சித்ரா பௌர்ணமி வழிபாடு 2024

- Advertisement -

இந்த சித்ரா பௌர்ணமி வழிபாடு ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு முறைப்படி பாரம்பரியமாக வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கும். சித்ரா பௌர்ணமி அன்று நம்முடைய பூஜை அறையில் எந்தெந்த பொருட்களை எல்லாம் வைத்து வழிபாடு செய்வது, சித்ரா பவுர்ணமி நாளில் எந்தெந்த பிரசாதங்கள் கட்டாயமாக நெய்வேதியமாக படைக்கப்பட வேண்டும், என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில சுவாரசியமான தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சித்ரா பௌர்ணமி வழிபாடு 2024

நிறைய பேர் வீடுகளில் சித்ரா பௌர்ணமி அன்று பூஜை அறையில் முறம், விசிறி, மட்டை தேங்காய், நோட்டு பேனா, இந்த பொருட்களை எல்லாம் வைத்து வழிபாடு செய்வார்கள். வெறும் முறம் மட்டும் பூஜை அறையில் வைக்க மாட்டார்கள். அதன் மேலே கொஞ்சம் நவ தானியங்களை வைத்து பூஜை அறையில் வைப்பார்கள்.

- Advertisement -

பாரம்பரியமாக இந்த பொருட்கள் எல்லாம் சித்ரா பௌர்ணமி பூஜையில் இடம்பெற வேண்டும் என்பது நமக்கு சொல்லப்பட்ட விஷயம். இது எத்தனை பேருக்கு தெரியும். உங்க வீட்ல இது போல பழக்கம் இருக்கான்னு, கமெண்ட் பண்ணுங்க தெரியாதவங்க தெரிஞ்சுக்கட்டும்.

சரி, உங்க வீட்ல அரிசி புடைக்கும் முறம் இருக்கிறதா. கட்டாயம் ஒவ்வொரு வீட்டிலும் அரிசி புடைக்கும் முறம், மூங்கிலால் பின்னப்பட்ட முறம் 2 இருக்க வேண்டும். இப்போது எல்லாம் பிளாஸ்டிக் முறம் வந்துவிட்டது. உங்க வீட்டில் பிளாஸ்டிக்கில் முறம் இருந்தால், இன்றே கடைக்கு சென்று இந்த மூங்கிலால் செய்யப்பட்ட முறம் இரண்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் முறம் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யக்கூடிய வழக்கம் இல்லை என்றாலும் பரவாயில்லை. இந்தப் பௌர்ணமிக்கு அரிசி புடைக்கும் முறத்தை வாங்குங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். நாளை செவ்வாய்க்கிழமை சில பேர் செவ்வாய்க்கிழமை முறம் வாங்க மாட்டாங்க.

அதனால்தான் இன்றே முறம் வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல மூங்கிலால் செய்யப்பட்ட விசிறி கிடைத்தால் அதுவும் வாங்கலாம் நல்லது. உங்களுடைய வீட்டு வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி, நாளைய தினம் ஒரு புது நோட்டு, ஒரு பேனா வாங்கி பூஜையறையில் வைத்து வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப நல்லது.

- Advertisement -

முடிந்தால் 10 நோட்டு, 10 பேனா வாங்கி படிக்கும் குழந்தைகளுக்கு தானம் கொடுங்கள். ரொம்ப பணக்கஷ்டத்தில் இருந்தால் 10 பென்சில் வாங்கியாவது பத்து குழந்தைகளுக்கு தானம் செய்யலாம். ஏனென்றால் சித்திரகுப்தன் எப்போதுமே கையில் எழுத்தாணியோடும், பனை ஓலையுடம் இருப்பார். அது இரண்டையும் நம்மால் வாங்க முடியாது. அதனால் நோட்டு பேனா வாங்கிக் கொள்ளலாம்.

சித்ரா பௌர்ணமி பிரசாதம்

சித்ரா பௌர்ணமி நாளில் பொதுவாக கலவை சாதம் செய்வார்கள். எல்லோர் வீட்டிலும் இது வழக்கமாக இருக்கும். இது தவிர சித்ரா பௌர்ணமிக்கு உப்பு போடாத வெண்பொங்கல் சில பேர் வீடுகளில் செய்வார்கள்.

மொச்சை காராமணி இது போன்ற ஏதாவது ஒரு பயிரை ஊறவைத்து சுண்டல் செய்து வைக்க வேண்டும். சிலபேர் வீடுகளில் பச்சை மாங்காவில் பச்சடி செய்து இறைவனுக்கு படைக்க கூடிய வழக்கமும் இருக்கும். உங்கள் வீட்டு பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நாளைக்கு பிரசாதமாக செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: கர்ம வினைகள் தீர சித்ரா பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

உங்கள் வீட்டில் இந்த சித்ரா பௌர்ணமி பூஜை செய்வது வழக்கம் இல்லை என்றால், நாளைய தினம் உங்களால் முடிந்த கவலை சாதம், சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல், செய்து பூஜையறையில் நிவேதியமாக வைத்து சந்திர பகவானை நினைத்து, சித்திரகுப்தனின் நினைத்து, வழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் சித்ரா பௌர்ணமி தினத்தில் நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் இவ்வளவுதான். நம்பிக்கை உள்ளவர்கள் இதையெல்லாம் பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -