நம்முடைய கஷ்டங்கள் தீராமல் தொடர்வதற்கு, தீபம் ஏற்றும்போது நாம் செய்யும் இந்த தவறுகளும் ஒரு காரணம்.

deepam
- Advertisement -

நம்முடைய சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமான வழிபாடாக சொல்லப்பட்டுள்ள வழிபாடுகளில், தீப வழிபாடும் ஒன்று. நம்முடைய சம்பிரதாயப்படி காலை மாலை இரண்டு வேளையும் கட்டாயம் வீட்டில் தீபமேற்றி வழிபடவேண்டும். காலை தீபம் ஏற்ற முடியாதவர்கள் கூட, மாலை வேளையில் கட்டாயம் தீபமேற்றி வழிபடுவது தான் நம்முடைய வீட்டிற்கும் நல்லது. லட்சுமி கடாட்சமும் கூட, இதேபோல் சிலர் பரிகாரங்களுக்காக தீபம் ஏற்றுவார்கள். இத்தனை வாரம், இந்த குறிப்பிட்ட கோவில்களுக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருக்கும்.

deepam

ராகுகால தீபம் அல்லது ராகு கேது தீபம், விநாயகருக்கு தீப ஏற்றுவது, சிவபெருமானுக்கு தீபம் ஏற்றுவது, இப்படி எந்த கடவுளுக்காக இருக்கட்டும். நீங்கள் தீபத்தை கோவிலுக்கு சென்று ஏற்றினாலும் சரி, வீட்டில் ஏற்றி வழிபாடு செய்தாலும் சரி, அது குத்துவிளக்காக இருந்தாலும் சரி, காமாட்சியம்மன் விளக்காக இருந்தாலும் சரி, மண் அகல் தீபம் இருந்தாலும் சரி, நாம் அந்த தீபத்தை எப்படி ஏற்றினால் வேண்டுதல்களுக்கான பலனை உடனடியாக, முழுமையாகப் பெற முடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இந்த பதிவில் கொடுக்கப்போகும் குறிப்புகள் சில பேருக்கு தெரிந்திருக்கலாம். சில பேருக்கு தெரியாமலும் இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள சில முக்கியமான குறிப்புகள். முதலில் நம்முடைய வீட்டில் தீபம் ஏற்றுவதற்கு முன்பாக முகம் கை கால்களை அலம்பி விட்டு தான் ஏற்ற வேண்டும்.

kubera deepam

காலையில் குளித்து இருப்போம். குளித்தபின்பு தீபம் ஏற்றி இருப்பீர்கள் அல்லது வேலை சுமை காரணமாக தீபம் ஏற்றாமலும் இருக்கலாம். இருப்பினும் மாலை தீபம் ஏற்றும் போது கை கால் முகம் கழுவாமல் தீபம் ஏற்றவே கூடாது. எந்த இடத்திலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, கை கால் கழுவாமல் தீபம் ஏற்றாதீர்கள்.

- Advertisement -

வீட்டிலிருந்து புறப்பட்டு சென்று ஆண்கள் கடைக்கு போவார்கள். கடைக்கு போன உடனேயே தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, கல்லா பெட்டியில் அமர்ந்து விடுவார்கள். இது மிகப்பெரிய தவறு. கை கால்களை கழுவிவிட்டு தான் தொழில் செய்யும் இடத்திலும் தீபமேற்ற வேண்டும். அப்போதுதான் அந்த தொழில் மேலும் சிறக்கும்.

vilakku deepam

அடுத்தபடியாக சில பேர் தங்களுக்கு ஏற்படக்கூடிய இயற்கை உபாதைகளை அடக்கிக் கொண்டு தீபம் ஏற்றுவார்கள். இருமல், தும்மல், சிறுநீர், மலம், இப்படியாக நமக்கு வரக்கூடிய இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்திக்கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் தீபம் ஏற்றக்கூடாது.

- Advertisement -

Amman deepam

பெண்கள் தங்களுடைய முந்தானையை எடுத்து சொருகிக் கொண்டு தான் தீபம் ஏற்றவேண்டும். முந்தாணையை அப்படியே விட்டுவிட்டு தீபம் ஏற்றுவது தவறு. உங்களுடைய வீட்டில் ஸ்டாண்டின் மேல் தீபம் எரிந்தாலும் கூட, பூஜை அலமாரியில் தீபத்தை வைத்து இருந்தாலும் கூட, அந்த விளக்கை எடுத்து கீழே வைத்து, நீங்கள் தரையில் அமர்ந்து, சம்மணம் போட்டு அமர்ந்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, அதன் பின்புதான் அதை எடுத்து அலமாரியின் மேல் வைக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் நின்று கொண்டு, வேண்டிக்கொண்டு தீபமேற்றினால் அந்த வேண்டுதல் உடனே பலிக்காது.

கோவிலுக்கு சென்றாலும் இதே விதிமுறை தான். கோவிலில் விளக்கு ஏற்றுவதற்காக ஸ்டாண்ட் வைத்திருப்பார்கள். நீங்கள் தரையில் அமர்ந்து தீபத்தை ஏற்றி எடுத்து தான், அந்த ஸ்டாண்டின் மேலே வைக்க வேண்டும். அப்போது தான் உங்களுடைய வேண்டுதல் சீக்கிரமாக நிறைவேறும்.

poojai

மனதில் ஒரு குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள். அந்த குறிக்கோள் நிறைவேற வேண்டும் என்று தினம்தோறும் அமர்ந்தபடி இறைவனை நினைத்து, மனதை ஒரு நிலைப்படுத்தி உங்களது வேண்டுதலை அந்த தீபச்சுடரில் அந்த தீப ஒளியில் வைத்து ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து வழிபட்டு வாருங்கள். நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் எதுவாக இருந்தாலும் உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதை அந்த இறைவன் உடனடியாக நிறைவேற்றி வைப்பார் என்பதில் சந்தேகமே கிடையாது.

poojai-vetrilai

சில பேர் அலமாரிகளில் பூஜை அறையை தயார் செய்து வைத்திருந்தாலும், ஸ்டண்ட் அடித்து வைத்திருந்தாலும் குறிப்பாக பெரிய பெரிய பூஜைகள் செய்யும்போது, வாழை இலை போட்டு, சுவாமி கும்பிடும் போது, அவர்கள் வீட்டில் இருக்கும் விளக்கை ஸ்டாண்டில் இருந்து கீழே இறக்கி தரைப்பகுதியில் தான் வைத்து ஏற்றுவார்கள். வெறும் தரையில் கீழே வைத்து வழிபடக் கூடாது. விளக்கு கீழே சிறிய தாம்பூலம் கட்டாயம் இருக்க வேண்டும். நிறையப்பேர் வீட்டில் பிள்ளையார் மனை இருக்கும். அந்த பிள்ளையார் மனையை, மரப்பலகையின் மீது வைத்து, இரண்டு பக்கங்கள் குத்து விளக்கு அலங்காரம் செய்து, நடுவே ஒரு காமாட்சியம்மன் தீபமேற்றி அலங்காரம் செய்து, அதன்பின்பு படையல் இடுவார்கள். இப்படிப்பட்ட பழக்கம் வந்ததற்கும் காரணம் கீழே அமர்ந்து தீபமேற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.

pillaiyar-manai

அமர்ந்து தீபம் ஏற்றுவதன் மூலம் நம்முடைய மூலாதார சக்கரம் சீராக இயங்கி நமக்கும் தீபச்சுடருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. இதன்மூலம் உங்களது வேண்டுதல் பிரபஞ்சத்திற்கு சீக்கிரம் போய் சேர்ந்து அந்த வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும். இது முழுக்க முழுக்க நம் முன்னோர்களால், சாஸ்திரப்படி சொல்லி வைக்கப்பட்டுள்ள விஷயங்கள்.

vilaku

தொடர்ந்து 48 நாட்கள் இப்படி தீப வழிபாடு செய்து பாருங்கள். இதுவரைக்கும் தீரவே தீராது அப்படின்னு நினைச்சிட்டு இருந்த பிரச்சினைகள் எல்லாமே படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். உங்களுக்கே மனநிம்மதி மனநிறைவு ஏற்பட்டுவிடும். அதன் பின்பாக தொடர்ந்து, உங்களை அறியாமலேயே அமர்ந்து தீபம் ஏற்ற தொடங்கிவிடுவீர்கள். நம்பிக்கை இருந்தால், நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
தினம் தினம் இனி உங்களுக்கு வெற்றி மட்டும்தான்! தினசரி வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி தர சூரிய பகவானுக்கு காலையில் இப்படி வணக்கம் சொல்லிப் பாருங்களேன். அதிசயம் நடக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -