பெரியவங்க கையால ஆசீர்வாதம் பண்ணி கொடுக்கிற காசை நீங்க என்ன செய்வீங்க? அந்தக் காசை இப்படி மட்டும் செலவழிக்கக் கூடாது. வீட்டிற்கு தீராத கஷ்டத்தைக் கொடுத்து விடும்.

money
- Advertisement -

பொதுவாகவே, பெரியவர்களின் கையால் ஆசீர்வாதமாக பெற்ற எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை நாம் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த வரிசையில் நல்ல விசேஷங்களுக்கு உங்களை ஆசிர்வாதம் செய்து உங்களுக்காக, உங்கள் வீட்டுப் பெரியவர்கள் கொடுத்த பணத்தை என்ன செய்யக் கூடாது என்பதை பற்றியும், அந்த பணத்தை எப்படி பத்திரப்படுத்தி வைத்து, எந்த பொருட்களை வீட்டில் வாங்கி வைத்தால் நமக்கு அதிஷ்டம் கிடைக்கும் என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

blessings aasirvadham

இந்த பதிவை பார்ப்பதற்கு முன்பாக, இந்த பரிகாரத்தின் மூலம் நமக்கு கிடைக்கக்கூடிய பலன் என்ன என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வதில் தவறு கிடையாது. பொதுவாகவே பெரியோர்கள் என்றால், அவர்கள் சனி பகவானின் அம்சம் கொண்டவர்கள் என்று சொல்லுவார்கள். சனிபகவானால் உங்களுக்கு வாழ்க்கையில் தொழில் முடக்கம், பணம் முடக்கம் இருந்தால் அதை சரி செய்வதற்கு இந்த பரிகாரம் கைகொடுக்கும்.

- Advertisement -

பிறந்த நாள், திருமண நாள், தீபாவளி பொங்கல் இப்படி வரக் கூடிய விசேஷ தினங்களில் நிச்சயமாக ஆசீர்வாதம் செய்யப்பட்ட, உங்கள் கைக்கு வரக்கூடிய 10 ரூபாயாக இருந்தாலும் அந்த பணத்தை வைத்து, நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். முதலில் ஆசீர்வாதம் செய்து உங்களுக்கு தரக்கூடிய பணத்தை சேகரித்து வைக்க ஒரு பிளாஸ்டிக் டப்பாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

blessings

ஆசீர்வாதமாக பெறக்கூடிய எல்லா பணத்தையும் அந்த டப்பாவில் சேகரித்து வைக்கும் பழக்கம் உங்களுக்கு வரவேண்டும். அதன்பின்பு வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில், சுக்கிர ஹோரை வரும்போது, இந்த பரிகாரத்தை செய்வது மேலும் சிறப்பானது. வெள்ளிக்கிழமை ஒரே ஒரு வெற்றிலையை வாங்கி அதன் மேலே நெய்யை தடவி வெற்றிலையைச் சுருட்டி, நூல் போட்டு கட்டி, பணம் சேகரித்து வைத்திருக்கும் டப்பாவில் போட்டு விடுங்கள். அவ்வளவு தான். மறுநாள் காலை அந்த வெற்றிலையை எடுத்து கால் படாத இடத்தில் அல்லது பசுமாட்டிற்கு கொடுத்து விடலாம். வெற்றிலையை அதே டப்பாவில் மட்டும் வாட விட்டுவிடாதீர்கள்.

- Advertisement -

சனி பகவானின் அம்சம் பொருந்திய பெரியவர்கள் கையிலிருந்து பணத்தை பெற்று, சுக்கிர ஓரையில் வெற்றிலையை வைத்து, பரிகாரத்தை செய்வதன் மூலம் சனியும் சுக்கிர பகவானும் இணைவதன் மூலம், நமக்கு அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கு, பணக்கஷ்டம் தீர்வதற்கும் நிறையவே வாய்ப்பு உள்ளது.

vetrilai-kodi

அது மட்டும் இல்லாமல் பெரியவர்கள் கையில் இருந்த ஆசீர்வாதமாக பெற்ற பணத்தை உடனடியாக நாம் வேறு ஏதாவது செலவுக்காக பயன்படுத்தி விட்டோமே ஆனால், நம் கையில் இருக்கும் சேமிப்பு, வீண் விரயம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த பணத்தை சேமித்து வைத்து உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்கள் வாங்கலாம். அப்படி இல்லை என்றால், உங்கள் வீட்டில் பூஜைக்கு தேவையான வெள்ளி பாத்திரங்களை வாங்குவது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.

- Advertisement -

ghee

பெரியவர்களிடமிருந்து ஆசீர்வாதமாக பெற்ற பணத்தை உங்கள் கையாலேயே, உங்களுடைய கடனை அடைப்பதற்காக, அடுத்தவர்களிடம் அந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்து விடாதீர்கள். உங்களுக்காக கொடுக்கப்பட்ட ஆசீர்வாதத்தை, நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுத்தது போல ஆகிவிடும். அதாவது, உங்களுடைய அதிர்ஷ்டம் உங்களை விட்டுப் போவதற்கு இதுவும் ஒரு காரணம் தான். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றினால் உங்களின் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு ஏதாவது ஒரு வழியில் நிச்சயமாக விடிவுகாலம் கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
பணமே உங்களிடம் வந்து, பாசமாக தங்கிக் கொள்ளும். உங்களை விட்டுப் பிரிய, அந்த பணத்திற்கே மனம் இருக்காது. இந்த 1 வார்த்தையை மட்டும் நீங்கள் சொல்லிக் கொண்டே இருந்தா!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -