நாளை போகி பண்டிகையில் வீட்டில் இதை கட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இந்த 2 பொருளை சேர்த்து வாசலில் கட்டி வைத்தால் எந்த துஷ்ட சக்தியும் உங்களை நெருங்காது!

mavilai-kappu
- Advertisement -

தமிழர்களுடைய பாரம்பரிய திருவிழாவாக நான்கு நாட்களுக்கு வரிசைகட்டி கொண்டாடப்படும் ஒரு மாபெரும் பண்டிகை பொங்கல் திருவிழாவாகும். மார்கழி மாதம் கடைசி நாளாக போகிப் பண்டிகையில் ஆரம்பித்து, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று வரிசையாக நான்கு நாட்களுக்கு ஊரே கோலாகலமாக காட்சி அளிக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்து காணப்படும். போகி பண்டிகையின் பொழுது ‘காப்பு கட்டுதல்’ என்கிற ஒரு விஷயமும் நடைபெறும். காப்பு கட்ட முடியாதவர்கள் உங்களுடைய வீட்டில் என்ன செய்யலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

bogi-kappu

பழங்காலத்தில் விவசாயத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. விவசாயம் ஒன்று தான் அதிகமாக மக்கள் பார்த்து வந்த தொழிலாகவும் இருந்தது. விவசாயத்தை நம்பி மட்டுமே அனைவரும் வருடம் முழுவதும் காத்துக் கொண்டிருப்பார்கள். தை மாதம் அறுவடை செய்த பின்னர் தான் அவர்களிடத்தில் பணப்புழக்கமும் அதிகமாக இருக்கும்.

- Advertisement -

அந்த வருமானத்தை வைத்து தான் வீட்டை புதுப்பிப்பது, சுப காரியங்கள் செய்வது என்று தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொள்வார்கள். இதனால் தான் போகி பண்டிகை அன்று வீடு முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. அந்தக் காலத்தில் கூரை மற்றும் பனை ஓலை வீடுகள் தான் அதிகம் இருக்கும். பழைய கூரைகளையும், ஓலைகளையும் எரிப்பதற்கு போகி பண்டிகையை பயன்படுத்திக் கொண்டார்கள். போகி பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்வதால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற காப்பு கட்டுதல் என்ற வழிமுறையை கடைபிடித்தார்கள்.

bogi-kappu1

காப்பு கட்டுதல் என்பது வேப்பிலை, சிறுபீளை, கருந்துளசி, தும்பை இலை, ஆவாரம்பூ ஆகிய ஐந்து மூலிகை பொருட்களைக் கொண்டு ஒன்றாக சேர்த்து கட்டி காப்பாக வீடுகளின் கூரையில் சொருகி வைப்பார்கள். இப்படி வீட்டில் சொறுகி வைப்பதால் வீட்டிற்குள் எந்த ஒரு பூச்சிகளும் வராது. மேலும் இவைகள் தெய்வீக மூலிகை என்பதால் எந்த ஒரு துஷ்ட சக்தியும் வீட்டிற்குள் நுழைய முடியாது.

- Advertisement -

இந்த மூலிகை பொருட்கள் எல்லாம் இப்போது கிடைக்குமா? என்பது தெரியவில்லை. கிடைத்தால் நிச்சயம் வாங்கி உங்களுடைய வீட்டில் நாளை போகி அன்று சொருகி வைத்து விடுங்கள். பொங்கல் விழாக்கள் முடிந்த பிறகு அதனை அப்புறப்படுத்தி விடலாம். விழாக்காலங்களில் நோய்வாய்ப்படுவதும், வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படுத்துவதும் உங்கள் கிரகங்களின் அடிப்படையில் நடக்கும் விஷயங்கள் தான்.

பண்டிகையின் பொழுது குடும்பத்தில் எந்த விதமான குழப்பங்களும் இல்லாமல் மன நிம்மதியுடன் இருக்க, வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வலைகள் வெளியேற வேண்டும். இதனால் இந்த அற்புத மூலிகைகள் கிடைக்காமல் இருந்தாலும், நம் பாரம்பரிய முறைப்படி மாவிலை தோரணம், வேப்ப இலைகளையும் பயன்படுத்தி அலங்கரிக்க செய்யலாம். அந்த மாவிலை மேல் பட்டு வரும் காற்றானது, வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமியின் வாசம் நிச்சயம் இருக்கும்.

- Advertisement -

Maavilai

அது போல் வேப்பிலையை தோரணமாக காட்டுவதும், சொருகி வைப்பதும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். நோய்க் கிருமிகளின் தாக்குதல்கள் இன்றி ஆரோக்கியமான முறையில் இருப்பதற்கு உதவியாக இருக்கும். வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்துக் கொண்டால் போதும்! வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் நேர்மறை அதிர்வலைகள் நிச்சயம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே
இந்த பொருளை உங்களது கெல்லாப்பெட்டியில் வெச்சாலே போதும்! வியாபாரம் ஓஹோன்னு நடக்கும். பணப்பெட்டி நிரம்பி வழியும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -