வேலை கிடைக்க வேலவன் வழிபாடு

murugan job
- Advertisement -

படித்து முடிப்பதே ஒரு பெரிய சவாலாக இருக்கக் கூடிய இந்த காலக்கட்டத்தில் படித்து முடித்து அதற்கேற்ற வேலை கிடைப்பது அதை விட பெரிய சவாலாக இருக்கிறது. இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோர் படித்து விட்டு நல்ல வேலை கிடைக்காமல் ஏதோ கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். பிடித்த வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி வேலைக்காக அலைபவர்கள் தங்களுக்கு பிடித்த வேலை கிடைக்க அதற்கான முயற்சிகளை நிச்சயம் எடுக்க வேண்டும். அப்படி எடுக்கக் கூடிய முயற்சிகளுடன் இந்த முருகனை 6 வாரங்கள் தொடர்ந்து வழிபட்டால் நிச்சயம் நினைத்த வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது எந்த முருகன் வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வேலை கிடைக்க முருகன் வழிபாடு

வேலை கிடைக்க வேண்டும் என்றால் நாம் அதற்குரிய தெய்வங்களை முறைப்படி வணங்க வேண்டும். அந்த வகையில் முருகப்பெருமானை தொடர்ந்து வழிபாடு செய்யும் பொழுது நாம் விரும்பிய வேலை நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. முருகரை வணங்க வேண்டும் சில ஆலயத்தில் உள்ள முருகனை வழிபடும் போது அதற்கு பலன் பல மடங்காக நிச்சயம் உண்டு என்று நம்பப்படுகிறது.

அந்த வகையில் பழனி மலையில் உள்ள முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. வேலை கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் பழனி மலையில் உள்ள முருகரை ஆண்டி கோலத்தில் தரிசிக்க வேண்டும். இப்படி செய்யும் பட்சத்தில் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இப்படி ஆறு வாரங்கள் தொடர்ந்து பழனி செல்ல முடியாதவர்கள் கொடிமரம் இருக்கக் கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும். அந்த முருகன் ஆலயத்திற்கு சென்று செவ்வரளி பூக்களால் மாலை தொடுத்து போட்டு வர வேண்டும். இத்துடன் ஆறு நெய் தீபம் ஏற்றி ஆறு வாரங்கள் தொடர்ந்து வழிபட்டு வர நிச்சயம் நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

பழனி முருகரை வழிபடும் அளவிற்கு வசதி கிடையாது. அதே போல் நீங்கள் இருக்கும் இடத்தில் கொடிமரம் உள்ள முருகர் கோவில் இல்லை என்றால் இந்த வழிபாட்டை வீட்டிலே கூட செய்யலாம். செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சூட்டி ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து முருகப் பெருமானை மனதார ஆறு வாரங்கள் வணங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எதிரி தொல்லை நீங்க தீபம்

முருகப்பெருமானை எளிமையான முறையில் இப்படி வழிபாடு செய்வதன் மூலமாக நீங்கள் நினைத்த வேலை உங்களை தேடி வருவதுடன் நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். ஆகையால் உங்கள் முயற்சியுடன் சேர்த்து இந்த வழிப்பாட்டை தொடர்ந்து செய்து நல்ல பலனை

- Advertisement -