செவ்வாய்க்கிழமை இதை மட்டும் தவறாமல் செய்யுங்கள் போதும். உங்களுடைய குடும்பத்தில் சந்தோஷம் ஒரு துளி அளவும் குறையாது. நாளுக்கு நாள் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

kala-bairavar-vilakku
- Advertisement -

குடும்பம் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே, நம்மால் எதையாவது சாதிக்க முடியும். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, சண்டை சச்சரவோடு இருக்கக்கூடிய குடும்பத்தில் வாழ்ந்து வந்தால் அவர்களால் வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. பிரச்சனையை நினைத்துக் கொண்டே துவண்டு போக வேண்டியதுதான். சந்தோஷமான மனைவி, சந்தோஷமான கணவர், சந்தோஷமான பிள்ளைகள், சந்தோஷமான மற்ற உறவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததுதான் நம்முடைய வெற்றி. ஒருவருடைய பலமும் அவர்களுடைய குடும்பம் தான். ஒருவருடைய பலவீனமும் அவர்களுடைய குடும்பம் தான்.

நமக்கு ரொம்பவும் பிடித்த உறவுகள் நம்மிடம் சண்டை போட்டு பிரிந்து விட்டால், அதை நம்முடைய மனது தாங்கவே தாங்காது. எப்படியாவது இவர்களை நம்மிடம் பேச வைத்து விட வேண்டும். எப்படியாவது இவர்களோடு நட்புறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்போம். இதற்கு சில பல முயற்சிகளையும் எடுப்போம். ஆனால் எல்லாம் தோல்வியில் முடியும். இப்படி முரண்டு பிடிக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் நம் வசம் படுத்திக் கொள்ள ஒரு வழி உள்ளது. இதற்கான ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

குடும்ப ஒற்றுமைக்கு செய்ய வேண்டிய பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று ராகு கால நேரத்தில் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை 3.00 மணியிலிருந்து 4.30 முப்பது மணிக்குள் பைரவர் சன்னிதானத்தின் முன்பு இரண்டு மண் அகல் விளக்குகளில், நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, செவ்வரளி பூக்களை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்து விட்டு, துவரம் பருப்பால் செய்த ஏதாவது ஒரு பிரசாதத்தை நிவேதனமாக செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.

சாம்பார் சாதம், துவரம் பருப்பு சுண்டல் இப்படி என்ன பிரசாதமாக இருந்தாலும் சரிதான். இப்படி பைரவரை வழிபாடு செய்து குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. பிரிந்த உறவுகள் கூட ஒன்று சேரும்.

- Advertisement -

குறிப்பாக கணவன் மனைவிக்குள் சண்டை இருந்தால் கூட இந்த வழிபாட்டை தொடர்ந்து நம்பிக்கையோடு செய்து வந்தால் அந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர கூட வாய்ப்புகள் உள்ளது. (பரிகாரத்தை செய்தாலும், ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணம் தம்பதிகளாக இருக்கும் இருவரில் யாருக்காவது ஒருவருக்கேனும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்கும்.)

இதையும் படிக்கலாமே: குபேரனை இப்படி வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி குவிந்து கொண்டே இருக்குமா? குபேரனை பற்றி அறியாத ரகசியங்கள்!

இந்த வழிபாட்டை செய்யும் போதே மாதுளம் பழங்களை தானமாக கொடுத்து வர வேண்டும். இந்த மாதுளை பழ தானத்தை எந்தக் கிழமையில் வேண்டும் என்றாலும் கொடுக்கலாம். யாருக்கு வேண்டும் என்றாலும் கொடுக்கலாம். உங்களால் முடிந்தால் குழந்தைகள் காப்பகம், முதியவர்கள் காப்பகம், இருக்கும் அல்லவா அங்கு சென்று அவர்களுக்கு இந்த மாதுளம் பழத்தை சாப்பிடுவதற்காக தானம் கொடுப்பது ரொம்ப ரொம்ப நல்லது. குடும்பத்தில் இருக்கும் சந்தோஷம் நிலைக்கும். பங்காளிகளுக்குள் சொத்து பிரச்சனை ஏதாவது இருந்தால் கூட அது சுமூகமாக முடிவுக்கு வரும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரங்களை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -