செவ்வாய்க்கிழமை மாலை இதை மட்டும் செய்தால் போதும். உங்கள் வாழ்க்கையில் கடன் என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது.

prayingman-murugan
- Advertisement -

மாதத்தின் முதல் வாரத்தில் கை நிறைய சம்பளம் வந்தாலும், மாதத்தின் இறுதி வாரத்தில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. காரணம், கைக்கு வந்த சம்பள பணம் எல்லாம் இஎம்ஐ, டியூ கட்டியே காலியாகி விடுகிறது. மாத இறுதி நாட்களை நடத்திச் செல்ல மீண்டும் கடன் வாங்கித்தானே ஆகவேண்டும். அடுத்த மாதம் சம்பளம் வந்தவுடன் மீண்டும் கடனை திருப்பிக் கொடுப்போம். மீண்டும் இஎம்ஐ, இப்படியே நம்முடைய வாழ்க்கையை எத்தனை நாட்கள்தான் ஓட்டுவது. கடன் இல்லாமல் வாங்கிய சம்பளத்தை கையில் வைத்துக்கொண்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு ஆன்மீக ரீதியான ஒரு சுலபமான வழிபாட்டுமுறை.

நம் எல்லோருக்கும் தெரியும். செவ்வாய்க்கிழமை என்றால் கடனை அடைப்பதற்கு உகந்த நாள் என்று. இதோடு சேர்த்து செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகவும் இருக்கிறது. செவ்வாய்க்கிழமை அன்றுமுருகப் பெருமானை நினைத்து இந்த ஒரு வழிபாடு செய்தால் போதும். உங்களுடைய வாழ்க்கையில் செல்வ வளம் நிலையாக தங்கும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேலாக முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். முருகன் கோவிலுக்கு செல்லும் போது உங்களுடைய மனதில் ‘ஓம் முருகா’ ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை மனதார சொல்லிக்கொண்டே கோவிலுக்குள் முருகப்பெருமானை தரிசனம் செய்ய செல்லுங்கள். அதன்பின்பு முருகப்பெருமானுக்கு 6 மண் அகல் தீபங்கள் நெய் ஊற்றி ஏற்றப்பட வேண்டும்.

ஆறுபடையப்பனுகாக, ஆறுமுக வேலனுக்காக என்று மனதார நினைத்து இந்த தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பின்பு முருகப்பெருமானுக்கு உங்களால் முடிந்த பூக்களை வாங்கி செல்லலாம். குறிப்பாக செவ்வரளி பூ, முல்லைப் பூ, முருகனுக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது. முருகப் பெருமானை மனதார தரிசனம் செய்துவிட்டு, அதன் பின்பு முருகப்பெருமானை 12 முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

முருகன் கோவிலை 12 முறை பிரதட்சணம் செய்து விட்டு, நமஸ்காரம் செய்து கொண்டு, முருகப் பெருமான் சந்நிதியில் அமர்ந்து ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை உச்சரித்து கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்று மனதார தியானம் செய்யவேண்டும். ஒரு 10 நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்தால் கூட போதும். அந்த முருகப் பெருமானின் அருளால் உங்களுடைய கடன் பிரச்சனை படிப்படியாக குறையத் தொடங்கிவிடும்.

வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய் கிழமைகளில், இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். தொடர்ந்து 48 வாரம் செவ்வாய்க்கிழமை முடிவதற்குள் உங்களுடைய அத்தனை கடன் பிரச்சினைக்கும் ஒரு விமோசனம் கிடைத்திருக்கும். இந்த வழிபாட்டினை ஆண்களும் செய்யலாம். பெண்களும் செய்யலாம். பெண்களுக்கு கோவிலுக்கு செல்ல முடியாத நாட்கள் வரும்போது, அந்த பாரத்தை மட்டும் தவிர்த்துவிட்டு அடுத்த வார்த்தை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். வரக்கூடிய வருமானத்தை வைத்து ராஜ வாழ்க்கை வாழவில்லை என்றாலும், நமக்கான கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை அந்த ஆண்டவன் நிச்சயம் காட்டிக் கொடுப்பான் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -