தனலட்சுமி தங்குத் தடை இல்லாமல் உங்கள் வீட்டிலேயே தங்க, 1 கைப்பிடி அளவு சில்லறையை பீரோவில் இப்படி வைத்தால் போதும்.

lakshmi-5-rupee-coin
- Advertisement -

பல தலைமுறைகளுக்கு உங்களுடைய வீட்டில் பண கஷ்டம் வராமல் இருக்க வேண்டும். சந்தோஷம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், இந்த ஒரு சில்லரை பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்து, நம் வீட்டு பீரோவில் இந்த சில்லரை காசுகளை பத்திரப்படுத்தி எடுத்து வைத்து விட்டால், அடுத்து வரக்கூடிய 9 தலைமுறைகளுக்கு உங்களுடைய வீட்டில் பண கஷ்டம் என்பதை இருக்காது. வறுமையை விரட்டி அடிக்க கூடிய எளிமையான வழிபாட்டு முறைகளில் இதுவும் ஒன்று.

தனலட்சுமி வீட்டில் தங்க வைக்க பூஜை
இந்த பரிகாரத்திற்கு சிறிய அளவில் ஒரு சொம்பு தேவை. வெள்ளியில் இருக்கலாம். செம்பு பித்தளை எதில் வேண்டுமென்றாலும், அந்த சொம்பு இருக்கலாம். சில்வர் சொம்பு மட்டும் பயன்படுத்தக் கூடாது. அந்த சொம்பு நிறைய போடுவதற்கு சிலரை நாணயங்கள் தேவை. 1 ரூபாய் நாணயமாக கிடைத்தாலும் சரி, அல்லது இரண்டு ரூபாய் நாணயம், ஐந்து ரூபாய் நாணயம் என்று கலந்து கிடைத்தாலும் சரிதான். உங்களுடைய வீட்டில் தங்க நாணயம் அல்லது வெள்ளி நாணயம் இருந்தால் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

நல்ல நாளாக பார்த்து வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இந்த பூஜையை தொடங்குங்கள். பூஜை அறையை பூஜை செய்வதற்கு சுத்தம் செய்து பூக்களை போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசி கொட்டி, அதன் மேலே எடுத்து வைத்திருக்கும் சொம்பை வைத்து, அது நிரம்ப சில்லறை காசுகளை போட்டு, இந்த சில்லறை நாணயங்களுக்கு மேல் வெள்ளி நாணயம் அல்லது தங்க நாணயம் வைக்க வேண்டும். இந்த வெள்ளி நாணயம் தங்க நாணயம் இல்லை என்றால் வெறும் சிலரை காசுகள் வைத்துக் கூட இந்த பூஜை செய்யலாம். சீக்கிரமே வெள்ளி தங்கம் வாங்க கூடிய யோகம் கிட்டும்.

இந்த சொம்பில் சில்லறை நாணயங்களை நிறுத்தி வைத்திருக்கிறோம் அல்லவா. அதற்கு தினமும் அர்ச்சனை செய்ய வேண்டும். பூக்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம். அல்லது சுத்தமான வாசம் நிறைந்த தாழம்பூ குங்குமத்தை வைத்து அர்ச்சனை செய்யலாம். தினமும் காலை எழுந்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ‘ஓம் அஷ்டலட்சுமியே நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

தினமும் ஒரு டம்பளர் பாலில் பனங்கற்கண்டு போட்டு நெய்வேத்தியம் வைப்பது சிறப்பு. பூஜை நிறைவடையும் வரை அந்த கலச செம்பை அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. இது மகாலட்சுமி காகவும் அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காகவும் நாம் செய்யக்கூடிய பூஜை. அஷ்ட லட்சுமி என்றாலே அதில் மகாலட்சுமியும் அடங்கிவிடுவாள். தனலட்சுமியும் அடங்கி விடுவாள்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு பொருளை மட்டும் உங்கள் வீட்டிற்குள் வைக்கவே கூடாது. அப்படி வைத்தால் அரசனும் ஆண்டி ஆகி விடுவானாம்?. உங்கள் வீட்டில் இது போல இருந்தால் உடனே மாற்றி விடுங்கள்.

விடாமல் தொடர்ந்து 19 நாட்கள் இந்த பூஜையை செய்ய வேண்டும். இந்த பூஜையை செய்யும் போது உங்களுடைய மனது அந்த மகாலட்சுமி தாயை, அஷ்டலட்சுமிகளை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். வீடு சுத்தபத்தமாக இருக்க வேண்டும். 19 நாட்கள் பூஜை நிறைவடைந்த பிறகு நீங்கள் பூஜைக்காக வைத்த சில்லறை நாணயங்களை ஒரு மஞ்சள் துணியில் வைத்து கட்டி பணம் வைக்கும் பட்டியில் வைத்து விடுங்கள். அவ்வளவுதான். உங்களுடைய பரம்பரைக்கு பணக்கஷ்டம் வராமல் இருக்க இந்த நாணயங்கள் போதும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை மேற்கொண்டு பலன் பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -