இனிமே இப்படிப்பட்ட பழங்களை இனாமாக, காசே வேணான்னு, யாராவது கொடுத்தால் கூட அதை நீங்க கைநீட்டி வாங்க மாட்டீங்க. பழங்களில் எது ஹைபிரிட் பழம்? எது நாட்டு பழம் என்பதை எப்படித் தான் கண்டுபிடிப்பது?

froot
- Advertisement -

செயற்கையான பொருட்களை வாங்கி சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கிறது என்றுதான், இயற்கையில் விளையும் பழங்களை வாங்கி நாமும் உண்ணுகின்றோம். நம்முடைய குழந்தைகளுக்கும் கொடுக்கின்றோம். ஆனால் இயற்கையாக வளர்க்கப்படும் பழங்களில் கூட ஆபத்து இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆமாங்க, கூடுமானவரை நம்முடைய நாட்டில் விளையும் பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.

பள பளப்பாக அழகாக இருக்கிறதே என்பதற்காக வெளியூரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளவும். சரி நம்ம ஊரில் விளையும் நாட்டு பழங்களை கண்டுபிடிப்பது எப்படி, வெளியூரிலிருந்து பதப்படுத்தப்பட்டு இறக்குமதி செய்யப்படும் ஹைபிரிட் பழங்களை கண்டுபிடிப்பது எப்படி ஒரு சில பயனுள்ள குறிப்பு இதோ உங்களுக்காக.

- Advertisement -

ஆப்பிள்:
இந்தியாவில் விளையக்கூடிய ஆப்பிள் லேசான சிவப்பு நிறத்தில் காணப்படும். இப்படிப்பட்ட ஆப்பிளை வாங்கினால் எப்பவும் போல தண்ணீரில் ஒரு முறை கழுவி விட்டு நாம் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் தற்போது பளபளப்பாக பார்ப்பதற்கே ரொம்பவும் அழகாக, அடர் சிவப்பு நிறத்தில் மேலே ஸ்டிக்கர் ஒட்டி சில ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்த ஆப்பிள் பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய ஆப்பிள்.

இப்படி இறக்குமதி செய்யப்படும் ஆப்பில் ஆனது மூன்று மாதங்கள் வரை கூட கெட்டுப் போகக் கூடாது என்பதற்காக இதன் மேலே மெழுகு தடவப்பட்டு உள்ளது. இதை நீங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் பத்து நிமிடம் சுடுதண்ணீரில் போட்டு ஊற வைத்து கழுவி, தோல் சீவி அதன் பிறகு தான் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அதேபோல ஆப்பிளை வாங்கும் போது அதன் காம்பு பகுதியை பாருங்கள். கீழ்ப்பக்கம் இருக்கும் காம்பு பகுதி லேசாக பச்சை நிறமாக இருந்தால் அதை வாங்கி இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். அதே அந்த காம்பு பகுதி ரொம்பவும் கருத்து போய் கை வைத்தாலே அழுந்துவது போல ரொம்பவும் சிவப்பாக இருந்தால் அந்த பழம் கெட்டுப் போய் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மாதுளை:
மாதுளை என்றாலே கடிப்பதற்கு சிரமம் இருக்கக் கூடாது. அதில் கொட்டை இருக்கக் கூடாது என்று தான் நாம் யோசிக்கின்றோம். ஆனால் அந்த கொட்டையில் தான் அதிக சத்து இருக்கிறது. மாதுளை மேலே பார்ப்பதற்கு வெள்ளையாகவும் உள்ளே இருக்கும் முத்துக்கள் லேசான ரோஸ் நிறத்திலும், அதில் இருக்கும் கொட்டைகள் கடிப்பதற்கு சிரமமாகவும் இருந்தால்தான் அது நாட்டுப்பழம். இதை வாங்கி நம்மால் நிறைய நாள் பிரிட்ஜில் ஸ்டோர் செய்ய முடியாது. இரண்டு நாட்களில் கெட்டுப் போய்விடும்.

