கஷ்டம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு

maha-periyava
- Advertisement -

மகா பெரியவா பரிகாரம் சொன்னால், அது அந்த பெருமாளே பரிகாரம் சொன்ன மாதிரி என்று சொல்லுவார்கள். இன்று நாம் பார்க்கப் போகின்ற பரிகாரமும் மகா பெரியவா அவர்கள் தன்னுடைய பக்தருக்காக சொன்ன பரிகாரம் தான். உங்களுடைய வாழ்க்கையில் தீராத துன்பங்களும் துயரங்களும் இருக்கிறதா.

குறிப்பாக பண கஷ்டத்தால் மன கஷ்டம் வருகிறதா. நம்பி கொடுத்த பணம் திரும்ப வராமல் போய்விட்டதா. இப்படி வெளியில் சொல்ல முடியாத பிரச்சனையில் சிக்கி இருப்பவர்களுக்காகவே இந்த எளிமையான ஆன்மீகம் பரிகாரம்.

- Advertisement -

சக்கரத்தாழ்வார் வழிபாடு

செவ்வாய்க்கிழமை பெருமாள் கோவிலுக்கு போங்க. சக்கரத்தாழ்வார் இருப்பர். முதல்ல சக்கரத்தாழ்வாரை பார்த்து அவருக்கு இரண்டு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் போட்டு விடவும். பிறகு அந்த சக்கரத்தாழ்வாரை 12 முறை வலம் வரவேண்டும். சக்கரத்தாழ்வாரிடம் சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய பிரச்சனைகளை முறையிடவும்.

10 நிமிடங்கள் அந்த இடத்தில் அமர்ந்து உங்களுடைய கோரிக்கைகளை பொறுமையாக அவர் பாதத்தில் இறக்கி வைத்து விடுங்கள். பிறகு சென்று பெருமாளை சேவித்துவிட்டு கோவிலை மூன்று முறை வளம் வந்து நமஸ்காரம் செய்து, உங்களுடைய வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். வழிபாடு இவ்வளவுதான். செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை செய்தாலே உங்களுடைய பலவிதமான பிரச்சனைகள் படிப்படியாக குறைய தொடங்கி விடும்.

- Advertisement -

வாரம் தோறும் செவ்வாய் கிழமை இதை மறக்காமல் செய்து விடுங்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் எல்லாம் தானாக உங்களைத் தேடி வந்து சேரும். நீங்கள் கொடுக்க வேண்டிய கடனை எல்லாம் தானாக உங்கள் கையாலேயே திருப்பி கொடுத்து விடுவீர்கள். பணம் இல்லாமல் உங்களுக்கு வேறு ஏதாவது மனக்கவலைகள் இருந்தால் அந்த கவலையை தீர்த்து வைக்கக் கூடிய வேலையையும் பெருமாள் பார்த்துக் கொள்வார்.

எப்படிப்பட்ட வேண்டுதலாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு வேண்டுதலுக்காக இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அந்த வேண்டுதல் நிறைவேறியவுடன் மீண்டும் இன்னொரு வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள இந்த பரிகாரத்தை தொடங்கலாம். எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரம் மகா பெரியவா அவர்களால் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய வரப்பிரசாதம்.

இதையும் படிக்கலாமே: சேமிப்பு அதிகரிக்க பணப்பட்டி ரகசியம்

மகா பெரியவா அவர்களை வணங்கி, இந்த பரிகாரம் அனைவருக்கும் பலன் தர வேண்டும் என்று, பெருமாளை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -