புதன் கிழமையில் எதையெல்லாம் செய்தால் அந்த நாள் அதிஷ்டம் நிறைந்த நாளாக மாறி பலவித அதிஷ்டங்களை அள்ளித்தரும் தெரியும்?

budhan kizhamai
- Advertisement -

பெண் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. இவ்வாறான புதன்கிழமையில் வீட்டில் செய்யும் பூஜையினாலும், பெண்கள் சில விஷயங்களை பின்பற்றுவதினாலும் இல்லங்களில் நிலவிக் கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, மனமகிழ்ச்சியும், நிம்மதியும் வீட்டில் குடி கொள்ளும். அதுமட்டுமல்லாமல் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைத்து பணவரவு உங்களைத் தேடி வரும். புதன் பகவானுக்கு உரிய நாளான இந்த புதன்கிழமையில் செய்யவேண்டிய பூஜை மற்றும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய செயல்கள் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

wednesday

புதன் கிழமை செய்ய வேண்டிய பூஜை முறை :
புதன் கிரகம் என்பது சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். இந்த கிரகத்திற்கு உரிய கடவுளாக விஷ்ணு பகவான் உள்ளார். புதன் கிழமை அன்று புதன் ஓரையில் காலை எழுந்தவுடன் குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள விஷ்ணு பகவான் படத்திற்கு முன்னால் ஒரு அகல் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு கையளவு பச்சை பயிரை உங்கள் கையில் வைத்துக்கொண்டு கடவுளின் முன்னால் நின்று புதன் பகவானுக்கு உரிய காயத்திரி மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

- Advertisement -

புதன் காயத்ரி மந்திரம்:
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்.

Navagragham

மந்திரத்தை ஜபித்த பிறகு, இதனுடன் இனிமையான வாழ்க்கை கிடைக்க வேண்டும், வீட்டில் உள்ள அனைத்து சங்கடங்களும் தீர்ந்து தொழிலில் முன்னேற்றம் கிடைக்க வேண்டும், பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கவேண்டும் என்று உங்களுக்குத் தேவையான வரங்களை மனதில் நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

புதன் கிழமை நாளில் கோவிலுக்கு சென்று புதன் கிரகத்திற்கு பச்சை வஸ்திரம் செலுத்தி, ஐந்து விளக்கு ஏற்றி பூஜை செய்தும் வரலாம். புதன்கிழமையன்று பச்சைப்பயிறு தானம் கொடுக்கலாம். படிக்கும் குழந்தைகளுக்கு பேனா, புத்தகம் போன்ற பொருட்களையும் வாங்கி கொடுக்கலாம். இவற்றை தானமாக கொடுப்பதன் மூலம் புதன் பகவானின் பார்வை நம்மீது நேரடியாக விழும்.

navagraham

புதன் கிழமையில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்:
சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்களை சுத்தம் செய்து புதன்கிழமை அன்று புதியதாக நிரப்பி வைத்து வந்தால் உங்கள் இல்லங்களில் நவதானியங்கள் எப்பொழுதும் குறையாமலிருக்கும். சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் அல்லது பூஜைக்கு பயன்படுத்தும் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றினை புதன் கிழமைகளில் வாங்கி வைத்து பயன்படுத்தினால் அதன் மூலம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

Navathaniyam

வீட்டில் கவலைகள் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் புதன் கிழமை நாட்களில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பிரச்சனைகள் மற்றும் துன்பங்கள் விரைவில் தீர்ந்துவிடும். புதிய பொருட்கள் வாங்குவது என்றாலும் புதன்கிழமையில் வாங்குங்கள். புதன்கிழமையில் பொருட்கள் வாங்குவதால் உங்கள் வீடுகளில் அதிக பொருள் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தங்க நகை வாங்குவதாக இருந்தாலும் புதன்கிழமை குளிகை நேரங்களில் வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் எப்பொழுதும் பொன், பொருள் குறையாமல் அதிகமாக சேர்ந்துகொண்டே இருக்கும். இப்படி பல நன்மைகளை தரும் சிறப்பு தினம் புதன்கிழமை ஆகும்.

- Advertisement -