கோர்ட்டு கேஸ் வழக்குகளில் வெற்றி தரும் முருகன் மந்திரம்.

murgan1
- Advertisement -

முருகனை எந்த நேரத்தில் வேண்டி, எப்படி வழிபாடு செய்தாலும் நமக்கு வெற்றியை கொடுக்க ஓடோடி வந்து விடுவார். கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகப்பெருமான் தானே. இந்த முருகப்பெருமானை பற்றி நிறைய விஷயங்களை பேசிக்கொண்டே இருக்கலாம். அதற்கு ஒரு முடிவே இருக்காது.

அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப்போவது கோர்ட்டு கேஸ் வழக்குகளில் வெற்றி பெற முருகப்பெருமானின் வழிபாட்டையும் மந்திரத்தையும் தான். கோர்ட் கேஸ் வழக்குகள் சில பஞ்சாயத்துகள் வரும் சமயத்தில் நாம் அந்த இடத்தில் இருக்கும் போது, நம்மை அறியாமல் நம் மனதிற்குள் ஒரு பயம் வரும். இந்த வழக்கு நமக்கு சாதகமாக அமையுமா? தீர்ப்பு நமக்கு சாதகமாக வருமா என்று.

- Advertisement -

அந்த சமயத்தில் இந்த மந்திரத்தை சொன்னால் உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். உண்மையிலேயே உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில், இந்த மந்திரத்தின் மூலம் எல்லா பஞ்சாயத்திலும் உங்களுக்கு தாங்க சாதகமா தீர்ப்பு. அந்த முருகர் மந்திரம் என்ன அதை எப்படி உச்சரிப்பது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கோர்ட் கேஸ் வழக்கில் வெற்றி பெற முருகன் மந்திரம்

இன்று கோர்ட்டு கேஸ் வழக்கு உங்களுக்கு இருக்குது என்றால், காலையிலேயே எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு முருகப்பெருமானுக்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மனமுருக பிரார்த்தனை செய்யணும். முருகா முருகா முருகா என்று சொல்லி அவரை முழுமையாக நம்பி வீட்டில் இருந்து கிளம்புங்கள். முடிந்தால் வீட்டிலேயே ஒரு முறை இந்த இந்த பாடலை படிக்கலாம். எந்த இடத்தில் வழக்கு நடக்கிறது அல்லது எந்த இடத்தில் பஞ்சாயத்து நடக்கிறது அந்த இடத்தில் இருந்தபடியே இந்த மந்திரத்தை உச்சரிக்கணும்.

- Advertisement -

வீரவேல் தாரைவேல்
விண்ணோர் சிறை மீட்ட

தீரவேல் செவ்வேள்
திருக்கைவேள்

- Advertisement -

வாரி குளித்தவேல்
கொற்றவேல் சூர்மார்பும்

குன்றும் துளைத்த வேல்
உண்டே துணை.

திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடல் இது. இதை நீங்கள் அந்த கோர்ட்டில் இருந்து உச்சரிக்கலாம். ஏதாவது பஞ்சாயத்தில் சிக்கிட்டீங்க எனும்போது பஞ்சாயத்து விசாரிப்பாங்க இல்லையா. அந்த இடத்திலும் உச்சரிக்கலாம். இதனை முறை கணக்கெல்லாம் கிடையாது இந்த பாடலை மனசுக்குள் சொல்லிக்கிட்டே இருங்க போதும். உங்கள் மீது தவறே இல்லை.

குற்றச்சாட்டு உங்கள் மேல் விழுந்து விட்டது. அதிலிருந்து வெளிவர வேண்டும் என்றால் இந்த மந்திரம் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டிக் கொடுக்கும். அதேபோல கோர்ட்டு கேஸ் வழக்குகளில் தீர்ப்பு உங்கள் பக்கமாக வேண்டும். சொத்தை நீங்கள் ஜெயிக்க வேண்டும்.

யாரோ ஒருவர் உங்கள் சொத்தை பொய்யாக அபரிகரித்து கோர்ட்டுக்கு வழக்கு போட்டு இருக்காங்க என்னும்போது, இந்த மந்திரத்தை சொல்லுங்க. இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல உங்கள் மனதிற்குள் ஒரு தெளிவு பிறக்கும். ஒரு தைரியம் பிறக்கும். அது மட்டுமல்லாமல் வழக்கு உங்கள் பக்கம் தீர்ப்பாகும். அது மட்டும் அல்லாமல் தினமும் இந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது. உங்கள் தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும்.

கோழையாக இருப்பவர்கள் கூட வீரனாக மாறுவீர்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த மந்திரம் தான் இது. எளிமையான இந்த மந்திரத்தை தினம் தினம் சொல்லி முருகப் பெருமானை வழிபாடு செய்து பாருங்கள். உங்களுக்குள் வரும் சக்தி என்னவென்று தெரியும். முழு நம்பிக்கையோடு வழிபாட்டை செய்து பலன் பெற வேண்டும் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -