தர்பூசணி பழம் இப்படி இருந்தால் கண்ணை மூடிக்கிட்டு வாங்கிடாதீங்க. இந்த தர்பூசணியை சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆபத்து.

watermelon1
- Advertisement -

வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி தர்பூசணி கடை வியாபாரம் கலைக்கட்டும். நாமும் நம்முடைய வீட்டிற்கு தர்பூசணி பழத்தை வாங்கி செல்வோம். தர்பூசணியை வாங்குவதற்கு முன்பு, அந்த தர்பூசணியை எப்படி செலக்ட் பண்ணி வாங்குவது என்ற குழப்பம் எல்லோருக்கும் இருக்கும் அல்லவா. எந்த தர்பூசணி இனிப்பாக சுவையாக இருக்கும். எந்த தர்பூசணியை வாங்கினால் அதிலிருந்து அதிக நீர் சத்து கிடைக்கும். எந்த தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்து என்பதை பற்றிய பலவிதமான பயனுள்ள குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தர்பூசணி பழத்தை எப்படி வாங்குவது?
தர்பூசணி பழத்தில் ஆண் பழம், பெண் பழம் என்று இரண்டு வகையான பழங்கள் உள்ளது. நீளமான வாக்கில், பெரியதாக இருக்கக்கூடிய பழத்தை ஆண் பழம் என்று சொல்லுவார்கள். இந்த ஆண் பழத்தில் சுவை கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இதில் தண்ணீர் அதிக அளவு நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

கொஞ்சம் வட்ட வடிவில் சிறியதாக இருக்கக்கூடிய பழத்தை பெண் பழம் என்று சொல்லுவார்கள். இதில் தண்ணீரின் அளவு கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால் இதனுடைய சுவை ரொம்ப ரொம்ப இனிப்பாக நாவிற்கு ருசியை தரும்படி அமையும். ஆண் பழமாக இருந்தாலும் நாம் அதை வாங்கி சாப்பிடலாம். பெண் பழமாக இருந்தாலும் அதை நாம் வாங்கி சாப்பிடலாம் தவறு கிடையாது.

தர்பூசணி பழம் விளையும் போது, அதனுடைய அடிப்பகுதி இருக்கும் அல்லவா. அந்த அடிப்பகுதியானது லேசான மஞ்சள் நிறத்தில், ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது பழுத்த பழம் என்று அர்த்தம். அந்த பழத்தை நீங்கள் வாங்கி உடனடியாக வெட்டி சாப்பிட்டு கொள்ளலாம். அதுவே அந்த இடம் ரொம்பவும் வெள்ளையாக இருக்கிறது என்றால் அந்த பழம் கொஞ்சம் காயாக இருக்கிறது. பழுப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தர்பூசணி பழத்தின் காம்பு நன்றாக காய்ந்து போய் இருக்க வேண்டும். காய்ந்த காம்பு இருக்கக்கூடிய பழத்தை வாங்கினால் அந்த பழம் நன்றாக பழுத்திருக்கும். காம்பு பச்சை நிறத்தில் இருந்தால் அந்த பழம் இன்னும் பழுக்கவில்லை என்று அர்த்தம்.

- Advertisement -

இன்னும் ஒரு சில பழங்களில் மேலே கோடு கோடாக பூச்சி அரிச்சது போல தென்படும். சில பேர் இந்த பழத்தை வாங்க மாட்டார்கள். இதை கூட நாம பூச்சி அரிச்ச பழம் என்று சொல்லுவோம். தர்ப்பூசணி பூவிட்டு இருக்கும்போது அந்த பூவில் வண்டு தேன் வந்து உட்கார்ந்து, மகரந்த சேர்க்கையை அதிகமாக செய்திருக்கும். பூ, காயாகி கனியாகும் போது அந்த தழும்புகள் அப்படியே இருக்கும். இதை வலை பின்னல் என்று சொல்லுவார்கள். இப்படி பூச்சிகளால் மகரந்த சேர்க்கை அதிகமாக நடைபெற்ற அந்த வலை பின்னல் உள்ள பழங்களில் சுவை அருமையாக தான் இருக்கும். அப்படிப்பட்ட பழங்களை வாங்குவதன் மூலம் நமக்கு எந்த பிரச்சனையும் வராது.

சரிங்க அப்போ எப்படிப்பட்ட பழங்களை தான் வாங்க கூடாது. ஒரு சில பழங்களை இரண்டாக வெட்டியவுடன் அதன் உள்ளே சின்ன சின்ன ஓட்டைகள் இருக்கும். அப்படிப்பட்ட ஓட்டைகள் இருந்தால், பழத்தின் இடையே லேசாக பள்ளம் தெரிந்தால், அதில் சுவைக்காகவோ நிறத்திற்காகவோ அல்லது அந்தப் பழத்தின் வளர்ச்சிக்காகவோ ஊசி போட்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் பழத்தை வாங்கி வெட்டியவுடன் இப்படி ஓட்டை இருந்தால் அந்த பழத்தை சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது. பழத்தில் செயற்கை முறையில் செலுத்தப்பட்ட ஊசியின் மூலம் நம்முடைய உடலுக்கு நிச்சயம் கெடுதல் ஏற்படும்.

- Advertisement -

எல்லா பழங்களும் பெரும்பாலும் உள்ளே சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். ஆனால் சில பழங்கள் மஞ்சள் வெள்ளை நிறத்தோடு கலந்து சிவப்பு நிறத்தில் இருக்கும். வெட்டிய பிறகு அப்படி தெரிந்தாலும் அந்த பழத்தை நீங்க சாப்பிடாதீங்க. அதிலும் ஏதோ ஒரு ஹார்மோன் இன்ஜெக்ஷன் போட்டு இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

அடடே பார்ப்பதற்கு இந்த பழம் இரண்டு கிலோ தேறும். ஆனால் வெயிட் போட்டு பார்த்தால் ஒரு கிலோ தான் நிற்கும். நமக்கு லாபம் என்று இப்படிப்பட்ட பெரிய பழத்தை விலை குறைவாக கொடுத்து வாங்கி செல்லாதீர்கள். பார்க்கும்போதே நமக்கு தெரியும். இந்த பழம் இரண்டு கிலோ இருக்கும் என்றால், அதை எடை போட்டு பார்க்கும் போது இரண்டு கிலோ தான் இருக்க வேண்டும். ரொம்ப பெரிய பழம், எடை குறைவாக இருந்தால் அந்த பழம் நல்ல பழமாக இருக்காது. அதையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வாழைக்காய் இல்லாமலே வாழைக்காய் பஜ்ஜி செய்யலாம் தெரியுமா?. அப்படியே பஜ்ஜி கொஞ்சம் கூட எண்ணெய்யே குடிக்காம நாள் முழுதும் நல்ல புசுபுசுன்னு இருக்க என்ன செய்யணும்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுங்க. வெயில் காலத்திற்கு தர்பூசணி பழம் சாப்பிட்டால் நல்லது என்று சோறு தண்ணி இல்லாமல் வெறும் தர்பூசணி பழத்தையும் சாப்பிடக்கூடாது. இரவு நேரத்தில் தர்பூசணி பழம் சாப்பிடக்கூடாது. காலை உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு, இந்த பழத்தை சாப்பிடலாம். மதிய உணவு விற்கு ஓரிரு மணி நேரம் கழித்து இந்த பழத்தை சாப்பிடலாம். இப்ப உங்க வீட்டுக்கு தைரியமாக தர்பூசணி பழத்தை வாங்கிச் செல்லுங்கள். நல்ல தர்பூசணி பழமாக இருக்கும்.

- Advertisement -