புது வீடு கட்ட செவ்வாய்க்கிழமை துவரம் பருப்பு பரிகாரம்

murugan
- Advertisement -

முதலில் இன்னைக்கு என்ன அப்படி அற்புதம் வாய்ந்த நாள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா. இன்று தேதி 9 செவ்வாய்க்கிழமை. செவ்வாய் கிரகத்தின் எண் 9. ஆகவே செவ்வாய்க்கிழமையும் ஒன்பதாம் தேதியும் சேர்ந்து வந்திருப்பதால் இன்றைய தினம் செவ்வாய் பகவானுக்கு மிக மிக ஆற்றல் நிறைந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய வாழ்க்கையில் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், கடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள், வீடு சம்பந்தப்பட்ட விஷயங்கள், நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை, நிர்ணயிப்பது இந்த செவ்வாய் பகவான் தான். இவரை நினைத்து இன்று நாம் செய்யக்கூடிய பரிகாரம் பல மடங்கு கை மேல் பலனை நமக்கு கொடுக்கும்.

- Advertisement -

சொந்த வீடு வேண்டும், கடன் சீக்கிரம் கரைய வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எந்த நோக்கத்தில் இன்று நீங்கள் பரிகாரத்தை செய்தாலும் அந்த நோக்கம் சீக்கிரம் நிறைவேறிவிடும். வாங்க அந்த பரிகாரம் என்ன என்பதை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

சொந்த வீடு கட்ட பரிகாரம்

செவ்வாய் பகவான் என்றாலே அவருக்கு உரிய தானியம் துவரம் பருப்பு என்பது நமக்கு தெரியும் அல்லவா. ஆகவே புதுசாக 1/2 கிலோ துவரம் பருப்பு இன்று வாங்கிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்திற்கு ஒரு சின்ன பட்டை துண்டு நமக்கு தேவை. அந்த பட்டை துண்டில் சிவப்பு நிற மார்க்கரில் ‘999ZH 99ZH 9ZH’ இப்படி இந்த நம்பரையும் எழுத்தையும் எழுதி விடுங்கள்.

- Advertisement -

சிவப்பு நிறம் மார்க்கரில் தான் கட்டாயம் எழுத வேண்டும். இது எழுதும் அளவுக்கு நீளத்தில் ஒரு பட்டை துண்டு உங்களுக்கு கிடைத்தால் போதும். பிரியாணிக்கு பயன்படுத்தும் பட்டை துண்டு தான். வீட்டில் வைத்திருக்கும் பட்டை துண்டையே இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் தான் புதுசாக துவரம் பருப்பு வாங்குவது நன்மையை தரும்.

அடுத்தபடியாக துவரம் பருப்பு கொட்ட டப்பா எடுத்துக்கோங்க. அதற்கு அடியில் முதலில் இந்த எண்களை எழுதிய பட்டை துண்டை வைத்துவிட்டு, அதற்கு மேலே துவரப்பருப்பை கொட்டி மூடி வைத்து விடுங்கள். இந்த துவரம் பருப்பை தினமும் சமையலுக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்படி பட்டை துண்டை துவரம் பருப்பு டப்பாவில் வைக்கும் போது, உங்களுக்கு என்ன கோரிக்கை சீக்கிரம் நிறைவேற வேண்டுமோ அதை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். சொந்த வீடு கட்ட, சொந்த நிலம் வாங்க, வருமானத்தில் தடை, கடன் திருப்பிக் கொடுப்பதில் தடை இருந்தால், இப்படி எந்த தடை உங்களுக்கு முதலில் உடைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள், அதில் ஏதாவது ஒரு விஷயத்தை மட்டும் நினைத்து இந்த பரிகாரத்தை செய்யவும்.

முருகப்பெருமானை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய் பகவானை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கஷ்டத்திற்கு கருணை காட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை இன்று இரவு 9 மணிக்கு முன்பாக எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பழைய பட்டையை எப்போது மாற்றுவது. மாதம் ஒருமுறை செவ்வாய்க்கிழமை பழைய பட்டை துண்டை எடுத்து வெளியே போட்டு மீண்டும் புதிய பட்டையை வைக்கலாம். ஒரு மாதம் இந்த பரிகாரத்தை செய்யும் போதே உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு பரிகாரத்தின் மீது நம்பிக்கை இருந்தால், மாதா மாதம் இந்த பரிகாரத்தை ஒரு செவ்வாய்க்கிழமையில் செய்ய மறக்கவே மறக்காதிங்க. பரிகாரத்தை செய்து மனசு திருப்தி அடையவில்லை.

இதையும் படிக்கலாமே: கடன் தீர மகாலட்சுமி மந்திரம்

பிரச்சனை தீரவில்லை என்பவர்கள் ஒரு மாதம் கழித்து பட்டை துண்டை மட்டும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். பரிகாரத்தை தொடர வேண்டும் என்று அவசியம் கிடையாது என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -