சித்திரை முதல் வெள்ளி மகாலட்சுமி வழிபாடு

mahalashmi7
- Advertisement -

சித்திரை மாதம் பிறந்து, முதல் வெள்ளிக்கிழமை நாளைய தினம் வரவிருக்கின்றது. அதிலும் வளர்பிறையில் இந்த வெள்ளிக்கிழமை வருவதால் இந்த நாளில் நம்முடைய வீட்டில் மகாலட்சுமி வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி அடிக்க, பண வரவை அதிகரிக்க, செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த சுலபமான வழிபாட்டை தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சித்திரை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமை வழிபாடு

ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பாள் வழிபாட்டிற்கு எந்த அளவுக்கு சிறப்பானதோ, அதேபோல்தான் சித்திரை மாத வெள்ளிக்கிழமையிலும் அம்பாள் வழிபாட்டை செய்வது மிக மிக சிறப்பு. நிறைய அம்மன் கோவில்களில் சித்திரை மாதம் கொடியேற்றி திருவிழாக்கள் நடக்கும்.

- Advertisement -

இந்த சிறப்பு வாய்ந்த நாளில் நம்முடைய வீட்டில், மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்யும்போது வேண்டிய வரங்களை எல்லாம் சுலபமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த வழிபாட்டிற்கு பண வசியத்தை கொடுக்கக்கூடிய கருப்பு ஏலக்காய் 3 நமக்கு கட்டாயம் தேவை. அதை நாட்டு மருந்து கடைகளில் இருந்து முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

நாளை அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையை அலங்காரம் செய்து விளக்கு ஏற்றிக் கொள்ளுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் 3 கருப்பு ஏலக்காய், 1 சின்ன துண்டு பச்சை கற்பூரம், 1 ஸ்பூன் சோம்பு வைத்துக் கொள்ளுங்கள். சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பு தான்.

- Advertisement -

பிறகு மகாலட்சுமிக்கு உங்களால் முடிந்த நெய்வேத்தியம் செய்து வைக்கலாம், இல்லை என்றால் இரண்டு வாழைப்பழமாவது நெய்வேத்தியமாக வைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து உங்களுக்கு இருக்கும் வேண்டுதலை பிரார்த்தனையாக வைக்கவும்.

குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட கஷ்டங்கள் எதுவாக இருந்தாலும் அது சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் பிறகு அந்த கிண்ணத்தில் வைத்திருக்கும் கருப்பு ஏலக்காய், சோம்பு, பச்சை கற்பூரம் இந்த மூன்று பொருட்களையும் ஒரு பச்சை துறையில் வைத்து முடிச்சாக கட்டி பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடவும்.

- Advertisement -

நாளை காலை 6 மணியிலிருந்து இந்த பூஜையை வீட்டில் செய்யலாம். முடியாதவர்கள் மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையை செய்து அந்த முடிச்சை உங்கள் பீரோவில் வச்சிருங்க பண வரவு நிச்சயம் அதிகரிக்கும். மூன்று மாதம் கழித்து இந்த பொருட்களில் இருக்கும் வாசம் குறைந்த பிறகு, அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம்.

இதையும் படிக்கலாமே: சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி வழிபாடு

இந்த மூன்று மாதத்துக்குள்ளேயே நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உங்களுக்கு நன்மை நடக்கும் பட்சத்தில், மீண்டும் ஒரு வெள்ளிக்கிழமையில் இதே போல பூஜையை செய்து இந்த மூன்று பொருட்களையும் மகாலட்சுமி பாதத்தில் வைத்து, பச்சை துணியில் முடிந்து, பீரோவில் வைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -