நாளை ஆடி 18 வாங்க வேண்டிய முக்கிய 2 பொருட்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இதை வாங்கினால் என்றென்றும் வறுமை இல்லாமல் செல்வ செழிப்பு உண்டாகும்!

aadi-perukku-things
- Advertisement -

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உரிய மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இம்மாதத்தில் உக்ர தெய்வமாக விளங்கும் அம்மனை குளிர செய்து அவரை வழிபட்டு வருவதால் சுபகாரியங்கள் செய்வதை தவிர்த்து விடுகின்றோம். ஆடி பதினெட்டு விவசாயம் செழிக்க பண்டைய தமிழர்கள் புது பொருட்கள், மங்கல பொருட்கள், ஆடை, அணிகலன்கள் ஆகியவற்றை வாங்கி மகிழ்வார்கள். காவிரியையும், இயற்கை அன்னையையும் வழிபட்டு தங்கள் நன்றியை வெளிப்படுத்துவார்கள். இந்நாளில் எதை நாம் வாங்கினாலும் அது பன்மடங்கு பெருகும். அந்த வகையில் நாம் இந்த 2 பொருட்களை வாங்கும் பொழுது நமக்கு என்றுமே வறுமை இல்லாத வாழ்வு நிலைக்கும் என்கிறது சாஸ்திரம். அப்படியான பொருட்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

aadi perukku

ஆடியில் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருகும், இதனால் விவசாயம் செழிக்கும். அன்று தான் விதை நடவு செய்து அம்மனை வழிபட்டு குடும்பத்துடன் பிரார்த்தனை மேற்கொள்வார்கள். இந்நாளில் வேண்டும் வேண்டுதல்கள் அனைத்தையும் அம்பாள் மனம் குளிர நமக்கு நிறைவேற்றித் தருவார் என்கிற நம்பிக்கை உண்டு. குறிப்பாக விலை உயர்ந்த பொருட்கள் ஆக இருக்கும் ஆபரண அணிகலன்கள் வாங்க ஏதுவான நாளாக கருதப்பட்டது. தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள், வைர வைடூரியங்கள், நவரத்தினங்கள் ஆகியவற்றை வாங்கி குவிப்பார்கள். இன்று இருக்கும் சூழ்நிலையில் இவற்றை நம்மால் வாங்க முடியாவிட்டாலும் நம்மிடம் இருக்கும் பொருளை வைத்து அம்பாளை வழிபட்டு புதிதாக இந்த 2 பொருட்களை வாங்கலாம்.

- Advertisement -

இந்த இரண்டு பொருட்களுக்கு இருக்கும் தெய்வீக மகத்துவங்கள் சொல்லில் அடங்காதவை. மகாலட்சுமியின் ஸ்வரூபமாக கருதப்படும் இந்த இரண்டு பொருட்கள் மங்கலப் பொருளாகவும் விளங்குகின்றன. இவைகள் இல்லாத குடும்பத்தில் சுபிட்சமும் நிலைப்பது இல்லை. என்ன பொருள் அது? என்கிற ஆர்வம் உண்டாகிறது அல்லவா? சரி இனி அது என்ன? என்பதை பார்த்து விடுவோம்.

epsam-salt

எல்லோரும் அறிந்த சில விஷயங்கள் தான் ஆடிப்பெருக்கு அன்றும் செய்யக் கூடிய முக்கிய விஷயமாக உள்ளது. ஆடிப்பெருக்கு அன்று உங்களால் முடிந்தால் ஒரு குண்டுமணி தங்கம் ஆவது வாங்குங்கள். அல்லது ஒரு சிறிய அளவிலான வெள்ளி பொருளை வாங்குங்கள். அவற்றை வாங்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை என்பவர்கள்! புதிதாக மஞ்சள் கிழங்கு மற்றும் கல் உப்பு ஆகிய இந்த இரண்டு பொருளை கடைக்கு சென்று உங்கள் கைகளால் வாங்கி வந்து வீட்டில் இருக்கும் உப்பு ஜாடியில் உப்பை கொட்டி வையுங்கள்.

- Advertisement -

அதே போல மஞ்சளை பாத்திரத்தில் நிரம்பும்படி போட்டு வையுங்கள். நீங்கள் வாங்கும் மஞ்சள், குண்டு மஞ்சள் ஆக இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். குண்டு மஞ்சளில் தான் மகாலட்சுமி வாசம் செய்கிறார். ஆகவே இந்த இரண்டு பொருட்களையும் ஆடிப்பெருக்கு நன்னாளில் புதிதாக வாங்கி வீட்டில் நிரம்ப அடுக்கி வைத்தால் நம் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி செல்வ செழிப்பு பெருகும்.

dhanam

மேலும் இன்றைய நாளில் இல்லாத ஏழை, எளியவர்க்கு உணவு தானம் செய்து புண்ணியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆடிப்பெருக்கில் காவிரியில் நீராட முடியாவிட்டாலும் வீட்டில் குளிக்கும் பொழுது தண்ணீரில் சிறிதளவு சுத்தமான மஞ்சள் தூள் சேர்த்து குளிக்கலாம். இதனால் சர்வ தோஷங்களும் அகன்று இல்லத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகும்.

- Advertisement -