தந்தேராஸ் அன்று வாங்க வேண்டிய 5 பொருட்கள்.

mahalashmi2
- Advertisement -

பெரும்பாலும் தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேராஸ் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த திருநாளை வட மாநிலத்தவர்கள் தான் கொண்டாடுவார்கள். ஆனால் இன்று எல்லோருக்கும் இந்த வழிபாட்டு முறைகளை பற்றி தெரிந்திருக்கிறது. வடமாநிலத்தவர்கள் வழிபாடு செய்யும் முறையை நாமுக பின்பற்றும்போது, நமக்கும் அதில் ஐஸ்வர்ய கடாட்சம் பெருகும் தானே.

அவர்களைப் போல செல்வ செழிப்போடு நாமும் வாழ வேண்டும் என்றால், இப்படிப்பட்ட நல்ல விஷயங்களை பின்பற்றலாம் தவறொன்றும் கிடையாது. நாளைய தினம் உங்களுடைய வீட்டில் தந்தேராஸ் நாளன்று இந்த ஐந்து பொருட்களை தவறாமல் வாங்கி வையுங்கள். மகாலட்சுமியின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

தந்தேராஸ் அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

வெள்ளிக்கிழமையும் தந்தேராஸ் வழிபாடும் ஒரே நாளில் வந்திருப்பதால் இன்றைய தினம் மகாலட்சுமி வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பல மடங்கு பலன் கிடைக்கும். நாளைய தினம் உங்களுடைய வீட்டிற்கு புதுசாக தங்கம் மற்றும் வெள்ளி வாங்கலாம். இதையெல்லாம் எங்களால் வாங்க முடியாது.

அந்த அளவுக்கு பணம் காசு எங்கள் கையில் இல்லை என்பவர்கள் தான் நம்மில் பெரும்பாலானோர் இருக்கின்றோம். அதனால் இந்த இரண்டு பொருட்களை முடிந்தவர்கள் வாங்கிக் கொள்ளுங்கள். முடியாதவர்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். இது தவிர நாளைய தினம் பூஜை செய்யும் போது, மகாலட்சுமிக்கு கட்டாயமாக ஒரே ஒரு தாமரை பூ வாங்கி வைத்து விடுங்கள்.

- Advertisement -

மகாலட்சுமிக்கு நாளை தாமரைப்பூ வைத்து வேண்டுதல் வைத்தால் உங்கள் பண கஷ்டம் உடனே தீரும் இது. அடுத்தபடியாக வீட்டை கூட்ட புது துடைப்பம், சமையலறைக்கு பயன்படுத்த ஏதாவது ஒரு புது பாத்திரம், மஞ்சள் குங்குமம், கல் உப்பு, இந்த பொருட்களை வாங்குவது சிறப்பான பலனை தரும்.

உங்களுக்கு மல்லிகை பூ கிடைத்தால் அதுவும் வாங்கினா வாங்கிக் கொள்ளலாம். அதுவும் சுக்கிரனுடைய அம்சம்தான். வெள்ளை நிறத்தில் மொச்சைக்கொட்டை வாங்குவதும் சிறப்பான பலன்களை கொடுக்கும். இதெல்லாம் மளிகை பொருட்கள் தான் வாங்கி வைப்பதில் நமக்கு எதுவும் வீணாக போவது கிடையாது.

- Advertisement -

என்னடா துடைப்பம் வாங்க சொல்கிறார்களே. வெள்ளிக்கிழமை துடைப்பம் வாங்கலாமா என்று யோசிக்காதீங்க. மகாலட்சுமியின் அம்சம் துடைப்பம். வீட்டை கூட்டி சுத்தம் செய்யக்கூடிய வேலையை அது செய்கிறது. நாளை இந்த துடைப்பத்தை நீங்கள் வாங்கினால் நிச்சயம் உங்களுக்கு லட்சுமி கடாட்சம் அமையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

எளிமையான பொருட்கள் தான். தங்கம் வெள்ளி வாங்கி தான் நாம் பெரிய பணக்காரராக வேண்டும் என்று அவசியம் கிடையாது. தேவைக்கு ஏற்ப தினம் தினம் வருமானம் வந்தாலே நாம் எல்லோரும் பணக்காரர்கள் தான். அதேபோல இன்றைய தினம் உங்களால் முடிந்தால் ஒரு ஏழை பெண்ணுக்கு வஸ்திர தானம் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க குபேர பூஜை

பெண்கள் மகாலட்சுமியின் சுவருவம் என்று சொல்லப்படுவார்கள். உங்கள் வீட்டில் திருமணம் ஆகாமல் கன்னிப்பெண் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் எனும் பட்சத்தில் நாளைய தினம் அந்த கன்னிப் பெண்ணின் கைகளால், புடவை ரவிக்கை துணி, வெற்றிலை பாக்கு, தாம்பூலம், வைத்து ஒரு பெண்ணுக்கு இந்த பொருட்களை தானம் செய்யதால் நிச்சயம் நல்லது நடக்கும். மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவு உங்களுக்கு பயன்படும் படி அமைந்திருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -