கண்ணை மூடி திறக்கும் நேரத்தில், முகத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்க 1 தக்காளி பழம் இருந்தால் போதும்.

- Advertisement -

தக்காளிப் பழம் சரும நிறத்தை வெள்ளையாக்கும் என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். அந்த தக்காளி பழத்தை வைத்து மிக மிக சுலபமான பவர்ஃபுல்லான ஒரு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தக்காளி பழத்தில் வீட்டில் இருந்தபடியே சீரம் தயாரிக்க போகும் குறிப்பு இது. செலவில்லாமல் கண்ணை மூடி திறக்கும் நேரத்தில் முகப்பொலிவை பெற இந்த குறிப்பு ஒன்று போதும். வாங்க நேரத்தை கடத்தாமல் ரெமிடியை பார்க்கலாம்.

கொஞ்சம் பெரியதாக இருக்கும் ஒரு தக்காளி பழத்தை எடுத்துக்கோங்க. பழுத்த தக்காளி பழமாக இருக்கட்டும். அதை பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். 1/4 லிட்டர் அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வையுங்க. வெட்டிய தக்காளி பழங்களை தண்ணீரில் போட்டு அப்படியே கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும் போது தக்காளி பழத்தின் சாறு அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி நிறம் மாறி வரும்.

- Advertisement -

அடுப்பை அணைத்து விட்டு, நன்றாக ஆரவிட்டு இதை வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். (தக்காளி பழத்தை தண்ணீரில் அப்படியே குழைய வைக்காதீங்க. தக்காளி பழத்தின் சாறு தண்ணீரில் இறங்கியவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். பத்து நிமிடங்கள் தண்ணீர் கொதித்தால் போதும்.)

வடிகட்டி வைத்திருக்கும் இந்த தண்ணீரோடு கொஞ்சமாக ரோஸ் வாட்டர், கொஞ்சமாக அலோவேரா ஜெல் ஊற்றி, நன்றாக கலக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். ஏழு நாள் கெட்டுப் போகாது. முகத்தை சுத்தமாக கழுவி விட்டு, ஈரத்தை துடைத்தெடுத்த பின்பு இந்த ஸ்ப்ரேவை முகத்தில் எல்லா இடங்களிலும் படும்படி, அடித்துக் கொள்ளுங்கள். கண்களை மூடி ஸ்ப்ரேவை அடிப்பீங்க. கண்கள் திறந்து பார்க்கும் போது உங்களுடைய முகம் பளபளப்பாக இருக்கும்.

- Advertisement -

ஆனால் ஒரே நாளில் இந்த ரிசல்ட் தெரியாது. தொடர்ந்து ஒரு மாதம் இந்த ஸ்ப்ரேவை உங்கள் முகத்தில் அடித்து வாருங்கள். ஒரு மாதம் கழித்து இந்த ஸ்ப்ரேவை அடித்து விட்டு, கண்களை மூடி திறந்து பாருங்கள். உங்கள் பொலிவை உங்களாலேயே நம்ப முடியாது அந்த அளவிற்கு அழகாக மாறி இருப்பீங்க.

தினமும் இந்த ஸ்பிரேவை முகம் கழுவிய பின்பு முகத்திற்கு பயன்படுத்தலாம். பக்கவிளைவுகள் எதுவுமே ஏற்படாது. இரவு தூங்க செல்வதற்கு முன்பு கூட முகத்தில் இப்படி ஸ்ப்ரே செய்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவாமல் அப்படியே உறங்கச் செல்லலாம். உங்களுக்கு இந்த எளிமையான குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: வெயிலில் கறுத்த உங்கள் முகத்தை சட்னு பளிச்ன்னு மாத்தனுமா இப்படி ட்ரை பண்ணுங்களேன்.

அதேபோல முகத்தை கழுவி விட்டு துண்டை வைத்து அழுத்தம் கொடுத்து கீழ்நோக்கியப்படி எப்போதுமே துடைக்க கூடாது. அது உங்களுடைய சருமத்தை பாதித்துவிடும். முகத்தை தொலைத்த பின்பு துண்டை வைத்து ஈரத்தை ஒற்றி தான் எடுக்க வேண்டும். தினமும் துண்டை வைத்து முகத்தை அழுத்தி கீழ்ப்பக்கமாக துடைத்தால் சருமம் சீக்கிரமே வயதான தோற்றத்தை பெறும் என்ற இந்த ஒரு குறிப்போடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -