சர்ப்ப சாந்தி பரிகாரம்

- Advertisement -

ஜாதகத்தில் இருக்கின்ற ராகு – கேது ஆகிய இரு கிரகங்கள் பாதகமான அமைப்பில் இருக்கும் பொழுது ஒருவருக்கு சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த சர்ப்ப தோஷங்கள் மொத்தம் 12 வகைகளாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை ஏற்படுத்தக்கூடிய இந்த சர்ப்ப தோஷம் நீங்கி, வாழ்வில் நன்மைகள் ஏற்பட செய்ய வேண்டிய சர்ப்ப சாந்தி பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

சர்ப்ப சாந்தி பரிகார முறை

ஜாதகத்தில் சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆடி மாதத்தில் வருகின்ற நாகபஞ்சமி தினத்தன்று காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் கிருஷ்ண பரமாத்மாவை வழிபாடு செய்த பிறகு, 11 தேங்காய்களை உங்களின் நாக தோஷம் சர்பதோஷம் நீங்க வேண்டும் என மனதார வேண்டி, ஓடும் தண்ணீரில் விட்டு விட வேண்டும். மேலும் அதே தினத்தில் பாம்பு புற்று உள்ள கோயிலுக்கு சென்று, அந்த புற்றிற்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

ராகு பகவானுக்குரிய மந்திரத்தை தினமும் 108 முறையை துதித்து வருபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற சர்பதோஷம் நிவர்த்தியாகி, சர்ப்ப சாந்தி உண்டாகி வாழ்வில் நன்மையான பலன்கள் ஏற்படும். மேலும் தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் ஒரு ஆலமரத்திற்கு நீரூற்றி வருவதும் சர்ப்ப சாந்தி பரிகாரங்களில் ஒன்றாக இருக்கிறது.

நவரத்தினங்களில் அகேட்(AGATE) எனப்படும் நவரத்தின கற்களால் செய்யப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொள்வதாலும், ஜாதகத்தில் இருக்கின்ற சர்ப்ப தோஷத்தின் பாதிப்பு ஏற்படாமல் அந்த ஜாதகரை காக்கும். ஆன்மீக பொருட்கள் விற்பனை செய்கின்ற கடைகளில் மலிவான விலையில் தற்பொழுது இந்த அகேட் மாலைகள் கிடைக்கின்றன.

- Advertisement -

ஜாதகத்தில் இருக்கின்ற சர்ப்ப தோஷம் நீங்கி வாழ்வில் நற்பலன்கள் ஏற்பட விரும்புபவர்கள், தங்களால் இயலும் பட்சத்தில் திங்கட்கிழமைகளில் சிவன் கோயிலில், சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபாடு செய்வதால் சர்ப்ப தோஷங்கள் நீங்கி நல்ல பலன் கிடைக்கப் பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே: பித்ரு தோஷ பரிகார கோயில்

தினந்தோறும் காலை எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு, பிறகு வீட்டு பூஜையறையில் இருக்கின்ற முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி, கந்த சஷ்டி கவச மந்திர பாராயணம் செய்து வருவதாலும் ஜாதகத்தில் இருக்கின்ற சர்ப தோஷங்கள் நீங்கி சர்ப்ப சாந்தி ஏற்பட்டு நற்பலன்கள் உண்டாகும்.

- Advertisement -