இந்த ஒரு பொருளை மட்டும் உங்கள் வீட்டிற்குள் வைக்கவே கூடாது. அப்படி வைத்தால் அரசனும் ஆண்டி ஆகி விடுவானாம்?. உங்கள் வீட்டில் இது போல இருந்தால் உடனே மாற்றி விடுங்கள்.

- Advertisement -

அன்றிலிருந்து இன்று வரை சில பழக்க வழக்கங்களை நாம் கடைபிடித்து வருகிறோம். எந்தெந்த பொருட்களை எங்கு  வைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வழியாக சொல்லி, நாமும் பழகிய விஷயங்களில் ஒன்று தான் இந்த செருப்பை வெளியில் வைக்கும் முறை. இதை எப்போதும் வீட்டிற்கு வெளியில் தான் விட வேண்டும் வீட்டிற்குள் செருப்பை போடக் கூடாது என்று அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் வேறு எந்த இடங்களில் இந்த செருப்பை பயன்படுத்தினால் நமக்கு கஷ்டம் வரும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வாஸ்து படி வடகிழக்கு மூலையில் வைக்க கூடாதவை
உடம்பில் உள்ள அனைத்து பாகங்களுக்கும், பாதத்திற்கும் தொடர்பு உண்டு. அதிகமான நரம்பு முடிச்சுகள் இந்த பாதத்தில் உள்ளது. உடம்பில் எங்கு வலிகள் இருந்தாலும் பாதத்தில் ஒரு சில இடங்களை அழுத்தினால் வலிகள் குறையும். இதை மருத்துவ முறைகளைகளாக கூட பின்பற்றி வருகிறோம். அப்பேற்பட்ட பாதங்கள் வெளியில் செல்லும் போது பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அணிய தொடங்கியது தான் இந்த செருப்பு. இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் செருப்பு இல்லாமல் எங்கும் செல்ல முடியாது என்பதும் உண்மையே. ஆனால் இந்த செருப்பை வீட்டிற்குள் எப்போதும் சில அணிகிறார்கள் இது பெரும் தவறு.

- Advertisement -

ஒரு சிலர் உடல் நல குறைவால் அணிய வேண்டிய சூழ்நிலையில் அடைகிறார்கள் இது தவிர்க்க முடியாத ஒன்று. இன்று பெரும்பாலானோர் வீட்டில் செருப்பு அணிவதை ஒரு பேஷன் போல செய்கிறார்கள் அவ்வாறு செய்யவே கூடாது. அதிலும் குறிப்பாக சமையலறையில் செருப்பை அணிந்து கொண்டு சமைக்கவே கூடாது. சமையலறை என்பது நம் அனைவரும் பசியாற உணவு படைக்கும் இடம். அந்த இடமானது அன்னபூரணி மகாலட்சுமி அனைவரும் வாசம் செய்யும் இடம். அங்கு செருப்பு காலுடன் சமைக்கும் போது நம் குடும்பத்திற்கு கட்டாயம் தீராத கஷ்டம் வந்து சேரும். இது மட்டுமின்றி சிலர் படுக்கையறையிலும், இந்த செருப்பை வைத்து விட்டு உறங்க செல்கிறார்கள். இதுவும் செய்யக் கூடாத ஒன்று. செருப்பானது எதிர்மறை ஆற்றலை தரக் கூடியது. இது போன்ற இடங்களில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் தோன்றும்.

அடுத்து இந்த செருப்பை வடக்கு கிழக்கு மூலையில் விடவே கூடாது. இந்த மூலையில் செருப்பை விட்டால் எப்பேர்பட்ட பண வரவு இருக்கும் குடும்பம் கூட அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறுவார்கள், வீண் விரையம் ஏற்பட்டு குடும்பத்தில் பணத்தட்டுபாடு வரும். ஏனென்றால் வடக்கிழக்கு மூலை என்பது குபேரர் குடியிருக்க கூடிய இடம். இந்த இடத்தில் தெய்வம் தொடர்பானவற்றை வைத்தால் குடும்பம் சுபிக்ஷ்மாக இருக்கும். ஒரு வீட்டின் வட கிழக்கு மூலை என்பது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த இடத்தில் செருப்பை விட்டால் பணவரவு நிச்சயம் தடைப் படும்.

- Advertisement -

அதே போல் சிலர் வீட்டிற்குள்ளே நுழையும், நுழை வாசலில் இந்த செருப்பை விட்டு விடுவார்கள். இது வீட்டிற்குள் வரும் நல்ல அதிர்வலைகளை தடுக்கும். வீட்டு நிலை வாசலில் என்பது தெய்வங்கள் உள்ளே வரும் வழி, இந்த வழியில் நாம் செருப்பினை விடும் போது நிச்சயமாக இதைத் தாண்டி ஒரு தெய்வமும் வீட்டிற்குள் வராது.

இந்த பதிவில் கூறிய இந்த விஷயங்கள் எல்லாம் இன்று புதிதாக தோன்றியவை கிடையாது. நம் முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி அதன்படி நல்ல முறையில் வாழ்ந்தும் வந்திருக்கிறார்கள். இன்றைய கால சுழற்சியில் நாம் சிலவற்றை மறந்து விட்டோம், பல விஷயங்களை நம் சௌகரியத்திற்கு மாற்றிக் கொண்டோம்.

இதையும் படிக்கலாமே: லோன் லோன் என்று லோனில் கிடந்து தவிப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீர வீட்டில் ஏற்ற வேண்டிய சக்தி வாய்ந்த விளக்கு என்னவென்று தெரியுமா? இந்த விளக்கு ஏற்றினால் பணம் புரளும்!

நாம் செய்யும் எந்த ஒரு காரியமும் நம் குடும்பமும், நாமும் நல்ல முறையில் வாழ்வதற்காகத் தான். இது போல சில தவறுகளை இது வரை தெரியாமல் செய்து இருந்தாலும், தெரிந்த பிறகு அதை சரி செய்து நல்ல முறையில் வாழ வழி தேடிக் கொள்வோம்.

- Advertisement -