பிரம்மஹத்தி தோஷம் நீங்கி உங்கள் வியாபாரம் சிறப்புடன் அமைய இந்த பரிகாரத்தை மட்டும் தவறாமல் செய்திடுங்கள்

bramma
- Advertisement -

ஒரு சிலருக்கு வாழ்க்கையில் அனைத்துமே நல்ல படியாக அமைந்து விடும். ஆனால் மற்றொரு சிலருக்கு தொட்டதெல்லாம் தோல்வியிலேயே முடிந்து கொண்டிருக்கும். இவ்வாறு அனைத்திலும் தடைகள் மட்டுமே வந்து கொண்டிருந்தால், அவர்கள் தங்கள் ஜாதகத்தை கொண்டு சென்று ஜோதிடரிடம் காண்பிக்க வேண்டும். அப்பொழுது அவர் உங்கள் ஜாதகத்தை கணித்து உங்கள் ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் உள்ளதா என்று கூறிவிடுவார். அப்படி ஒரு சிலருக்கு நாகதோஷம், செவ்வாய் தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்கள் இருப்பதை தெரிந்து கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு தோஷத்திற்க்கும் ஒவ்வொரு விதமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அவ்வாறு தொழிலில் நஷ்டம், கல்யாணத் தடை, குழந்தை பாக்கியமின்மை இவற்றிற்க்கு பிரம்மஹத்தி தோஷமும் காரணமாக இருக்கலாம். வாருங்கள் இந்த பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய செய்ய வேண்டிய சிறப்பு பரிகாரத்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தன்னிடம் வேலை செய்பவர்களிடம் அதிக வேலை வாங்கி விட்டு, அவர்களுக்கு தகுந்த ஊதியம் தராமல் இருந்தாலும் இவ்வாறான தோஷம் ஏற்படும். அடுத்தது ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குக் கொடுத்த பின்னர், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யாமல் விட்டு விட்டாலும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். அவ்வாறு கல்வி, தொழில் சொல்லிக் கொடுத்தவர்களுக்கு தகுந்த குருதட்சனை கொடுக்காமல் போனாலும் தோஷம் உண்டாகும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று நாக பாம்பை அடித்துக் கொன்றாலும் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும். சுவாமி சிலைகளை திருடி இருந்தாலும், கோவில்களை தகர்த்து இருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும். விஷ்ணு ராமராக அவதாரம் எடுத்தபோது ராவணனைக் கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாகியது.

பிரம்மஹத்தி தோஷம் உடையவர்களுக்கு தங்கள் தொழிலில் சரிவு ஏற்பட்டு கொண்டே இருக்கும். அல்லது தொழில் செய்ய முடியாத அளவிற்கு வீழ்ச்சி உண்டாகும். அதுமட்டுமல்லாமல் திருமணத்தடை ஏற்படும். எவ்வளவு முயற்சி செய்தாலும் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும். ஒரு சிலருக்கு திருமணம் ஆன பின்னர் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும்.

- Advertisement -

பிரம்மஹத்தி தோஷம் நீங்க வயதான தம்பதியினருக்கு வயிறு நிறைய உணவளித்து, ஆடைகளை தானமாக வழங்க வேண்டும். அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அங்கப்பிரதட்சனம் செய்து வர பிரம்மஹத்தி தோஷம் அகன்று விடும். பசுமாட்டிற்கு தண்ணீர் அல்லது அருகம்புல்லை உணவாக வழங்கி வர பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விரைவாக விடுபடலாம்.

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும். இங்கு முன்வாசல் வழியாகச் சென்று பரிகாரம் செய்து முடித்த பிறகு, பின் வாசல் வழியாக வெளியே வர வேண்டும். இவ்வாறு பரிகாரம் செய்வது பிரம்மஹத்தி தோஷம் விலகுவதற்கு சிறந்த வழியாகும். அது மட்டுமல்லாமல் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் இருக்கக்கூடிய ஸ்தளங்களுக்கு அடிக்கடிச் சென்று வர விரைவாக உங்கள் பிரம்மஹத்தி தோஷம் குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -