செவ்வாய் தோஷம் நீங்க செய்ய வேண்டிய எளிமையான பரிகாரம்.

sivan6
- Advertisement -

ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லி, அதை நம்முடைய மனதில் ஆழமாக பதிய வைத்து விட்டால், நல்லது கூட கெட்டதாக மாறிவிடும். அப்படித்தான் இந்த செவ்வாய் தோஷமும். செவ்வாய் தோஷம் என்றால் பெரிய கொடுமையான ஜாதகத்தைக் கொண்டவர்கள் என்று நம்முடைய மனதில், அந்த காலத்திலிருந்து முன்னோர்கள் சொல்லி சொல்லி பதிய வைத்து விட்டார்கள். செவ்வாய் தோஷம் என்றால் அவ்வளவு பெரிய பாவப்பட்ட ஜாதகம் எல்லாம் கிடையாது.

செவ்வாய் தோஷ காரர்களும், ராசியானவர்கள் தான். அவர்களை ஒதுக்கி வைக்காதீங்க. உங்களுடைய ஜாதகத்திலும் செவ்வாய் தோஷம் இருக்கா. நிஜமாவே அது செவ்வாய் தோஷம் தானா என்று நன்றாக ஜோதிடம் தெரிந்த, ஜோதிடரிடம் ஒரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த செவ்வாய் தோஷத்தால் உண்மையிலேயே நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த பரிகாரம் உங்களுக்காக.

- Advertisement -

திருமணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்குதா, திருமணம் ஆகியும் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறீர்களா, வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை, சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனையால் சிக்கி சின்னாபின்னமா போனவர்களா இருந்தாலும் இந்த வழிபாடு நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும்.

செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்

செவ்வாய் தோஷம் என்றாலே முருகர் வழிபாடு தாங்க. நீங்க முருகரின் பாதங்களை இறுக்கப் பற்றிக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை என்றால் முருகர் கோவிலுக்கு போய் வழிபாடு செஞ்சிரனும். முருகர் கோவிலில் இருக்கக்கூடிய நவகிரக சன்னிதானத்திற்கு சென்று செவ்வாயை வழிபாடு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு கந்த கோட்டம் இருக்கிறது.

- Advertisement -

அந்த கந்த கோட்டம் முருகன் கோவிலில், நவகிரகங்களும் இருக்கிறது. அந்த முருகரை சென்று வழிபாடு செய்து, அந்த கோவிலில் இருக்கும் நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு, செவ்வாய்க்கிழமையில் விளக்கு போட வேண்டும். ஒரு தொன்னையில் இரண்டு கைப்பிடி துவரம் பருப்பு போட்டு, செவ்வாய் பகவான் முன்பாக வைத்து விடுங்கள்.

இரண்டு மண் அகல் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். இந்த விளக்கை செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் போடுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. 7 வாரம் செவ்வாய் பகவானை இதே போல வழிபாடு செய்யுங்கள். ஏழு வாரம் முடித்துவிட்டு, கும்பகோணத்தில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோவிலில் சென்று அந்த ஈசனை வழிபாடு செய்து விடுங்கள். உங்களுக்கு எவ்வளவு பெரிய செவ்வாய் தோஷமாக இருந்தாலும் அது ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

குறிப்பாக இந்த வழிபாட்டை சென்னையில் இருக்கும் கந்த கோட்டத்துக்கு தான் சென்று செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கும் சென்று இதேபோல வழிபாடு மேற்கொள்ளலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரம் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -