சந்திர கிரகணத்தின் மூலம் அதிர்ஷ்டம் பெறப்போகும் 6 ராசிகள்

chandra grahan 2023 astrology in tamil
- Advertisement -

அக்டோபர் 28ஆம் தேதி நள்ளிரவு 11.31 நிமிடத்திற்கு பகுதி சந்திர கிரகணம் ஆனது தொடங்கவிருக்கின்றது. இந்த கிரகணம் உச்சமடையக்கூடிய நேரம் என்றால் அக்டோபர் 29 நளளிரவு 1.44 மணியிலிருந்து அதிகாலை 3.56 வரை நடக்க இருப்பதாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் மூலம் அதிர்ஷ்டம் பெறப்போகும் ஆறு ராசிகள் எவை.

ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஆறு ராசிக்காரர்கள் யார் யார். இந்த கிரகணத்தின் எதிரொளியால் வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க அவரவர் ராசிப்படி என்னென்ன வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விரிவான தகவலை இந்த ஜோதிடம் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

அதிர்ஷ்டம் பெற போகும் 6 ராசிகள்

அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள் என்றால் அந்த பட்டியலில் 6 ராசிகள் இருக்கிறது. மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், கும்பம் இந்த ஆறு ராசிகளுக்கு யோகமான பலன்களை இந்த சந்திர கிரகணம் ஆனது கொடுக்கும். இது தவிர மீதம் இருக்கும் ஆறு ராசிகளான மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மீனம் இவர்கள் எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெரிய அளவில் பாதிப்புகள் வராது கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் அவ்வளவுதான். சரி, இப்ப 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன் என்பதை விரிவாக பதிவை படித்து தெரிந்து கொள்வோமா.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கிரகண பெயர்ச்சி கொஞ்சம் கடினமான கஷ்டத்தை கொடுக்கப் போகிறது. கிரகண நேரத்தில் நீங்கள் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். நள்ளிரவில் கிரகணம் பிடிக்கிறது என்பதால் வெளியிடங்களுக்கு செல்பவர்கள் நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். குறிப்பாக கிரகண நேரத்தில் எந்த சாப்பாடும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த கிரகண சமயத்தில் உங்கள் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் ஆனது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கொடுக்கும். பண வரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கும். இந்த சந்திர கிரகண சமயத்தில் நீங்கள் சந்திர பகவானை மனதில் நினைத்து சந்திர பகவானுக்கு உரிய மந்திரத்தை சொல்லலாம். ‘ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ’ என்ற இந்த மந்திரத்தை கிரகண நேரத்தில் சொல்லுவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய இந்த சந்திர கிரகணம் பல நல்லதை கொடுக்கப் போகின்றது. கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர போகிறீர்கள். எதிர்பார்க்காத இடத்திலிருந்து கைக்கு பணம் வந்து சேரும். உயர் பதவிகள் உங்களுக்கு கிடைக்கும். சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். இருந்தாலும் நீங்கள் பணம் நகை சொத்து பத்திரம் போன்ற விஷயங்களில் எல்லாம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை வெளியிடங்களில் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். கிரகண தோஷம் நீங்க நீங்கள் வள்ளி தேவியானையோடு இருக்கும் முருகப்பெருமானை வணங்க வேண்டும் கிரகண நேரத்தில் சஷ்டி கவசம் படிக்கவும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த கிரகண பெயர்ச்சி கொஞ்சம் வீண்விரய செலவுகளை உண்டு பண்ணும். சொந்த பந்தங்களுக்கு இடையே சண்டை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய வேலையிலும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். செவ்வாய்க்கிழமை தோறும் நீங்கள் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது. கிரகண நேரத்தின் போது துர்க்கை அம்மனின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணப் பெயர்ச்சி பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்டம் பெரிய பொறுப்புகளையும் உங்கள் கையில் கொண்டு வந்து சேர்த்து விடும். எதிர்காலத்திற்கு தேவையான பல நல்ல விஷயங்களை இனி வரக்கூடிய காலகட்டத்தில் தொடங்குவீர்கள். சொந்தத் தொழில் நல்ல முன்னேற்றத்தோடு செல்லும். நஷ்டத்தில் இருப்பவர்கள் கூட