மகாலட்சுமியின் அருளைப் பரிபூரணமாகப் பெற சோழியை வீட்டில் எப்படி வைத்துக் கொள்ளலாம்?

chozhi
- Advertisement -

சோழிகள் பெரும்பாலும் பிரசன்னம் பார்ப்பதற்காக தான் பயன்படுத்தப் படுகின்றது. சோழியை சுழற்றி போட்டு, நம்முடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்ன நடக்காது என்பதை, சோழி பிரசன்னத்தால் சிலர் மிகச்சரியாக கூறிவிடுவார்கள். இது அந்த காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்தது, நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். சோழியில் மொத்தமாக 130 வகை சோழிகள் இருப்பதாக நூல்களில் கூறப்பட்டுள்ளது. எல்லா வகை சோழியையும் நம் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். தவறு ஒன்றும் இல்லை. எந்த வகை சோழி நம் வீட்டில் இருந்தாலும் அது நம் வீட்டிற்கு நல்ல பலனைத் தரும். எப்படிப்பட்ட வாஸ்து தோஷமாக இருந்தாலும் அதை நீக்கக்கூடிய சக்தியானது இந்த சோழிக்கு உள்ளது.

சோழி

பொதுவாகவே கடலிலிருந்து எடுக்கப்படும் எந்த பொருட்களாக இருந்தாலும் அதை மகாலட்சுமிக்கு இணையாக கூறுவார்கள். அப்படிப்பட்ட ஒரு பொருள் தான் இந்த சோழி. இந்த சோழியை நம் வீட்டில் எப்படி வைத்தால், மகாலட்சுமியின் ஆசையை  முழுமையாக பெற முடியும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள தான் இந்த பதிவு.

- Advertisement -

உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு ஐந்து சோழியை வைத்து வழிபடவேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளலாம். இதற்கு என்று தனியாக வழிபாடு ஏதுமில்லை. விளக்கு ஏற்றி பூஜை செய்யும் போது சோழிக்கும் ஊதுவத்தி, சூடம் காட்டுவது நல்லது. சில பேர் பூஜை அறையில் வைத்தது போக, சில சோழிகளை தங்களது வீட்டில் வைத்திருப்பார்கள். இந்த சோழிகளை என்ன செய்யலாம்? பொதுவாகவே நம் வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வெற்றிலை பாக்கு வைத்து மகாலட்சுமிக்கு தீபமேற்றி பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருப்போம். அந்த வெற்றிலை  பாக்குடன், ஒரு சோழியையும் வைத்து எவருக்கேனும் தானமாகக் கொடுத்தால், தானம் கொடுப்பவருக்கும் லட்சுமி கடாட்சம் ஏற்படும். தானமாக பெறுபவரும் செல்வ செழிப்போடு இருப்பார்கள்.

Goddess Lakshmi

சோழியை தானமாக கொடுப்பவரது, அதிர்ஷ்டம், சோழியை தானமாக பெறுபவர்களுக்கு சென்று விடுமோ என்று அச்சப்பட வேண்டாம். சோழியை தானமாக கொடுப்பவரும் அதிர்ஷ்டசாலிதான். சோழியை தானமாக பெறுபவரும் அதிர்ஷ்டசாலிதான். வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்த தினதில் தானமாக கொடுக்க வேண்டாம். மறுநாள் சனிக்கிழமை இந்த தானத்தை செய்வது சிறப்பு. அதாவது உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சோழிகள் அப்படியேதான் இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் பூஜை அறையில் இல்லாமல் வேறு இடத்தில் வைத்திருக்கும் சோழியை, தானத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

choli1

உங்களது வீட்டில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்க இந்த சோழியை வைத்து ஒரு பரிகாரத்தை செய்யலாம். இப்படி செய்யும்பட்சத்தில் மகாலட்சுமி மனநிறைவோடு வீட்டில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம். அது எப்படி என்பதையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு கண்ணாடி அல்லது பீங்கானால் செய்யப்பட்ட பவுல் வாங்கிக்கொள்ள வேண்டும். சிறிய அளவில் இருந்தாலும் போதும். அதில் பாதி அளவு தண்ணீரை ஊற்றி கொள்ளவும். 5 சாதாரணமான வெள்ளை சோழிகள், 1 கருப்பு சோழி இவைகளை எடுத்துக் கொண்டு, 3 வெள்ளை சோழிகளை நிமிர்த்தியவாறு தண்ணீருக்குள் போட வேண்டும். மீதமுள்ள 1 கறுப்பு சோழி, 2 வெள்ளை சோழிகளை கவிழ்த்து தண்ணீருக்குள் போட்டு விட வேண்டும். அதாவது 3 சோழிகள் கவிழ்ந்து இருக்கவேண்டும். 3 சோழிகள் நிமிர்ந்து இருக்க வேண்டும். இது ஒரு வாஸ்து குறிப்பு. இப்படி செய்தால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும், அதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும் என்பது உறுதி. நம்பிக்கையோடு செய்து பாருங்கள். இதற்காக பயன்படுத்தப்படும் பவுல் கண்டிப்பாக எவர்சில்வரிலோ அல்லது இரும்பிலோ இருக்கக் கூடாது. எல்லா வகையான சோழிகளும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
இந்தத் தவறுகளை செய்யாதீங்க! மீறி செய்தால், நீங்கள் எழையாவதை யாராலும் தடுக்க முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Choli prasannam in Tamil. Choli astrology. Chozhi josiyam in Tamil. Prasanna jothidam in Tamil. Chozhi prasannam jothidam.

- Advertisement -