செவ்வாய் தோஷம் பரிகாரம்

- Advertisement -

தோஷங்களில் மிக அதிகமான ஒரு கேள்விப்பட்டதும், பரிட்சயப்பட்டதுமான ஒரு தோஷம் செவ்வாய் தோஷம் ஆகும். செவ்வாய் தோஷம் என்றாலே திருமணம் ஆகாது என்கிற எதிர்மறையான சிந்தனை நம் சமூகத்தில் பலரிடமும் மனதில் ஆழப் பதிந்து விட்டது. ஆனால் இறைவனின் மீது நம்பிக்கை கொண்டு சில பரிகாரங்களை செய்வதால் செவ்வாய் தோஷம் கொண்டவர்களுக்கும் நல்வாழ்க்கை அமையும் என்பது உறுதி. அப்படிப்பட்ட சில செவ்வாய் தோஷ பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் தோஷம் விலக பரிகாரம்

செவ்வாய் தோஷத்திற்குரிய சிறந்த பரிகார தலமாக இருப்பது தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கின்ற வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாதசுவாமி – தையல் நாயகி சமேத திருக்கோயிலாகும். இந்த திருக்கோயில் நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்குரிய கோவிலாக விளங்குகிறது. இக்கோயிலில் செவ்வாய் பகவானின் அம்சமாக இருக்கின்ற முருகப்பெருமானுக்கு மாலை மற்றும் வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதால் மிக விரைவிலேயே செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமண வாழ்க்கை அமையும் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.

- Advertisement -

செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற திருமண வயதுள்ள ஆண் அல்லது பெண் மற்றொரு செவ்வாய் தோஷ பாதிப்பு ஜாதகம் கொண்ட ஒரு ஆணை அல்லது பெண்ணையோ திருமணம் செய்வதால் மைனஸ் இன்டு மைனஸ் பிளஸ் என்கிற கணித கோட்பாட்டின் அடிப்படையில் இரண்டு செவ்வாய் தோஷங்கள் உள்ள ஜாதகங்கள் ஒன்றாக சேர்வதால், அந்த தோஷத்தின் தன்மை திருமண வாழ்க்கையில் இணையம் அந்த இருவருக்கும் நேர்மறை பலனை தர வல்லதாக மாறிவிடும் என அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டு திருமணம் தாமதமாகும் நிலையில் இருப்பவர்கள். செவ்வாய்க்கிழமைகள் தோறும் “மங்களவார விரதம்’ எனப்படும் “செவ்வாய்க்கிழமை விரதம்” மேற்கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமைளில் இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு அம்மனின் அருளும், முருகப்பெருமானின் அருளும் ஒரு சேர கிடைத்து அவர்களின் செவ்வாய் தோஷம் பலவீனப்பட்டு மிக விரைவிலேயே அவர்களுக்கு மனதிற்கினிய திருமண வாழ்க்கை உண்டாகும்.

- Advertisement -

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்து, அதனால் திருமணம் அமையாமலும், வாழ்க்கையில் பல நற்பலன்கள் ஏற்படாமலும் அவதிப்படுபவர்கள் உயர்தரமான செந்நிற பவளத்தை வெள்ளி மோதிரத்தில் பதித்து, உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்ள வேண்டும். கழுத்தில் அணிகின்ற வெள்ளி சங்கிலியிலும் செம்பவளத்தை பதித்து அணிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: சர்ப்ப சாந்தி பரிகாரம்

திருமண வாழ்க்கை அமையாமலும், வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடைய இயலாமலும் போவதற்கு தங்களின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் காரணமாக இருப்பின், செவ்வாய் பகவானின் அம்சம் நிறைந்த துவரம் பருப்புகளை திங்கட்கிழமை இரவு ஊற வைத்து, மறுநாள் காலை அந்த பருப்புகளை பறவைகளுக்கோ அல்லது பசு மாடுகளுக்கோ உணவாக உண்ணக் கொடுப்பதாலும் செவ்வாய் தோஷம் நீங்கி நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -