வாரம் மூன்று நாட்கள் இந்த புகையை வீட்டில் போட்டால் வீட்டில் உள்ள பீடை தரித்திரம் விரட்டி அடிக்கப்படும். சகல ஐஸ்வர்யமும் வீட்டிற்குள் குடியேறும்.

venkadugu-amman
- Advertisement -

கஷ்டம் வருவதற்கு முதல் காரணம் என்ன தெரியுமா. நம் வீட்டை தொற்றிக் கொள்ளும் பீடையும் தரித்திரம் தான். இந்த வார்த்தைகளை கேட்கும் போதே நமக்கு காது கூசுகின்றது. ஆனால் இந்த இரண்டு விஷயங்களும் நம்முடைய வீட்டில் நிரந்தரமாக வந்து தங்கி விட்டால், குடும்பத்தின் நிலைமை என்ன ஆகும். நிச்சயம் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். வருமானம் இருக்காது. அப்படியே ஆயிரம் ரூபாய் கைக்கு வருமானம் வந்தாலும் தாங்காது. வீண் விரைய செலவுகள். வீட்டில் இருப்பவர்களுக்கு உடலில் உடல்நிலை சரியில்லை வீட்டில் இருப்பவர்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை, ஏதாவது ஒரு தடை, ஏதாவது ஒரு கஷ்டம் வந்து தொல்லை கொடுத்துக்கொண்டு தான் இருக்கும். ஆக வீட்டில் இருக்கும் இந்த துன்பத்தை விரட்டியடிக்க என்ன செய்வது. வாரத்தில் மூன்று நாள் இந்த புகையை போட வேண்டும்.

இந்தப் புகையை வீட்டில் போட்டால் வீட்டில் சந்தோஷம் வந்துவிடுமா. நிச்சயம் வரும். முதலில் வீட்டை சுத்தம் செய்யுங்கள், பிறகு பூஜையறையில் விளக்கு ஏற்றுங்கள். இந்த தூபம் போடுவதற்கு, கொட்டாங்குச்சியை கொளுத்தி நெருப்பை தயார் செய்து கொள்ளுங்கள். தூபம் போடுவதற்கு பொடி தயார் செய்ய வேண்டும் அல்லவா.

- Advertisement -

தரித்திரத்தை விரட்டி அடிக்க தூபம் போடும் முறை:
லவங்கப்பட்டை, பரங்கிப்பேட்டை, வெண்கடுகு, ஏலக்காய், குங்கிலியம், எலுமிச்சம் பழ காய்ந்த தோல், இந்த பொருட்களை எல்லாம் பொடித்து கலந்து ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வெண்கடுகு மட்டும் முழுசாகவே அப்படியே தூபத்தில் போடலாம். தவறு கிடையாது. வீட்டை சுத்தம் செய்துவிட்டு இந்த சாம்பிராணி பொடியை நெருப்பில் போட்டு இந்த புகையை வீடு முழுவதும் காண்பித்தால் வீட்டில் இருக்கும் பீடை தரித்திரம் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக இதை எந்த கிழமைகளில் வீட்டில் காண்பிக்க வேண்டும் தெரியுமா. செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மூன்று நாட்கள் தவறாமல் இந்த புகையை வீட்டிற்குள் போட்டு வாருங்கள். வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் அடித்து பிடித்து வெளியே ஓடிவிடும். பிறகு வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் படிப்படியாக நுழைய தொடங்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு வருமானத்திற்கு தேவையான வழியையும் அந்த கடவுள் நிச்சயம் உங்களுக்கு காட்டி கொடுப்பார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: நீண்ட ஆயுள் கிடைக்க, வருமானம் உயர ஆடி மாதத்தில் இதை செய்ய மறக்காதீங்க! கஷ்டம் தீர்ந்து பணம் புழங்க செய்யும் வழிபாடு என்ன?

வீட்டில் சோம்பேறித்தனத்தோடு யாருமே இருக்க மாட்டாங்க. படிக்கும் பிள்ளை முதல், வேலை செய்யும் ஆண்கள் பெண்கள் வரை எல்லோரும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். குடும்பத்தில் நிம்மதி ஒரு போதும் நிலைகுலைந்து போகாது. இந்த மூன்று கிழமையும் இந்த புகை போடும் வழக்கத்தை கொண்டு வாருங்கள். வீட்டில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள் நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -