- Advertisement -

இன்று ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் கடன் என்னும் கொடிய பிடியில் சிக்கி தவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கடன் இல்லாத ஒரு மனிதனை இன்று நம்மால் காணவே முடியாது. இந்த ககடனானது ஏதோ ஒரு வகையில் நம்மை படுத்தி எடுக்கும். அது பொருள் கடனாகவோ அல்லது பணக்கடனோ வீட்டுக் கடனாகவோ இருக்கலாம்.

இப்படி சுற்றிலும் கடனிலே வாழ கூடிய காலக்கட்டத்தில் தான் நாம் இருக்கிறோம். இந்த கடன் தொல்லையில் இருந்து மீண்டு வெளியில் வர நிச்சயம் கடினமாக உழைக்க வேண்டும். இதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. ஆனால் அப்படி உழைப்பவர்கள் அனைவரும் கடனை அடைந்து நிம்மதியாக இருக்கிறார்களா என்றால் அதுவும் சந்தேகம் தான். அப்படியானால் கடன் தீர என்ன செய்ய வேண்டும்.

- Advertisement -

கடன் தீர்ந்து நிம்மதியாக வாழவும் நமக்கு தெய்வத்தின் நிச்சயம் தேவை. நம்முடைய கடன் தீரக் கூடிய ஒரு தெய்வ வழிபாட்டை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கடன் தீர வழிபாடு

செல்வத்திற்கு அதிபதியாகவும் தனங்களை வாரி வழங்கக்கூடிய அதி தேவதையாகவும் விளங்கக் கூடியவர் தான். மகாலட்சுமி தாயார் இந்த தாயாரின் அருட்பார்வை ஒருவருக்கு பரிபூரணமாக கிடைத்தாலே போதும் அவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று கடன் பிரச்சனை தீரவும் தாயாரை தான் நாம் தொடர்ந்து வழிபட வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாடு துவங்க பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். நல்ல மணம் மிக்க மலர்களை தாயாரின் படத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் ஒரு ஏலக்காய் சர்க்கரை கலந்து அன்னைக்கு நெய்வேத்தியமாக வையுங்கள்.

இப்போது அன்னையின் படத்திற்கு முன்பாக அமர்ந்து மகாலட்சுமி அஷ்டோத்திரத்தை மூன்று முறை தொடர்ந்து படிக்க வேண்டும். இந்த மந்திரத்தை முடிந்த வரையில் புத்தகமாக வாங்கி வைத்துக் கொண்டு அதை பார்த்து படியுங்கள். படிக்கத் தெரியாதவர்களும் படிக்க முடியாதவர்களும் மட்டும் இதை பாடலாக ஒலிக்க விட்டு கேளுங்கள். ஏனெனில் மந்திரங்களை நாம் வாய்விட்டு சொல்ல சொல்ல அதற்கான பலனை நாம் பல மடங்காக அனுபவிக்க முடியும்.

- Advertisement -

அப்படி இந்த மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் அல்லது தெரியாது. இது கடினமாக உள்ளது என நினைப்பவர்கள் ஓம் மகாலட்சுமியே நமஹ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். 108 முறை சொல்லும் போது மகாலட்சுமி தாயாருக்கு குங்குமம் அல்லது மலர்களால் அர்ச்சனை செய்த படியே சொன்னால் இன்னும் சிறப்பான பலன்களை பெறலாம்.

இந்த வழிபாட்டை இத்தனை நாள் செய்ய வேண்டும் என்ற கணக்கு கிடையாது. உங்களுடைய கடன் தீர்ந்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரும் வரையில் இதை தொடர்ந்து படித்துக் கொண்டே இருங்கள். இந்த மந்திரத்தை ஜெபிக்க ஜெபிக்க தாயாரின் அனுகிரகம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். உங்களுடைய வருமானம் அதிக அளவு பெருக்கக் கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

இதன் மூலம் பணவரவு அதிகரித்து கடன் தொல்லை குறையும். வீட்டில் செல்வ வளம் நிறைந்து வறுமை நிலையும் மாறி நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வீர்கள். அது மட்டும் இன்றி செல்வத்தை வாரி வழங்கக் கூடிய தெய்வங்களான குபேரர், சொர்ணகர்சன பைரவர் இவர்களை எல்லாம் வணங்கக் கூடிய அனைத்து பலனையும் இந்த ஒரு வரி மந்திரம் உங்களுக்கு தந்து விடும்.

இதையும் படிக்கலாமே: நல்ல வாழ்க்கை துணை அமைய மந்திரம்

கடன் தீர்ந்து நல்ல நிலையில் வாழ தாயாரின் இந்த வழிபாட்டு முறையை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள். உழைப்புடன் சேர்த்து நீங்கள் செய்யக் கூடிய இந்த வழிபாடு நிச்சயம் உங்கள் வாழ்க்கையை நல்ல நிலைக்கு உயர்த்தும் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -