புதன் பகவானால் ஏற்படும் உடல் உபாதைகள்.

budhan
- Advertisement -

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற ஒரு கூற்று நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சுப கிரகங்கள் வரிசையில் புதன் பகவானுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. புதன் பகவானை புத்திகாரகன் என்று கூறுவோம். அப்படிப்பட்ட புத்திகாரகன் நம் ஜாதகத்தில் பாதகமான சூழ்நிலையில் இருக்கும் போது ஏற்படக்கூடிய உடல் உபாதைகளை பற்றி தான் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நவகிரகங்களில் ஒருவராக திகழக்கூடிய புதன் பகவான் படிப்பிற்கும், வேலைக்கும், தொழிலுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர். மேலும் மூளை சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களுக்கும் புதன் பகவானே காரணமாக திகழ்கிறார். புதன் பகவான் எந்த கிரகத்தோடு சேர்கிறார்களோ அந்த கிரகத்தின் ஆதிக்கத்தை பொறுத்து ஜாதகக்காரரின் புத்தி மாறும் என்ற கூற்றும் நிலவி வருகிறது.

- Advertisement -

புதன் பகவான் ராகு, கேது, செவ்வாய், சனி போன்ற கிரகங்களுடன் சேரும்பொழுது உடல் உபாதைகளை ஏற்படுத்துவார். உறுப்புகள் என்று பார்க்கும் பொழுது புதன் பகவானுக்குரிய உறுப்புகளாக நரம்பு மண்டலமும் மூளை மண்டலமும் திகழ்கிறது. மூளை சம்பந்தப்பட்ட நோய்களும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் புதன் பகவானால் ஏற்படக்கூடியவை, அதிலும் குறிப்பாக கோமா, உடல் செயலிழந்து போதல், வலிப்பு நோய் ஏற்படுதல், திடீரென்று மன நிலையில் ஏதாவது மாற்றம் ஏற்படுதல், உடலில் இருக்கக்கூடிய பச்சை நரம்புகள், குரலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்று இவை அனைத்திற்கும் புதன் பகவானே காரணமாக திகழ்கிறார்.

புதன் பகவானுக்குரிய அதி தேவதையாக பெருமாள் திகழ்கிறார். பெருமாளை புதன்கிழமை தோறும் வழிபடுவதன் மூலம் புதன் பகவானின் பாதகமான சூழ்நிலை மாறும் என்று கூறப்படுகிறது. புதன் பகவானுக்குரிய தானியமாக பச்சை பயிறு திகழ்கிறது. இந்த பச்சை பயறை பறவைகளுக்கு தானமாக வழங்கும் பொழுது புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

மேலும் படிக்கும் குழந்தைகளுக்கு படிப்பு சம்பந்தமாக நோட்டு, பேனா, புத்தகம், ஸ்கூல் பேக் போன்றவற்றை வாங்கித் தருவதன் மூலமும் புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. புதன் பகவான் பாதகமாக இருக்கும் ஜாதகர்கள் முடிந்த அளவிற்கு பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய உணவுகளையும் பச்சை நிறத்தில் இருக்கும் ஆடைகளையும் பிறருக்கு தானமாக தர வேண்டும் மேலும் அவர்களும் இந்த நிறத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் புதன் பகவானின் அருள் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் மரகத பச்சைக் கல்லை அணிவதால் புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி ஒற்றுமை பெற பரிகாரம்.

சுப கிரகமாக இருந்தாலும் அது சேரும் கிரகங்களுக்கு ஏற்ப தன் நிலையை மறந்து உடல் உபாதைகளை தரும் என்பதால் எந்த கிரகத்துடன் சேர்ந்திருக்கிறது என்பதை அறிந்து அதற்கேற்ற பரிகாரங்களை செய்து உடல் நலனை பேணி காப்போம்.

- Advertisement -