செவ்வாய்க்கிழமை வீட்டில் தூபம் போடும் முறை

durgai2
- Advertisement -

பொதுவாகவே துர்க்கை அம்மன் வழிபாட்டிற்கு செவ்வாய்க்கிழமை உகந்தது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் துர்கை வழிபாடு செய்தால் காலத்தால் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் தீரும். எந்த கிரகங்களாலும் நமக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுக்க முடியாது. துர்க்கை அம்பாள் வழிபாட்டிற்கு அத்தனை சக்தி உண்டு.

அதுமட்டுமல்லாமல் கண் திருஷ்டியை, ஏவல் பில்லி சூனியம் செய்வினை, போன்ற எதிர்மறை சக்திகளை துவம்சம் செய்யும் கடவுளும் இந்த துர்கை தான். இவளை செவ்வாய் கிழமை நம்முடைய வீட்டிற்கு வர வைப்பது எப்படி. அதாவது செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்பையாலின் அருள் ஆசியைப் பெற நாம் செய்ய வேண்டிய எளிய தூப ஆன்மீகம் வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை தூப வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரு முக்கியமான பொருள் தேவை. நாட்டு மருந்து கடைக்கு செல்லவும். அங்கு போய் ‘மகிஷாஷி’ தூபம் போடக்கூடிய பொருள் தேவை என்று கேளுங்கள். இந்த பெயரைச் சொன்னாலே அவர்கள் புரிந்து கொள்வார்கள். அந்த பொருளை 100 கிராம், 200 கிராம் தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.

அதை வீட்டிற்கு கொண்டு வந்து டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் வீட்டில் பூஜையறையில் விளக்கு ஏற்றி, துர்க்கை அம்மனை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன கொட்டாங்குச்சி அல்லது தேங்காய் நாரில் நெருப்பு மூட்டி கொள்ளுங்கள். அதில் இந்த மகிஷாஷி என்ற சொல்லப்படும் பொருளை தூபம் போல போட வேண்டும்.

- Advertisement -

இந்த மகிஷாசி நெருப்பில் போட்டவுடன் மேலே லேசாக வெடித்து சிதறுவதை காணலாம். இந்த மகிஷாஷி ரூபத்தில், அந்த மகிஷாசுர வர்த்தினையை நம் வீட்டிற்குள் காண முடியும் என்று சொல்கிறது ஆன்மீக குறிப்பு.

இந்த மகிஷாஷினி பொருள் கொண்டு தூபம் போடுவதன் மூலம் அந்த மகிஷாசுரவர்த்தினியின் நடனத்தை, நம் வீட்டில் காண முடியும். அந்த துர்க்கை அம்மனே செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களுக்கு அருள் பாவிப்பாள், இந்த ஒரு பொருளை செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் வீட்டில் தூபம் போட்டால்.

- Advertisement -

நிச்சயம் இதை சொல்லும் போது யாரும் நம்ப மாட்டீங்க. ஆனால் நம்பிக்கையோடு துர்க்கை அம்மனை வேண்டி இந்த ஒரு தூபத்தை வீட்டில் போட்டு பாருங்கள். வீட்டில் துஷ்ட சக்திகளால் ஏற்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு தெரியும். வீட்டை பிடித்த பீடை ஒழியும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலவும்.

குடும்பத்தில் திருமண தடை, குழந்தை பாக்கியத்தில் தடை, பிள்ளைகளுக்கு வேலை கிடைப்பதில் தடை, கணவனுக்கு சரியான வேலை இல்லை, வருமானம் இல்லை, கணவர் தவறான போக்கில் செல்கிறார் அல்லது கணவன் மனைவி ஒற்றுமை இல்லை. மனைவியை விட்டு கணவன் பிரிந்து வாழ்கிறார்கள். மனைவி கணவனை விட்டு பிரிந்து வாழ்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே: வராத பணம் நம் வீடு தேடி வர பரிகாரம்

இப்படி எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு கட்ட இந்த ஒரு தூபம் போதும். மேலே சொன்னபடி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் துர்கை அம்பாலின் ஆசிர்வாதத்தை பெறுங்கள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -