தன ஆகர்ஷணம் தரும் குபேர வழிபாடு

kuberar dhanam
- Advertisement -

ஒருவர் கஷ்டப்பட்டு உழைப்பது செல்வத்தை சேர்ப்பதற்காகத்தான். அப்படி கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் தன்னிடம் நிலையாக சேமிப்பாக இருந்தால்தான் பிற்காலத்தில் அவர்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை கிடைக்கும். அதை தவிர்த்து விட்டு சம்பாதித்த பணத்தை சேமிக்க முடியாமல் சம்பாதித்த பணத்தைவிட அதிகமாக செலவு ஏற்படும் பொழுது அதனால் எந்த வித பலனும் ஏற்படாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்டவர்கள் தன ஆகர்ஷணம் செய்வதற்கு குபேர பகவானை எப்படி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பணவரவு பல மடங்கு அதிகரிப்பதை தான் தன ஆகர்ஷணம் என்று கூறுவோம். அதோடு மட்டுமல்லாமல் அப்படி வரக்கூடிய பண வரவை சேமிப்பாக உயர்த்துவதற்கும் இது பொருந்தும். அப்படிப்பட்ட தன ஆகர்ஷணத்தை ஏற்படுத்தக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர்தான் குபேர பகவான். குபேர பகவானே நம் முறையாக வழிபட்டால் தன ஆகர்ஷணம் ஏற்பட்டு நம் வாழ்க்கை செழிப்புடன் இருக்கும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். காலையிலோ அல்லது மாலையிலோ தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொள்ளலாம். ஆரம்பிக்கும் நாளாக வியாழக்கிழமை மாலை அல்லது வெள்ளிக்கிழமை காலையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் மஞ்சளைக் கொட்டி அதில் பன்னீரை ஊற்றி நன்றாக குலைத்துக் கொள்ளுங்கள்.

குலைத்த இந்த மஞ்சளில் பூஜையறையில் நட்சத்திரம் வரைந்து கொள்ள வேண்டும். இதை தரையிலும் வரைந்து கொள்ளலாம் அல்லது மனை பலகை போட்டு அதன் மேலும் வரைந்து கொள்ளலாம். அதற்கு நடுவில் ஒரு வெற்றிலையை வைக்க வேண்டும். வெற்றிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த நட்சத்திர கோலத்திற்கு முன்பாக ஒரு தாம்பாளத்தில் குத்து விளக்கை வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு கிண்ணத்தில் குங்குமத்தை வைத்துக் கொண்டு அர்ச்சனை செய்ய வெற்றிலையில் போட வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது கூற வேண்டிய மந்திரம்:
“ஓம் தனாத்யட்சாய நமஹ
ஓம் ராஜலெட்சுமி ஜென்மஹேஹாய நமஹ”

இப்படி 108 முறை கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். நெய்வேத்தியமாக டைமண்ட் கற்கண்டு வைத்து குபேர பகவானை மனதார வழிபட வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். அர்ச்சனை செய்த இந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் இந்த குங்குமத்தை அவர்களுடைய கல்லாப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் இப்படி குங்குமத்தால் அர்ச்சனை செய்வதன் மூலம் குபேர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அவரின் அருள் கிடைத்தால் நமக்கு செல்வ செழிப்பிற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது.

இதையும் படிக்கலாமே: வேண்டுதலை நிறைவேற்றும் பாலா திரிபுரசுந்தரி வழிபாடு

செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடிய குபேர பகவானே நினைத்து நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் கண்டிப்பான முறையில் தன ஆகர்ஷணம் ஏற்பட்டு செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

- Advertisement -