வராத பணம் நம் வீடு தேடி வர பரிகாரம்

varamilagai
- Advertisement -

நிறைய பேர் அடுத்தவர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாந்து இருப்பார்கள். சில பேர் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன் என்று சொல்லுவார்கள். ஆனால், அவர்களால் கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். சில பேர் வேணும்னே நம்ம பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றுவார்கள்.

இப்படி உங்களுடைய பணம் அடுத்தவர்கள் கையில் எந்த வழியில் சிக்கி இருந்தாலும் சரி, அதை மீண்டும் எந்த சேதாரமும் இல்லாமல் திரும்பப் பெற இந்த பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

கொடுத்த பணத்தை திரும்பவும் பெற வரமிளகாய் பரிகாரம்

பரிகாரத்திற்கு ஏதாவது ஒரு, ரூபாய் நோட்டு தேவை. 100 ரூபாய் நோட்டு, 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டு, எது வேண்டும் என்றாலும் உங்கள் சகோதரியத்துக்கு எடுத்துக்கோங்க. 100 ரூபாய்க்கு குறைவாக எடுக்க வேண்டாம். ஒரு சின்ன காகிதத்தில் உங்களுக்கு எவ்வளவு பணம் வர வேண்டி இருக்கிறது. அந்தத் தொகையை எழுதி, அந்த பணம் அந்த நபரிடம் இருந்து சீக்கிரம் என் கைக்கு திரும்பவும் வர வேண்டும் என்று எழுதிக் கொள்ளவும்.

உதாரணத்திற்கு சுரேஷிடம் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் கடன் சீக்கிரம் என் கைக்கு வரணும் அப்படின்னு எழுதலாம். இந்த பேப்பரை அந்த நோட்டில் வையுங்க. அந்த பேப்பருக்கு நடுவில் காம்பு உடையாத முழு வரமிளகாய் ஒன்றை வைத்து, அந்த நோட்டை அப்படியே சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி உங்கள் உள்ளங்கையில் வைத்து சீக்கிரம் பணம் உங்கள் கைக்கு வர வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் வேண்டிக் கொண்டு இந்த நோட்டை பத்திரமாக பீரோ, அலமாரி, பர்ஸ் எங்கையாவது எடுத்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதாவது ஒரு ரூபாய் நோட்டு அதன் மேல் நீங்கள் எழுதிய காகிதம். அந்த காகிதத்துக்கு நடுவில் ஒரு வர மிளகாய். இப்போது அந்த நோட்டை அப்படியே இந்த பொருட்களோடு சேர்த்து சுருட்டி நூல் போட்டு கட்டி வைக்கணும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பரிகாரம் செய்த ஒரு சில நாட்களில் உங்கள் பணத்தை வசூல் செய்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்களுடைய பணம் சீக்கிரமா உங்கள் கையை வந்து சேரும். உங்கள் பணம் உங்கள் கைக்கு கிடைத்த பிறகு அந்த வரமிளகாயை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுடுங்க. பேப்பரை எடுத்து கிழித்து போட்டுடுங்க.

இதையும் படிக்கலாமே: தீராத தொல்லை தீர குங்கும வழிபாடு

அந்த ரூபாய் நோட்டை எடுத்து ஏதாவது உணவு பொருளை வாங்கி இல்லாதவர்களுக்கு அன்னதானம் செய்து விடுங்கள். நிச்சயம் நீங்கள் இழந்த பணத்தை உங்களுக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். கை மேல் பலன் கிடைக்கும் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -