கால்சியம் குறைபாடு நீங்க சுவையான முருங்கைக்கீரை கேழ்வரகு அடை எப்படி செய்வது என்று உங்களுக்கு தெரியுமா?

adai
- Advertisement -

இன்றைய நவீன உலகத்தில் சாப்பிடுவதற்கென்று பீட்சா, பர்கர், சாண்ட்விச் போன்ற பலவித உணவுகள் இருக்கின்றன. இவற்றை உண்பதால் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகிறதே தவிர உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் எதுவும் கிடைப்பதில்லை. என்றாலும் இன்றைய சூழலில் இவ்வாறான உணவுகளை தவிர்ப்பதென்பது இயலாத ஒன்றாக தான் இருக்கிறது. எனவே வாரம் ஒருமுறையாவது வீட்டில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து மிக்க இந்த முருங்கை கீரை கேழ்வரகு அடையை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

burgar

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் – 3, எள் – 3 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து, உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் முருங்கைக் கீரையை ஆய்ந்து தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். அதன் பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

maruthani vidhai

அதன்பின் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கேழ்வரகு மாவை எடுத்துக்கொண்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு மற்றும் எள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு அலசி வைத்துள்ள முருங்கைக்கீரையை இதனுடன் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த மாவினை சற்று பெரிய உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி பிடித்து வைத்த உருண்டைகளிலிருந்து ஒன்றை எடுத்து வாழை இலையின் மீது வைத்து கைகளால் தட்டி கொள்ள வேண்டும்.

adai

அதன் பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதன் மீது வாழையிலையில் தட்டி வைத்த அடையை சேர்க்க வேண்டும். அடை இருபுறங்களிலும் நன்றாக சிவந்து வரும் வரை லேசான தீயில் வேகவைத்து, அடை நன்றாக வெந்ததும் ஒரு தட்டிற்க்கு மாற்றி விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு உருண்டைகளையும் வாழை இலையில் வைத்து நன்றாக தட்டிக்கொண்டு பிறகு தோசைக் கல்லில் சேர்த்து அடை சுட்டு எடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த கேழ்வரகு அடையுடன் தேங்காய் சட்னியை சேர்த்து சாப்பிடும்பொழுது இதன் சுவை மிகவும் சூப்பராக இருக்கும். தயங்காமல் உங்கள் குழந்தைகளுக்கும் இதனை செய்து கொடுத்துப் பாருங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

adai2

பயன்கள்:
1. இப்பொழுதெல்லாம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கால் தடுக்கி கீழே விழுந்தாலே எலும்பு முறிவு ஏற்படுகிறது. இதற்கு காரணம் உடம்பில் கால்சியம் குறைபாடு இருப்பதுதான். இந்த முருங்கைக்கீரை கேழ்வரகு ஆடையை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும்.

bone

2. இப்பொழுது இருக்கும் பெண்களுக்கு உடலில் இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக இருக்கிறது. இரும்புச்சத்து குறைவாக இருப்பதனால் பலவித உடல் உபாதைகளை அனுபவிக்க வேண்டிய நிலைமை உண்டாகிறது. இவ்வாறான குறைபாடு உள்ளவர்கள் முருங்கைக்கீரை சேர்த்து செய்யும் இந்த கேழ்வரகு அடையை சாப்பிட்டு வரும் பொழுது உடம்பில் இரும்புச் சத்து அதிகரித்து நல்ல ரத்த ஓட்டத்தைக் கொடுக்கிறது.

- Advertisement -