ரொம்பவும் ஏழையாக இருப்பவர்கள் கூட, பிரம்ம முகூர்த்தத்தில் இந்த விளக்கை ஏற்றினால் சீக்கிரம் செல்வந்தவர்களாக மாறிவிடலாம்.

brammamuhoortham
- Advertisement -

என்னதான் நல்ல மனசு இருந்தாலும், நாலு பேர் மத்தியில் யாருக்கு மரியாதை. யார் கோடி கணக்கில் சொத்து வைத்திருக்கிறார்களோ, யாரு கட்டு கட்டாக பணத்தை வைத்திருக்கிறார்களோ, யாருக்கு காரு பங்களா, என்று சொத்து இருக்கிறதோ அவர்களுக்குத்தான் இன்று உலகத்தில் மரியாதை. இவனுக்கு ரொம்ப நல்ல மனசு, அடுத்தவர்களுக்கு கெட்டது நினைக்க மாட்டான், இவனுக்கு பொறாமை குணம் இல்லை, இவன்தான் உலகத்தில் உயர்ந்தவன், இவன் தான் செல்வந்தன் என்று யாராவது சொல்லுவாங்களா. நிச்சயம் சொல்ல மாட்டாங்க. இவனுக்கு மாத வருமானம் பத்தாயிரம் ரூபாய் தான். ஆனால், ஒரு ரூபாய் கூட கடன் இல்லை, நோய் நொடி இவனிடம் இல்லை, இவனைப் பார்த்து யாராவது செல்வந்தர்கள் என்று சொல்லுவார்களா. நிச்சயம் கிடையாது.

ஆனால் இந்த கலியுகத்தில் கூட மழை பெய்கிறது. விவசாயம் நடக்கிறது. நாம் எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்கிறது என்றால் ஏதோ ஒரு நாலு நல்லவங்க இந்த பூமியில் வாழ்வதால் தான். ஆகவே நல்லவர்களை பார்த்து என்றைக்கும் ஏளனம் செய்யாதீர்கள். வெறும் பணத்தை வைத்து மனிதர்களுக்கு மதிப்பு கொடுக்காதீர்கள். நல்ல மனிதனுடைய மனதுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்கள் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்ற வேண்டிய நெல்லிக்காய் தீப பரிகாரம்:
நெல்லிக்காய், இது மகாலட்சுமிக்கு உகந்த ஒரு கனி என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். இது காயாகவே இருந்தாலும், நெல்லிக்கனி என்ற பெயர் இதற்கு உண்டு. இந்த நெல்லிக்காய் கொண்டு நாம் ஏற்றக்கூடிய விளக்கு நமக்கு ஐஸ்வரியத்தை அள்ளிக் கொண்டு வந்து சேர்க்கும். உங்களுக்கு ரொம்பவும் பணகஷ்டம் இருக்கிறது எனும் பட்சத்தில், இந்த விளக்கை வெள்ளிக்கிழமை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையும் இந்த பூஜையை செய்யலாம். அல்லது உங்களுக்கு சௌகரியம் கிடைக்கும் போதும் மற்ற கிழமைகளில் இந்த விளக்கை ஏற்றினாலும் தவறு கிடையாது.

முன்கூட்டியே நெல்லிக்காய்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜையறையில் பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, இரண்டு நெல்லிக்காய்களை விளக்கு ஏற்ற தயார் செய்து கொள்ளுங்கள். நெல்லிக்காய்க்கு காம்பு பகுதிக்கு மேலே லேசாக கீரி எடுத்து விட வேண்டும். பஞ்சு திரியை நன்றாக நெய்யில் நனைத்து இந்த நெல்லிக்காய்க்கு மேலே வைத்து கொஞ்சமாக நெய் விட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த தீபம் சிறிது நேரம் தான் எரியும். அந்த தீபம் சுடர்விட்டு எரியக்கூடிய அந்த குறைந்த நேரத்தில் மகாலட்சுமியிடம் மனம் உருகி, உங்களுடைய பண பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை வையுங்கள். காலை 5.30 மணிக்கு முன்பாகவே இந்த பூஜையை நிறைவு செய்து விட வேண்டும். அந்த விடியல் பொழுதில் நெல்லிக்காய் தீப சுடரின் முன்பு அமர்ந்து நீங்கள் மகாலட்சுமி தாயிடம் எது கேட்டாலும் அது உடனே கிடைக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் பண பிரச்சினைகளுக்கு எல்லாம் விரைவில் ஒரு நல்ல தீர்வு கிடைத்துவிடும்.

ரொம்பவும் ஏழ்மை நிலையில் இருக்கிறீர்கள். அரிசி பருப்பு கூட உங்களுக்கு வாங்க கஷ்டம் இருக்கிறது. மளிகை கடையில் கடன், அக்கம் பக்கம் வீடுகளில் எல்லாம் அஞ்சு பத்து என்று கடன் வாங்கி, சில்லறை கடன் அதிகமாக இருப்பவர்கள், இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த பூஜையை மனநிறைவோடு பக்தியோடு, நம்பிக்கையோடு செய்தால் ஒரு சில நாட்களில் உங்களுடைய வாழ்க்கைத் தரம் படிப்படியாக உயர தொடங்கும். கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் கேட்க வேண்டிய சூழ்நிலை இல்லாமல் வாழ்க்கையை வாழக்கூடிய நல்ல நிலைமை உங்களுக்கு வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: தங்கம் அணியும் முறை! இந்த ராசியினர் இப்படித்தான் தங்கம் அணிய வேண்டும் தெரியுமா? அதிர்ஷ்டம் வர தங்கத்தை அணியுங்கள்.

ஒரே ஒரு வாரம் இந்த விளக்கை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றி பார்க்கும் போது, உங்களுக்கு ஏற்படும் மன நிறைவும் நடக்கக்கூடிய நல்லதும் வாழ்க்கையில் நம்ப முடியாதவையாக இருக்கும். கஷ்டப்படுபவர்கள் ஒரு முறையாவது இந்த விளக்கை உங்களுடைய வீட்டில் ஏற்றி பாருங்கள். நிச்சயம் உங்களுடைய நம்பிக்கை தோற்றுப் போகவே போகாது. எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த வழிபாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -