சந்திர பகவானால் ஏற்படும் உடல் உபாதைகள்.

sickness
- Advertisement -

நோய் வாய்படுதல் என்பது நாம் செய்த கர்மாக்களின் அடிப்படையில் நடைபெறுகிறது என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. அப்படி நாம் செய்த கர்மாக்கள் சரியாக வேண்டும் என்றால் எந்த கிரகத்தால் பாதிப்புகள் ஏற்படுகிறதோ அந்த கிரகத்திற்குரிய பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த ஜோதிடம் குறித்த பதிவில் சந்திர பகவானால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளை பற்றியும் அதற்குரிய வழிபாடு மற்றும் பரிகாரத்தை பற்றியும் தான் பார்க்கப் போகிறோம்.

சந்திர பகவான் சாதகமற்ற நிலையில் எந்த ஜாதகத்தில் இருக்கிறாரோ அந்த ஜாதகக்காரருக்கு சந்திர பகவானால் பாதிப்புகள் ஏற்படும். அவ்வாறு பாதிப்புகள் ஏற்படும் பொழுது உடலளவிலாக ஏற்படக்கூடிய உடல் உபாதைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பொதுவாக சந்திர பகவான் நீர் மண்டலத்துக்கு உரியவராக கருதப்படுகிறார். உடலில் இருக்கும் ரத்த ஓட்டம் சந்திர பகவானை குறிக்கிறது. உடலில் ரத்த ஓட்டம் அனைத்து இடங்களுக்கும் செல்வதால் சந்திர பகவானால் முழுமையாக பல உடல் உபாதைகளை நமக்கு தர முடியும். அதிலும் குறிப்பாக கண்கள் தொடர்பான பிரச்சனைகள், கிட்னி தொடர்பான பிரச்சனைகள், மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு சந்திர பகவானை காரணமாக திகழ்கிறார்.

இப்படிப்பட்ட நோய்களிலிருந்து விடு பெறுவதற்கு செய்யக்கூடிய வழிபாட்டு முறையைப் பற்றி பார்ப்போம். சந்திரனின் முழு ஆதிக்கம் பெற்ற நாளாக பௌர்ணமி திகழ்கிறது. பௌர்ணமி நாளன்று தெய்வ வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக பௌர்ணமி நாளன்று முழுவதும் விரதம் இருந்து சிவன் பார்வதியை வழிபட்டு வர சந்திரனால் ஏற்பட்டிருக்கும் உடல் உபாதைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அடுத்ததாக பரிகாரத்தை பற்றி பார்ப்போம். சந்திர பகவானுக்குரிய தானியமாக அரிசி திகழ்கிறது. இந்த அரிசியை தானம் கொடுப்பதன் மூலமும் சந்திர பகவானின் ஆதிக்கத்தை நம்மால் குறைத்துக் கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் அரிசியால் செய்யப்பட்ட எந்த பொருட்களை வேண்டுமானாலும் தானம் செய்யலாம். அதனால்தான் பலரும் உடல் உபாதைகள் நீங்குவதற்கு அன்னதானம் செய்கிறார்கள். பால், மோர், இளநீர் போன்றவற்றையும் தானம் தருவதன் மூலம் சந்திர பகவானின் பாதிப்பிலிருந்து நம்மால் வெளிவர முடியும்.

மேலும் சந்திர பகவான் மனதிற்குரியவராக திகழ்வதால் மனம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அவை சந்திர பகவானால் ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு மேல் சொன்ன வழிபாட்டையும் பரிகாரத்தையும் முறையாக செய்து வருவதன் மூலம் மனம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வெளியில் வர முடியும்.

இதையும் படிக்கலாமே: இந்த ராசியில் பிறந்த பெண்களை திருமணம் செய்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தாம்

இந்த வழிபாட்டையும் பரிகாரத்தையும் முறையாக செய்வதன் மூலம் சந்திர பகவானின் அருளை பெற்று அவரால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து வெளிவரலாம்.

- Advertisement -