செவ்வாய்க்கிழமை அஷ்டமியில் பைரவர் வழிபாடு

bairavar1
- Advertisement -

இன்று செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய வளர்பிறை அஷ்டமி திதி. செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு உரியது. கடன் பிரச்சனைக்கு தீர்வு தர இதை விட ஒரு நல்ல நாள் கிடையாது. அதேசமயம் வளர்பிறை அஷ்டமி திதியும் இன்று வந்திருப்பதால், பைரவருக்கு ரொம்ப ரொம்ப உகந்த நாள்‌.

இன்று மாலை 5:45 மணிக்கு ராமர் அவதரித்த நவமி திதியும் பிறந்து விடுகிறது. ஆக நீங்கள் பைரவரை வழிபாடு செய்யும்போது உங்களுக்கு எத்தனை இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கப் போகிறது பாருங்கள். இந்த நாளை யாரும் தவற விடாதிங்க.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அஷ்டமியில் பைரவர் வழிபாடு

இன்று மாலை உங்கள் வீட்டில் பக்கத்தில் இருக்கக்கூடிய பைரவர் சன்னிதானத்தில் விசேஷ பூஜைகள் அபிஷேகங்கள் ஆராதனைகள் நடக்கும். அதில் கட்டாயம் கலந்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த பொருட்களை வைரவருக்கு வாங்கிப் போய் கொடுக்கணும். கூடவே ஒரு வெற்றிலை, கிழிசல் இல்லாத நல்ல வெற்றிலையாக வாங்கிக் கொள்ளுங்கள். அரகஜா ஒரு டப்பா வாங்கிக்கோங்க.

வெற்றிலைக்கு நடுவே கொஞ்சமாக இந்த அரகஜாவை எடுத்து பூசிக்கொள்ளுங்கள். வெற்றிலை பாக்கு பூ பழம் எல்லாம் பைரவருக்கு அர்ச்சனை செய்ய கொடுப்பீர்கள் அல்லவா, அப்போது இந்த வெற்றிலையையும் அதோடு வைத்துக் கொடுங்க. பைரவருக்கு அர்ச்சனை செய்து அந்த வெற்றிலை மீண்டும் உங்கள் கைக்கே வந்துவிடும்.

- Advertisement -

வெற்றிலை வெற்றிக்கு உரிய ஒரு பொருள். இதை அனுமனுக்கு உரிய பொருள் என்று சொல்லலாம். ராமருக்கு உரிய பொருள் என்று சொல்லலாம். முருகப்பெருமானுக்கு உரிய பொருள் என்று சொல்லலாம். இதை பைரவர் பாதத்தில் வைத்து எடுத்து இருக்கீங்க. பைரவருக்கு பிடிச்ச அரகஜாவை அதில் தடவி இருக்கீங்க. இந்த வெற்றிலையை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, பைரவரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

எனக்கு செல்வ வளம் மேலும் மேலும் உயர வேண்டும். வருமானம் மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும். சீக்கிரம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த வெற்றிலையை அப்படியே கொண்டு போய் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும். பணப்பெட்டியில் நிறைய பணம் சேரும். அப்ப தானாகவே உங்கள் கடன் அடைய தொடங்கிவிடும்.

- Advertisement -

வருமானம் அதிகரித்துவிட்டால் கடனை கொடுக்க நாம் ஏன் கஷ்டப்பட போகின்றோம். ஆகவே இன்று பைரவரை நினைத்து மேல் சொன்ன வழிபாட்டை செய்யுங்கள். எல்லா கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்கும். செல்வ செழிப்பும் உயரும். ஐந்து நாட்கள் கழித்து வாடிய வெற்றிலையை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். அடுத்த வளர்பிறை அஷ்டமிக்குள் உங்களுடைய பிரச்சனையில் பாதி குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் தீர ராமநவமி

நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு அந்த பைரவர் நிச்சயம் கை கொடுத்து உதவி செய்வார். அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. நீங்க கஷ்டத்தில் இருந்தால் இந்த வழிபாடு உங்களுக்கு நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில் இந்த பரிகாரத்தை உங்களோடு பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியில் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -