தீராத பிரச்சனையை தீர்த்து வைக்கும் சப்பாத்திக்கள்ளி

amman8
- Advertisement -

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி மனதில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் ஏராளம். அதில் ஒரு சில பிரச்சனைகளை ஒரு சில பேரிடம் சொல்லி மனதை லேசாக்கி கொள்வோம். ஆனால் ஒரு சில பிரச்சனைகளை நம்மால் நம்முடன் இருக்கும் சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகளை முதலில் இறைவனிடம் போய் சொல்லுவோம்.

சாமிகிட்டை சொல்லியாச்சு. ஆனால் மனது நிம்மதி அடையவில்லை. இன்னும் பாரமாகவே இருக்கிறது என்பவர்கள் இந்த தாந்திரீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். கடவுளுக்கு சக்தி இருக்குதான். இல்லை என்று சொல்ல வரவில்லை. இருந்தாலும் உயிருள்ள இந்த செடியிடம் உங்களுடைய பிரச்சனையை ஒரு முறை சொல்லி பாருங்கள் பிறகு நடக்கும் அதிசயத்தை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

- Advertisement -

பிரச்சினையை தீர்க்கும் சப்பாத்திக்கள்ளி பரிகாரம்

சப்பாத்திக்கள்ளி இது முட்கள் நிறைந்த செடி. பொதுவாக இது ஊருக்கு ஒதுக்குப்புறமாக வளர்ந்திருக்கும். கிராமப்புறங்களில் நிறைய இடங்களில் இந்த செடியை நம்மால் பார்க்க முடியும். இந்த செடிக்கு அப்படி என்ன சக்தி இருக்குது என்று சிந்திக்கிறீர்களா. நீங்கள் இந்த செடியிடம் சொல்லக்கூடிய விஷயத்தை அந்தச் செடி தன் காதில் கேட்டு கொள்ளும். சீக்கிரம் அந்த பிரச்சனைக்கு உண்டான தீவினை கொடுத்து விடுமாம். அப்படி ஒரு சக்தியை இந்த செடிக்கு, இந்த பிரபஞ்சமும் கொடுத்து வைத்திருக்கிறது.

உங்க வீட்டு அக்கம் பக்கத்தில் இந்த சப்பாத்தி கள்ளி செடி வளர்ந்து இருக்கிறதா. ஒரு பேனாவை எடுத்துட்டு போங்க. அந்த சப்பாத்திக்கள்ளி இலைக்கு மேலே உங்களுடைய பிரச்சனையை ஒரே வரியில் எழுதி விடுங்கள். பிறகு கொஞ்சமாக மஞ்சள் பொடியை அந்த செடியை சுற்றி தூவி விட்டு, அந்த தீராத பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் என்று மனதார பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த சப்பாத்தி கள்ளி செடிக்கு முன்பாக ஒரே ஒரு கற்பூரத்தை வைத்து ஏற்றி சாமி கும்பிட்டு வீட்டுக்கு வந்துருங்க அவ்வளவுதான் பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுடைய பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். தட்டை தட்டையாக இலைகள் வளர்ந்து இருக்கக்கூடிய சப்பாத்திக்கள்ளியில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

சப்பாத்திக்கள்ளி உங்கள் கண்களில் பட்டால், சப்பாத்திக்கள்ளி உங்கள் வீட்டு பக்கத்தில் இருந்தால் இந்த பரிகாரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதில் கொஞ்சம் முட்கள் இருக்கும் பரிகாரத்தை செய்யும் போது ஜாக்கிரதையாக செய்யுங்கள். ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தாலே போதும்.

இதையும் படிக்கலாமே: தெரியாத குலதெய்வத்தை கண்டுபிடிக்க தீப வழிபாடு

உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லி வைத்துள்ள பரிகாரம்தான் இது. ஆகவே நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த தாந்திரீகம் சார்ந்த பரிகாரத்தை பின்பற்றுங்கள் குறிப்பாக செவ்வாய்க்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீக எளிய பரிகாரம் தேவை என்பவர்கள் மட்டும் பயன்படுத்தி பலன் பெறலாம்.

- Advertisement -