இப்படி ஒரு கத்தரிக்காய் கிரேவி செய்தால், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அசத்தலான சுவையில் இருக்கும்

brinjal
- Advertisement -

கத்தரிக்காய்களை எண்ணெயில் பொரித்து, மசாலா வறுத்து, அரைத்து, அதன் பின்னர் செய்யப்படும். இது பிரியாணி, பிரிஞ்சி சாதம், தக்காளி சாதம், சிக்கன் பிரியாணி, மற்றும் சப்பாத்தி, பூரி, சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  கத்திரிக்காய் கிரேவியில் காரம் மற்றும் எண்ணெய் சற்று கூடுதலாக இருக்கும் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காரத்தை சரி செய்து கொள்ளலாம். அதே போல நீங்கள் முழு கத்திரிக்காய்களில் எண்ணெயில் பொரிக்க விரும்பவில்லை என்றால் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கி அதன் பின்னர் சேர்த்துக் கொள்ளவும். மிகவும் சுவையாக இருக்கும் வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வேர்கடலை –  4 ஸ்பூன், வெள்ளை எள் –  4 ஸ்பூன், கொத்தமல்லி  –  3 ஸ்பூன்,
பட்டை –  1 துண்டு, லவங்கம் –  4, ஏலக்காய் – 3, காய்ந்த மிளகாய் – 5,
காஷ்மீரி சிவப்பு மிளகாய் – 2, கத்தரிக்காய் – 10, எண்ணெய்  – கால் லிட்டர், சீரகம் – 1/2 ஸ்பூன், கடுகு –  1/2 ஸ்பூன், கருவேப்பிலை –  சிறிதளவு, பச்சை மிளகாய் – 3  நீளவாக்கில் வெட்டியது, பெரிய வெங்காயம் – 1  பொடியாக நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன்,
மிளகாய் தூள் –  1 ஸ்பூன்,மஞ்சள் தூள் – 1/2  ஸ்பூன், கெட்டியான தயிர் – 1/4  கப், நறுக்கிய கொத்தமல்லி –  சிறிதளவு.

- Advertisement -

செய்முறை:
மசாலா அரைப்பதற்கு  ஒரு கடாயில் 4 தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்துக் கொள்ளவும். மிதமான சூட்டில் நன்கு வறுத்துக் கொள்ளவும்,  பின்னர் அதை தனியே எடுத்து வைக்கவும்.அதே பாத்திரத்தில் 4 ஸ்பூன் வெள்ளை எள் சேர்த்துக் கொள்ளவும். இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் 3 தேக்கரண்டி கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்.அதனுடன் ஒரு துண்டு பட்டை 4 லவங்கம் மற்றும் 3 ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்.அதனுடன் 5 காய்ந்த மிளகாய் அல்லது காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.அதனுடன் இரண்டு காஷ்மீரி சிவப்பு மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக வறுத்துக் கொள்ளவும் பின்னர் தனியே எடுத்து வைக்கவும். வறுத்தவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்..ஒரு கடாயில் கத்திரிக்காய் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

- Advertisement -

எண்ணெய் சூடானதும் பத்து முதல் பன்னிரண்டு சிறிய அளவு கத்தரிக்காய்களை நடுவில் கீறி சேர்த்துக் கொள்ளவும். மிதமான சூட்டில் வைத்து கத்தரிக்காயை நன்கு வேகும்வரை பொரித்துக் கொள்ளவும். கத்திரிக்காய் வெந்த பிறகு தனியே எடுத்து வைக்கவும். அதே எண்ணெயில் அரை தேக்கரண்டி சீரகம் மற்றும் அரை தேக்கரண்டி கடுகு சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். கடுகு கருவேப்பிலை பொரிந்த பின்னர் 3 பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி சேர்த்துக் கொள்ளவும்.

அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். வெங்காயம் வதங்கிய பின்னர் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு  விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்னர் கிரேவிக்கு தேவையான உப்பு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனுடன் கால் கப் கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளவும். நன்கு கலந்த பின்னர் பொரித்து வைத்துள்ள கத்தரிக்காய்களை சேர்த்துக் கொள்ளவும். மூடி வைத்து இரண்டு நிமிடங்களுக்கு வேக வைக்கவும்கிரேவியில் எண்ணெய் பிரிந்து வருவதை காணலாம். சிறிதளவு கொத்தமல்லி தூவி  அடுப்பை அனைத்து விடவும். சுவையான கத்தரிக்காய் கிரேவி தயாராகிவிடும்.

- Advertisement -