- Advertisement -

மேலே மொழு மொழு என அழகாக சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய மாதுளைகள் ஆப்கானிஸ்தான் காபுல் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யக்கூடியவை. இந்த பழங்களை கூடுமானவரை வாங்குவதை தவிர்த்துக் கொள்ளவும். நம்முடைய நாட்டில் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் மாதுளம் பழங்களை வாங்கி சாப்பிட்டால் ரொம்ப ரொம்ப நல்லது. கடைக்காரங்க கிட்ட கேட்டாலே சொல்லுவாங்க. இது வெளிநாட்டில் இருந்து இறக்கப்பட்ட மாதுளம் பழமா அல்லது நம்முடைய இந்தியாவில் இருந்து வரவைக்கப்பட்ட பழமா என்பதை அவர்களை தெளிவு படுத்தி விடுவார்கள்.

சரி மாதுளையை எப்படி வாங்குவது. மேலே இருக்கும் தோலை லேசாக அழுத்தி பாருங்கள். தோல் ரொம்பவும் திக்காக அழுத்த முடியாமல் கடினமாக இருந்தால், அது நல்ல மாதுளை. அழுத்தும் போது கை உள்ளே இறங்கினால், அந்த மாதுளை உள்ளே கெட்டுப் போய் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. மாதுளை பழத்துக்கு மேலே நிறைய ஓட்டைகள் இருந்தாலும் பழம் உள்ளே கெட்டுப் போயிருக்கும்.

பப்பாளி:
இந்த பப்பாளி பழத்தில் இருக்கும் சத்துக்கு ஈடு இணை வேறு எந்த பழத்திலும் இல்லை. ஆனாலும் மலிவாக கிடைக்கிறது என்று இதை நாம் வாங்குவதே இல்லை.  நீட்டமாக இருக்கும் பப்பாளி பழத்தை வாங்க வேண்டும். பப்பாளி பழத்தை எடுத்து ஆட்டிப் பார்த்தால் அதில் விதைகள் இருக்க வேண்டும். விதைகள் இருக்கும் பழங்கள் நாட்டு பழங்கள். விதைகள் இல்லாத பழங்கள் ஹைபிரிட் பழங்களாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

மாம்பழம்:
இப்போது மாம்பழ சீசன் வந்துவிட்டது. மாம்பழத்தில் பல வகையான மாம்பழங்கள் உள்ளது. மாம்பழத்தை பார்த்தால் மேலே பளபளப்பாக ஒரே சீரான மஞ்சள் நிறத்தில் அழகாக இருக்கிறதே என்று அதை வாங்கி விடக்கூடாது. சீராக ஒரு மாம்பழம் பழுத்திருந்தால் அதில் புகை போட்டு உள்ளார்கள், அல்லது கல்லு வைத்து பழுக்க வைத்துள்ளார்கள் என்பது அர்த்தம்.

இதையும் படிக்கலாமே: தர்பூசணி பழம் இப்படி இருந்தால் கண்ணை மூடிக்கிட்டு வாங்கிடாதீங்க. இந்த தர்பூசணியை சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆபத்து.

மாம்பழம் ஆங்காங்கே மஞ்சள் நிறத்திலும், ஆங்காங்கே லேசான பச்சை நிறத்திலும் காணப்பட்டால், தான் அது நல்ல மாம்பழம். மாம்பழங்களில் லேசாக அங்கங்கே கரும்புள்ளிகள் தென்பட வேண்டும். குறிப்பாக இயற்கையாக பழுத்த மாம்பழத்துக்கு மேலே பால் கறை இருக்காது. பழத்தை எடுத்து முகர்ந்து பார்த்தால் அதில் இருந்து மாம்பழம் வாசனை சூப்பரா வீசினால் அது நல்ல மாம்பழம் என்று கண்டுபிடித்து விடலாம்.

- Advertisement -