சனிபகவானை நேருக்கு நேர் வணங்கலாமா?

sani-bagavan
- Advertisement -

கோவில்களில் பொதுவாக எந்த கடவுளையும் நேருக்கு நேர் நின்று வணங்கக்கூடாது என்று கூறுவார்கள். இது தெய்வங்களுக்கு மட்டும் அல்ல நவகிரகங்களுக்கும் பொருந்தும். இதற்கு காரணம், நேருக்கு நேர் நின்று தெய்வத்தை வணங்கும்போது அதன் சக்தியை மனிதர்களால் எதிர்கொள்ள முடியாது என்பதே ஆகும். இத்தகைய சக்தியை எதிர்கொள்ளும் சக்தி நந்தி பகவான், சிம்மம்,கருடாழ்வார் போன்ற தெய்வ வாகனங்களுக்கு மட்டுமே உண்டு.

நவகிரகங்களை பொறுத்தவரை சனியின் பார்ப்பவை பொதுவாக நல்லதல்ல என்பது நம்பிக்கை. ஆகையால் நேருக்கு நேர் நின்றோ அல்லது அமர்ந்தோ சனியை தரிசிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

- Advertisement -

புராணங்களின் படி, நவகிரகங்களை ஒரு முறை இராவணன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தான் சிம்மாசனத்தில் ஏறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில் படுக்கவைத்து அவர்கள் மார்பு மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.

இதில் சனியை தவிர மற்ற கிரகங்கள் அனைத்தும் மேல் நோக்கிப் படுத்திருந்தன அனால் சனி பகவானோ தனது பார்வை பட்டால் ராவணனுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதால் குப்புறப்படுத்திருந்தார்.

- Advertisement -

இதை கவனித்த நாரதர், இராவணனின் இந்த கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, ராவணனின் சபைக்கு வந்து, பார்த்தாயா ராவணா, உனது கட்டளைக்கு இணங்க அணைத்து நவகிரகங்களும் மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள் அனால் சனியோ குப்புற படுத்து உன்னை அவமதிக்கிறார். இதை நீ கேட்கமாட்டாயா என்றார். உடனே ராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான்.

தனது பார்வை பட்டால் பெரிய அளவில் கெடுதல் விளையும் என்று சனிபகவான் ராவணனிடம் எவ்வளவோ எடுத்து கூறியும் அவன் கேட்கவில்லை. வேறு வழி இன்றி சனியும் படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தார்.

அதன் பிறகு ராவணன் தன் காலை சனியின் மார்பில் மிதித்து படியில் ஏறும்போது சனி கிரகத்தின் பார்வை இராவணனின் மீது விழுந்தது. அன்று முதல் ராவணனிற்கு அழிவு ஆரம்பமானது. நாரதருக்கும் வந்த வேலை முடிந்தது என்று புராணம் கூறுகிறது. இந்த நிகழ்வின் மூலம் சனிபகவானின் பார்வை நம்மேல் பட்டால் நல்லதல்ல என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

- Advertisement -