நிறைய லாபத்தை சம்பாதிக்க தொடங்கி விடுவீர்கள். இந்த கிரகண சமயத்தில் நீங்கள் குலதெய்வத்தின் நாமத்தை சொல்லி வழிபாடு செய்வது நன்மை தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணப் பெயர்ச்சி சந்திராஷ்டமம் இருக்கிறது. நீங்கள் கிரகண நேரத்தில் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் உஷாராக இருக்கணும். யாருக்கும் பணம் கொடுக்காதீங்க. யாரிடமிருந்தும் பணம் வாங்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. வார்த்தையில் கூடுதல் கவனம் தேவை. யாருக்கும் வாக்கு கொடுத்து விடாதீர்கள். கிரகண நேரத்தில் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை உச்சரியுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகண பயிற்சி ஆனது நன்மை தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இத்தனை நாட்களாக தவமாக தவம் இருந்து முயற்சி செய்த காரியங்கள் எல்லாம் இனி வரக்கூடிய காலகட்டத்தில் வெற்றியை கொடுக்கும். நீங்கள் சிந்திய வியர்வைக்கு உண்டான அர்த்தம் கிடைக்கும். சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். தீராத கஷ்டம் தீரும். மன நிம்மதி பெறுவீர்கள். கிரகண நேரத்தில் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்லுங்கள் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த கிரகண பெயர்ச்சியானது உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதிக காரம் உள்ள பொருட்களை சாப்பிட வேண்டாம். கிரகண நேரத்தில் நீங்கள் கட்டாயம் எதையும் சாப்பிடக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் பணிவோடு நடந்து கொள்ளுங்கள். கோவப்படாதீர்கள், முன்கோபம் உங்களுக்கு பெரிய பிரச்சனையை கொடுத்து விடும். வார்த்தைகளை அளந்து பேசுங்கள். கிரகண நேரத்தின் போது ஓம் முருகா என்ற மந்திரத்தை உச்சரிப்பது நன்மை தரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த கிரகண பெயர்ச்சியானது பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. உங்களிடம் சண்டை போட்டவர்கள் எல்லாம் வந்து நட்புறவு பழகுவார்கள். மேலதிகாரிகள் நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்க போகிறார்கள். வருமானம் அதிகரிப்பதற்கு தேவையான முயற்சிகள் எல்லாம் வெற்றியைக் கொடுக்கும். சந்தோஷமான தருணங்களை சந்திப்பீர்கள். இந்த கிரகண நேரத்தின் போது குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்வது நன்மை தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை வாழ்க்கையில் இருந்து வந்த பெரிய பெரிய சிக்கல்கள் எல்லாம் சரியாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். வேலைக்காக தேர்வு எழுதிவிட்டு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் நல்ல செய்தி வந்து சேரும். வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவதற்கு தேவையான வாய்ப்புகள் எல்லாமே வந்து கதவை தட்டப் போகின்றது. இந்த கிரகண நேரத்தில் விநாயகரது மந்திரத்தை சொல்லுங்கள் நன்மை நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்து வந்த கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் மேலும் கடன் வாங்காத சூழ்நிலையை நீங்கள் தான் உண்டு பண்ண வேண்டும். தொழிலை விரிவு படுத்தலாம். புதிய முதலீட்டை செய்யலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த கிரகண நேரத்தில் பெருமாள் வழிபாடு செய்வது நன்மையை தரும்.

இதையும் படிக்கலாமே: தங்க நகைகளை அதிகமாக சேர்க்க ஆசைப்படும் பெண்கள் இதை செய்தால் போதும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இந்த கிரகண நேரத்தில் வெளியிடங்களில் இல்லாமல் இருப்பது நல்லது. பிரயாணம் செய்யாதீர்கள். ஏதாவது ஒரு இடத்தில் இருக்க வேண்டும். கிரகணம் நடந்து முடியும் வரை வெளியே செல்லக்கூடாது. உங்களுக்கு உடல் அளவில் காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதை, முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். சொந்த தொழிலில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அநாவசியமாக யாரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். கிரகண நேரத்தின்போது துர்க்கை அம்மனை வழிபாடு செய்யவும். செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை அம்மனுக்கு விளக்கு போட்டால் நல்லது நடக்கும்.

- Advertisement -