ராக்கெட் வேகத்தில் உங்களுடைய முடி சும்மா கடகடன்னு வளர 1 ஸ்பூன் கிராம்பு போதுங்க.

clove-water
- Advertisement -

ஹேர் பேக் போட முடியாது. தலைக்கு குளிப்பதற்கு ரொம்பவும் கஷ்டம். ஹேர் ஆயில் தயார் செய்து தலையில் தடவ முடியாது. தலைமுடியைப் பராமரிக்க கஷ்டப்பட்டு எந்த வேலையும் எங்களால் செய்ய முடியாது. எதற்குமே நேரமில்லை. ஆனால், எனக்கு முடி அடர்த்தியாக கடகடவென பெரியதாக வளர வேண்டும் என்பவர்களுக்கு இந்த குறிப்பு உதவியாக இருக்கும். மிக மிக சுலபமான முறையில் முடியை வளர்க்க, சுலபமான குறிப்பு உங்களுக்காக இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது. முடியை அழகாக அடர்த்தியாக வளர்க்க ஆசை இருந்தால் மட்டும் இந்த பதிவை தொடர்ந்து படித்து டிப்ஸை தெரிந்து கொள்ளலாம்.

ஒரு பெரிய டம்ளர் அளவு சுத்தமான நல்ல தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்‌. நாம் குடிப்பதற்காக பயன்படுத்தும் தண்ணீராக இருக்கட்டும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். 2 ஸ்பூன் கிராம்பை அந்த தண்ணீரில் போட்டு, அடுப்பில் வைத்து விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, ஒரு மூடி போட்டு மூடி விடுங்கள். 5 நிமிடங்கள் கிராம்பு அந்தத் தண்ணீரிலேயே வேகட்டும். அடுப்பை அணைத்து விட்டு கிராம்பை அந்த தண்ணீரிலேயே ஆற விட்டு விடுங்கள்.

- Advertisement -

கிராம்பில் இருக்கும் சத்து அனைத்தும் அந்த தண்ணீரில் நன்றாக இறங்கி, தண்ணீரின் நிறம் மாறியிருக்கும். அதன் பின்பு கிராம்பை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துவிட்டு, அந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 1 டம்ளர் அளவு தண்ணீர் சுண்டி 1/2 டம்ளர் அளவு தண்ணீர் தான் நமக்கு கிடைத்திருக்கும். நாம் தயார் செய்த இந்த ஸ்பிரே பாட்டிலை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.

15 நாட்கள் வரை இந்த தண்ணீர் ஃப்ரிட்ஜில் கெட்டுப்போகாது. தினமும் இந்த கிராம்பு தண்ணீரை உங்களுடைய தலையில் ஸ்பிரே செய்து கொள்ள வேண்டும். ஸ்பிரே செய்து முடித்துவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. நீங்கள் தினமும் ஒருமுறை இந்த ஸ்பிரேவை தலையில் அடித்துக் கொண்டாலும் சரி, ஒருநாள் விட்டு ஒருநாள் அடித்துக் கொண்டாலும் சரி, வாரத்தில் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் பயன்படுத்திக் கொண்டாலும் சரி, அது உங்களுடைய விருப்பம். இந்த ஸ்ப்ரேவை பயன்படுத்த எந்த கண்டிஷனும் இல்லை.

- Advertisement -

தலைமுடியை ஒவ்வொரு பாகங்களாக பிரித்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக இந்த ஸ்ப்ரேவை அடித்துக் கொள்ள வேண்டும். அதாவது மயிர்க்கால்களில் இந்த ஸ்பிரே படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றாக ஸ்கேல்பில் படும் படி இந்த ஸ்ப்ரேவை அடித்துவிட்டு, உங்களுடைய இரண்டு கைகளையும் வைத்து 5 நிமிடம் போல மசாஜ் செய்து கொடுங்கள். ரத்த ஓட்டம் அதிகரித்து ஸ்பிரே உங்களுடைய மண்டைக்குள் இறங்கி நன்றாக வேலை செய்யத் தொடங்கிவிடும்.

பிறகு பாருங்கள் ஒரே மாதத்தில் உங்களுடைய முடி வளர்ச்சியில் வித்தியாசம் தெரியும். முடி உதிர்வு கட்டுக்குள் வந்துவிடும். தலையில் ஆங்காங்கே முடி இல்லாமல் இருக்கும் அல்லவா. அந்த இடத்தில் எல்லாம் சின்ன சின்னதாக முடி வளர தொடங்கியிருக்கும். முடி வளரத் தொடங்கிய உடன் இந்த ஸ்பிரே செய்வதை விட்டு விடக்கூடாது. தொடர்ந்து இந்த கிராம்பு தண்ணீரை தலைக்கு போட்டு வர மூன்றிலிருந்து ஆறு மாதத்திற்குள் உங்களுடைய முடி வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடிச்சிருக்கா மிஸ் பண்ணாதீங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -