கடன் தீர சித்ரா பௌர்ணமி தின வழிபாடு

pournami2
- Advertisement -

நம்முடைய கஷ்ட நஷ்டங்கள் நம்மை விட்டு தூரம் செல்ல வேண்டும் என்றால், நாளைய தினம் அனைவரும் சித்ரா பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சந்திரனின் ஒளி, இந்த பூமியில் பிரகாசமாக விழும் நேரம், நேர்மறை ஆற்றல் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருக்கும் நேரம், இந்த சமயத்தில் நாம் வைத்த வேண்டுதல் நிச்சயம் பலிக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது.

23.4.2024 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் சித்ரா பௌர்ணமி நாளில் கடன் சுமை குறைய, நாம் செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் பற்றிய விரிவான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கடன் தீர சித்ரா பௌர்ணமி வழிபாடு

செவ்வாய்க்கிழமை என்றாலே முருகப்பெருமானுக்கு உரிய தினம். வாங்கிய கடனை எல்லாம் சீக்கிரம் திருப்பிக் கொடுக்க இந்த முருகப்பெருமானை, செவ்வாய்க்கிழமையில் வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. இந்த செவ்வாய்க்கிழமையில் சித்ரா பௌர்ணமியும் சேர்ந்து வந்திருக்கிறது. அப்போது இந்த நாளுக்கு இரட்டிப்பு மடங்கு சக்தி உள்ளது.

ஒரு பித்தளை தாம்பூல தட்டு எடுத்துக்கோங்க. இல்லாதவங்க மட்டும் சில்வர் தட்டு பயன்படுத்துங்க. அதில் இரண்டு கைப்பிடி துவரம் பருப்பை பரப்பி விடுங்கள். அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த விளக்குக்கு பக்கத்தில் ஏதாவது ஒரு இனிப்பு பிரசாதம் இருக்க வேண்டும்.

- Advertisement -

கடையில் வாங்கிய ஸ்வீட்டு, ஒரு சாக்லேட் இருந்தா கூட போதும். அது உங்களுடைய சௌகரியம். இந்த தயார் செய்த தட்டை அப்படியே வெட்டவெளியில் இருக்கக்கூடிய இடத்தில் வைக்கவும். அதாவது நாளை மாலை சந்திரன் உதயமாகும் நேரம் ஒரு 6:30 மணிக்கு உங்கள் வீட்டு மொட்டை மாடிக்கோ, பால்கனிக்கோ சந்திர தரிசனம் வரும் என்றால், அந்த இடத்தில் இந்த தட்டை வைத்து, அந்த தட்டுக்கு முன்பு நீங்கள் அமர்ந்து சந்திர பகவானை அம்மனை, முருகப்பெருமானை, குலதெய்வத்தை, நினைத்து உங்கள் கடன் சுமை குறைய வேண்டும் என்று பத்து நிமிடங்கள் கண்களை மூடி ஆழ்மனதில் நினையுங்கள்.

அது போதும். பிரார்த்தனையை முடித்துவிட்டு இந்த சாக்லேட்டை எடுத்து சாப்பிடுங்க. பத்து நிமிடம் பிரார்த்தனை முடிந்ததும், இந்த விளக்கை கொண்டு வந்து வீட்டிற்குள் வைத்து விடுங்கள். எண்ணெய் இருந்து வீட்டிற்குள் இன்னும் கொஞ்சம் நேரம் விளக்கு எரிந்தாலும் தவறு கிடையாது.

- Advertisement -

விளக்கு எரிந்து முடிந்த பின்பு, அடுத்த நாள் தான் இந்த தட்டை நீங்கள் எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். விளக்கை எடுத்து, சுத்தம் செய்து வைத்து விடுங்கள். அந்த துவரம் பருப்பை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து, பசு மாட்டுக்கு கொடுக்கலாம். அல்லது உங்க மொட்டை மாடியில் பறவைகள் வரும் என்றால், அந்த பறவைகளுக்கு இதை இறையாக போடலாம்.

இதையும் படிக்கலாமே: சித்ரா பௌர்ணமி வழிபாடு 2024

இந்த வழிபாடு அற்புதமான பலனை கொடுக்கும். நிறைய பணம் வேண்டும், சொந்த வீடு கட்ட வேண்டும், கடன் சுமை குறைய வேண்டும் என்று இந்த மூன்று வேண்டுதலில் எந்த வேண்டுதலை வைத்தாலும், அது நிச்சயம் பலிக்கும். ஏனென்றால் இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமாக இருப்பது செவ்வாய் பகவான் தான். செவ்வாய்க்கிழமையில் வந்திருக்கும் பௌர்ணமி நாளில் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாடு அனைவருக்கும் கை மேல் பலன் தரும் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -