காலையில் எழுந்தவுடன் இந்த 1 மந்திரத்தை உச்சரித்து பாருங்கள். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அன்றைய நாள் நீங்கள் கையில் எடுத்த காரியம் நிச்சயம் வெற்றிதான்.

boomadevi
- Advertisement -

நேர்மறையான வார்த்தைகளை ஒன்று சேர்த்து மந்திரமாக உச்சரிக்கும் போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கின்றது. எந்த வகையான மந்திரமும் மனிதர்களின் மனதிற்குள் ஒரு நேர்மறை ஆற்றலை உருவாக்கும். உதாரணத்திற்கு மனதை அமைதியாக வைத்து தியானம் செய்யுங்கள் ‘ஓம்’ என்ற மந்திரத்தை சொல்லுங்கள். ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மந்திரத்தை சொல்லுங்கள் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லுங்கள் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அவர்கள் இதை எல்லாம் சொல்லுவதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய நேர்மறை சக்திகளை எல்லாம் ஈர்க்கக் கூடிய தன்மை இந்த வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கிறது. அதனால் தான் இந்த வார்த்தைகளை எல்லாம் நாம் வெறும் வார்த்தைகளாக சொல்லாமல், மந்திரங்களாக உச்சாடனம் செய்கின்றோம்.

அந்த வரிசையில் காலையில் எழுந்தவுடன் அமைதியாக இருக்கக்கூடிய மனதில் இந்த மந்திரத்தை சொன்னால் நம்முடைய அன்றைய தினம் உற்சாகமாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது எந்த மந்திரம், அந்த மந்திரத்திற்கு உண்டான அர்த்தம் என்ன என்பதை பற்றி ஆன்மீகம் சொல்லும் தகவலை இந்த பதிவின் மூலம் நாம் விரிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

காலையில் கண்விழித்ததும் சொல்ல வேண்டிய மந்திரம்:
ஒவ்வொருவரும் காலையில் கண்விழித்த உடன் புதியதாக பிறந்த குழந்தை போல தான் கண் விழிக்கின்றோம். கெட்டவனாக இருப்பவன் கூட தூங்கி எந்திரிக்கும் போது, மனதில் எந்த ஒரு தீய எண்ணங்களும் எழாமல் தான் கண்விழிக்கின்றான். அந்த சமயத்தில், அந்த காலைப் பொழுதில் இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரியுங்கள். இது புனித தாய் பூமாதேவிக்காக சொல்லப்பட்டுள்ள மந்திரம். காலையில் எழுந்தவுடன் உச்சரிக்க வேண்டிய மந்திரம் இதோ உங்களுக்காக.

சமுத்ரா வசனே தேவி பர்வத ஸ்தன
மண்டலே வஷ்ணு பத்னி நமஸ்துப்யம்
பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே!

- Advertisement -

பூமாதேவி தாய் தான் இந்த உலகத்தையே தாங்கி இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றாள். அப்படிப்பட்ட பூமாதேவி தாய் வசிக்கின்ற, இந்த பூலோகத்தில் நிறைய நியாயங்களும் நடக்கிறது. அநியாயங்களும் நடக்கிறது. நாம் இந்த பூமியில் சில நல்லதையும் செய்கின்றோம். பல கெடுதலையும் செய்கின்றோம். அதற்காக இந்த பூமி தாயிடம் மனதார மன்னிப்பு கேட்க போகின்றோம்.

இதையும் படிக்கலாமே: எப்பேர்ப்பட்ட எதிர்மறை ஆற்றலும் உங்களை நெருங்காமல் இருக்க வீட்டின் நிலைவாசலில் இந்த ஒரு தீபத்தை மட்டும் ஏற்றினால் போதும். இனி கெட்ட எண்ணத்துடன் கூட யாரும் உங்களை நெருங்க முடியாது.

காலையில் கண்விழித்து, கால்களை பூமா தேவியின் மீது வைப்பதற்கு முன்பு எல்லா தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்டுவிட்டு, கால்களை பூமாதேவி தாயின் தலைமீது வைப்பதற்கும் மன்னிப்பு கேட்டுவிட்டு, அந்த நாளை தொடங்கப் போகின்றோம். அதற்கான மந்திரம் தான் இது. விஷ்ணு பகவானின் மனைவியாகப்பட்ட இந்த பூமாதேவி தாய்க்காக இந்த மந்திரத்தை சமர்ப்பணம் செய்துவிட்டு, ஒரு நாள் உங்களுடைய நாளை தொடங்கி தான் பாருங்களேன். அன்றைய தினம் வாழ்க்கையில் என்னென்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை நீங்களே உணருவீர்கள். இந்த ஒரு நான்கு வரி மந்திரம் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நம்ப முடியாத நல்ல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -