வெறும் 2 நிமிடத்தில் கோல்டன் பேஷியல் செய்தது போல உங்களுடைய முகம் பளபளன்னு ஜொலிக்க வேண்டுமா? மலிவான இந்த டிப்ஸை யாரும் மிஸ் பண்ணாதீங்க.

face11
- Advertisement -

பியூட்டி பார்லர் சென்று முகத்திற்கு கோல்டன் பேஷியல் செய்து கொள்ள வேண்டும் என்றால் கட்டாயம் ஆயிரக்கணக்கில் செலவாகும். அதையே நம்முடைய வீட்டில் மிக மிக சுலபமான முறையில் செய்து கொள்ளலாம். சூப்பரான தங்கம் போல பளபளப்பை பெற வீட்டிலேயே ஒரு ஜெல் தயார் செய்வது எப்படி. இதோடு முகத்தை பொலிவாகக் கூடிய இன்னொரு வித்தியாசமான குறிப்பையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். மலிவான இந்த இரண்டு குறிப்பையும் யாரும் மிஸ் பண்ணாதீங்க. செலவில்லாம அழகைப் பெற உங்களுக்கு ஆசையா இருந்தா குறிப்பை தொடர்ந்து படியுங்கள்.

முதலில் தங்கம் போல முகம் பளபளக்க ஒரு சின்ன குறிப்பு. ஒரு சிறிய பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரோஸ் வாட்டர் 2 டேபிள் ஸ்பூன், விட்டமின் E கேப்ஸ்யூல் 2 உள்ளே இருக்கும் ஜல்லை மட்டும் போட்டுக்கோங்க. கஸ்தூரி மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், காபித்தூள் 1/4 ஸ்பூன், அலோவேரா ஜெல் 3 டேபிள் ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் ஒரு ஸ்பூனை வைத்து அடித்து கலக்கினால் சூப்பரான கோல்டன் கலர் ஜெல் நமக்கு கிடைத்திருக்கும். (காபித்தூள் நிறைய போடக்கூடாது இந்த கிரீமை நாம் தயார் செய்யும் போது இது கோல்டன், மஞ்சள் நிறத்தில் தான் இருக்க வேண்டும்.)

- Advertisement -

இதை காற்று போகாத ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி அப்படியே பிரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்கள் கெட்டுப் போகாது. இந்த ஜெல்லை காலை மாலை இரண்டு வேளை பயன்படுத்தலாம். லேசாக இந்த ஜெல்லை தொட்டு உங்களுடைய முகத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன புள்ளிகள் போல வைத்து அப்படியே வட்ட வடிவில் மசாஜ் செய்து விட்டு விடுங்கள்.

முகம் 2 நிமிடத்தில் இந்த ஜெல்லை உறிஞ்சிக்கொள்ளும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து முகத்தை வெறும் தண்ணீரில் கழுவிக்கொள்ளலாம். இரவு இந்த ஜெல்லை முகத்தில் அப்ளை செய்துவிட்டு அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை முகம் கழுவினால் போதும். காலை முகத்தில் இந்த ஜெல்லை போல நேரமில்லை என்றால், இரவு மட்டும் பயன்படுத்தினாலும் சரிதான். தொடர்ந்து இந்த ஜெல்லை முகத்தில் போட்டு வர முகம் தங்கம் போல பளபளப்பாக மாறிவிடும்.

- Advertisement -

அடுத்து முகத்தை வெள்ளையாக்க முகத்தின் பொலிவை அதிகரிக்க இந்த குறிப்பையும் முயற்சி செய்து பார்க்கலாம். கருப்பு திராட்சை 7 லிருந்து 8 எடுத்து தோலை உரித்து கொள்ளுங்கள். உள்ளே இருக்கும் திராட்சை பழத்தை மட்டும் ஒரு ஸ்பூனை வைத்து நசுக்கியோ அல்லது கையால் கரைத்தோ சாறை பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் இருக்கும் கொட்டையையும் நீக்கிவிடுங்கள். ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எடுத்துக் கொண்டால் கூட சரிதான்.

இதையும் படிக்கலாமே: கண்ணை மூடி திறக்கும் நேரத்தில், முகத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்க 1 தக்காளி பழம் இருந்தால் போதும்.

இந்த கருப்பு திராட்சை சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை ஊற்றி நன்றாக அடித்து கலந்து இதை அப்படியே முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்வீர்கள் என்றால் முகம் உடனடியாக பொலிவு பெறும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதே போல செய்து வாருங்கள். கருப்பு திராட்சை எப்போதெல்லாம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் செய்தாலும் தவறு கிடையாது. சூப்பரா அழகா மாறிடுவீங்க. இரண்டையும் ஒன்றாக முயற்சி செய்ய வேண்டாம். மூன்று மாதம் ஒரு குறிப்பை பின்பற்றி விட்டு, அடுத்த மூன்று மாதம் இன்னொரு குறிப்பை பின்பற்றலாம். மேலே சொன்ன குறிப்புகள் உங்களுக்கு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -