் தான் தெரியும்மா?

பரிகாரங்கள் உங்களுடைய கஷ்டகாலத்திற்கு நல்லதொரு வழியை காட்டிக் கொடுக்கும். அந்த வழியில் சென்று நீங்கள் பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம். அந்த வழியில் சென்று நீங்கள் பல பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம். பரிகாரத்தை செய்து விட்டால் கூரை பிச்சைக்குட்டு எந்நாளும் பணம் கொட்டாது. உங்கள் முயற்சியின் மூலமே வாழ்க்கையில் வெற்றி காண முடியும் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -