கடன் கரைய கல் உப்பு பரிகாரம்

cash4
- Advertisement -

எப்போதுமே தாந்த்ரீக பரிகாரத்திற்கு ஒரு அதீத சக்தி உண்டு. அதிலும் அதை நாம் செய்யக்கூடிய நேரத்திலும், அதற்கு நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கும், மகிமை அதிகமாக இருக்கும். அந்த வரிசையில் கடன் கரைய இன்று நாம் ஒரு சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரத்தை பற்றி பார்க்க போகின்றோம். இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்ய போகும் நேரமும் ஆற்றல் மிகுந்தது.

இந்த தாந்திரீக பரிகாரத்திற்கு பயன்படுத்த போகும் அந்த இரண்டு பொருட்களும் ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்த பொருட்கள். கடன் கடற்கரைய நாம் செய்யப்போகும் அந்த சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரம் என்ன. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள். எந்த ஒரு தாந்திரீக பரிகாரமாக இருந்தாலும் குலதெய்வத்தை நினைத்து தான் செய்யணும். ஆகவே இதுவும் ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களில் நமக்கு வந்துவிடும். சரி பரிகாரத்தை பார்த்து விடுவோம்.

- Advertisement -

இன்று இரவு 12 மணியோடு இந்த ஆங்கில வருடம் முடிவடைந்து, புது வருடம் பிறக்கவிருக்கின்றது. அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் பழைய வருடம் முடிந்து, திங்கட்கிழமை புது வருடம் தொடங்கவிருக்கிறது. அதி அற்புதம் வாய்ந்த இந்த நேரத்தை நாம் தவற விட வேண்டாம். இன்று (31-13-2023) இரவு 12 மணிக்கு ஒரு சொம்பில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். வலது கை நிறைய உப்பு ஜாடியிலிருந்து கல்லுப்பை அள்ளி, எடுத்துக் கொள்ளுங்கள்.

எடுத்து வைத்திருக்கும் சொம்பு தண்ணீரில் அந்த கல்லுப்பை போட்டு விடுங்கள். பிறகு ஒரு சின்ன துண்டு வசம்பை எடுத்து இந்த தண்ணீரில் போடுங்கள். உங்கள் கையை வைத்து அந்த கல்லுப்பை அப்படியே கரைத்து விடுங்கள். கடன் கரைந்து போகணும். கடன் கரைந்து போகணும். கடன் கரைந்து போகணும். என்ற வார்த்தையை சொல்லி சரியாக இன்று இரவு 12 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள்.

- Advertisement -

தண்ணீரில் கல் உப்பு நன்றாக கரைந்த பின்பு இந்த தண்ணீரை அப்படியே சிங்கில் கொட்டி விடலாம். அந்த வசம்பை பேப்பரில் மடித்து வைத்துக் கொள்ளுங்கள். விடிந்ததும் கால் படாத இடத்தில் செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடுங்கள். குலதெய்வத்தை நினைத்து மகாலட்சுமியை நினைத்து தண்ணீரில் இன்று இரவு நீங்கள் கரைக்க போகும் கல்லுப்பு உங்கள் கடனை நிச்சயம் கரைக்கும். புதுவருடம் கடன் இல்லாத வருடமாக உங்களுக்கு பிறக்கும்.

கடன் இருந்தாலும் அந்த கடனை எல்லாம் திருப்பி அடைக்க கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதுசா மேலும் மேலும் கடன் வாங்காமல் இருக்கவும் இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். தாந்திரீக பரிகாரங்களில் நமக்கு செலவு மிக மிகக் குறைவு.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையை தீர்க்கும் அரச இலை தீப பரிகாரம்

ஆனால் இதில் எந்த அளவுக்கு நீங்கள் நம்பிக்கையை முழுசாக வைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு பரிகாரங்கள் பலன் தரும் என்ற கருத்துடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -