தனம் தரும் தசமி திதி பரிகாரம்

thilagam
- Advertisement -

செய்யும் வேலையில் உடனே சம்பள உயர்வு கிடைக்க வேண்டும். செய்யும் தொழிலில் அதிரடியாக மாற்றம் நடந்து லாபத்தை சம்பாதிக்க வேண்டும் இப்படி எல்லாம், ஆர்வக்கோளாறு நமக்கு இருக்குது. ஆனால் இதை எல்லாம் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்தி காட்டுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இதற்கு பணவசியமும் தேவை ஜனவசியமும் தேவை.

இந்த இரண்டு வசியத்தையும் எல்லோராலும் அவ்வளவு எளிதில் அடைந்து விட முடியாது. ஒரு சில பேருக்கு மட்டுமே அந்த யோகம் கிடைக்கும். அந்த யோகத்தை கொண்டவர்கள் தான் இன்று பணக்காரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாமும் பணக்காரராக செய்ய வேண்டிய எளிமையான ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். தாந்திரீகம் என்றதும் யாரும் பயப்பட வேண்டாம்‌. குலதெய்வத்தை நினைத்து ஆன்மீக ரீதியாக தான் இந்த பரிகாரத்தை செய்ய போகின்றோம்.

- Advertisement -

பண வசியம் ஜன வசியம் ஏற்பட

சக்தி வாய்ந்த இந்த திலகத்தை தயார் செய்து நெற்றியில் இட்டு வந்தால் போதும். உங்களுக்கு பண வசியம் ஏற்பட்டு விடும். அது என்ன திலகம் அதை எப்படி தயார் செய்வது பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

இந்த திலகம் தயார் செய்ய நமக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருள் பிரம்ம கமல செடியில் இருக்கும் இலை. இந்த பிரம்ம கமல பூவை பற்றி நம்மில் சில பேருக்கு தெரிந்திருக்கும். சில பேருக்கு தெரியாமலும் இருக்கும். இந்த பூ வருடத்தில் ஒருமுறை இரவு நேரத்தில் பூக்கும். விடிவதற்குள் இந்த பூ உதிர்ந்து விடும். ஆனால் இதனுடைய வாசம் அத்தனை சக்தி நிறைந்தது.

- Advertisement -

நேர்மறை ஆற்றலைக் கொண்டது. இந்த பிரம்ம கமல பூ நமக்கு வேண்டாம். அந்த பிரம்ம கமலச் செடியில் இருக்கும் இலை மட்டும் நமக்கு கிடைத்தால் போதும். அதை மட்டும் எப்படியாவது தேடி கண்டுபிடித்து எடுத்து வாருங்கள். ஒரு இலை அல்லது இரண்டு இலை எத்தனை இலை கிடைத்தாலும் சரிதான்.

ஒரு சின்ன உரலின் மேல் அந்த இலையை வைத்து இதோடு அரகஜா, புனுகு, கோரோசனை, மூன்று வாசம் நிறைந்த பொருட்களையும் வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு விழுது கிடைக்கும். அந்த விழுது தான் நாம் சக்தி வாய்ந்த திலக மை. குறிப்பாக இந்த வேலையை நீங்கள் செய்ய வேண்டிய திதி தசமி திதியாக இருக்க வேண்டும்.

- Advertisement -

காலண்டரில் பார்த்தாலே தெரியும் தசமி திதி என்று வருகிறது என்பதை கண்டுபிடித்தல் விடலாம். மாதத்தில் இரண்டு தசமி திதி வரும். வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை 4-2-2024 ஆம் தேதி கூட தசமி திதி இருக்கிறது. இந்த தேதியில் கூட நீங்கள் இந்த திலகத்தை தயார் செய்யலாம். இந்த திலகத்தை தயார் செய்து ஒரு சின்ன டப்பாவில் போட்டுக்கோங்க.

இந்த டப்பாவை கையில் வைத்துக் கொள்ள வேண்டும் அதற்கு முன்பு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றிவிட்டு, குலதெய்வத்திடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு, இந்த டப்பாவை கையில் வைத்துக் கொண்டு ‘வசிய வசிய ஜன வசிய, வசிய வசிய பண வசிய’ என்ற மந்திரத்தை சொல்லி அந்த திலகத்துக்கு சக்தி கொடுக்க வேண்டும். 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி அந்த திலகத்திற்கு சக்தியை கொடுத்து விடுங்கள்.

பூஜையறையில் குலதெய்வத்தின் பாதத்தில் அந்த திலகத்தை வைத்து விடுங்கள். அவ்வளவுதான் தினமும் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வெளியில் செல்வதற்கு முன்பு வேலைக்கு செல்வதற்கு முன்பு வியாபாரத்திற்கு செல்வதற்கு முன்பு, இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு சென்றால் பண வசியம் ஜன வசியம் ஏற்பட்டு உங்களுக்கு பெரிய யோகம் அடிக்கும். பரிகாரம் இவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே: வேலை கிடைக்க வேலவன் வழிபாடு

பெரிய சூட்சமம் மறைக்கப்பட்டிருக்கும் பரிகாரம் இது. இதை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வியே இருக்காது. ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்கள் மாதவிடாய் நாட்களில் மட்டும் இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.

- Advertisement -