தீபாவளி அன்று உடன் பிறப்புகளுக்கு வாங்கித் தர வேண்டிய பொருள்.

dheepavali mangala porul
- Advertisement -

உறவுமுறைகளிலேயே மற்ற எந்த உறவுக்கும் இல்லாத ஒரு பாச பிணைவு இந்த உடன்பிறப்புகளுடன் எப்போதும் இருக்கும். ஒரே வயிற்றில் உதித்து ஒன்றாக பிறந்து ஒன்றாக வளர்ந்து உண்டு உறங்கி வாழ்ந்த இந்த உறவுகளை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் லேசில் உதறி தள்ளி விட முடியாது. அது அண்ணன் தம்பி அக்கா தங்கை போன்ற எந்த உறவாக இருப்பினும் மறையும் வரை நம் உடன் வரும் உறவு தான்.

நம்முடனே பிறந்து நம்முடனே மறையும் வரை வருவதால் தான் இந்த உறவுக்கு உடன் பிறப்பு என்று பெயர். நம்முடனே வருவது என்றால் நம் வாழ்வில் கடைசி காலம் வரை நம் நல்லது கெட்டது அனைத்திலும் அவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். சில குடும்பங்களில் சூழ்நிலை காரணமாக பேசாமல் மன வருத்தத்தில் இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் நிரந்தரமாக இருக்காது.

- Advertisement -

அப்படியான இந்த உறவு முறைகளில் நாள் கிழமைகளில் நாம் ஏதேனும் வாங்கிக் கொடுத்தால் அது அவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். நமக்கும் மன நிறைவை கொடுக்கும். அப்படியாக எதிர் வரும் தீபாவளி திருநாளில் நம் உடன்பிறப்புகளுக்கு வாங்கி கொடுக்கும் இந்த ஒரு பொருள் நம்முடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தீபாவளி அன்று உடன்பிறப்புகளுக்கு செய்ய வேண்டியது

அந்தக் காலம் முதலில் தீபாவளி பொங்கல் போன்ற பெரும் விசேஷ நாட்களில் தங்கள் வீட்டில் பிறந்த பெண்களுக்கு ஆண்கள் புதுத்துணிகள் எடுத்துக் கொடுப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது ஒரு சம்பிரதாயமாகவே நம் முன்னோர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

- Advertisement -

இதற்கு காரணம் தங்கள் வீட்டில் பிறந்து வேறு வீட்டிற்கு வாழப் போன பெண்களுக்கு இந்த பொருட்களை வாங்கிக் கொடுக்கும் போது இவர்களுடைய வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்று பொருள். அது மட்டும் இன்றி இது போல செய்பவர்களுக்கு எமதர்மராஜாவின் பரிபூரண ஆசீர்வாதமே கிடைக்கும் என்றும் கூட சொல்லப்படுகிறது. ஆகையால் தான் நம் முன்னோர்கள் இதை சம்பிரதாயம் என்ற பெயரில் செய்து வந்தார்கள்.

இப்போதும் அதே போல தான் நீங்கள் தீபாவளி திருநாள் அன்று உங்கள் உடன்பிறப்புகளுக்கு இதை ஆண் பெண் அனைவரும் வாங்கி தரலாம். அதாவது நம்முடைய உடன் பிறந்தவர்கள் எந்த பாலினமாக இருந்தாலும் இந்த பொருளை வாங்கித் தரலாம். அந்த பொருள் வேறு ஒன்றும் இல்லை குங்குமம் தான். தீபாவளி அன்று நீங்கள் துணி, பலகாரம், பணம் என எதை வாங்கி தர வேண்டும் நினைக்கிறீர்களோ, அத்துடன் குங்குமத்தை மறக்காமல் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு வேளை உங்களால் இவையெல்லாம் வாங்கிக் கொடுக்கக் கூடிய சூழ்நிலை இல்லாது போனால் குங்குமம் வெற்றிலை பாக்கு பழம் வைத்து நூற்றி ஒரு ரூபாயாக வைத்துக் கொடுங்கள். இதன் மூலம் உங்கள் உடன்பிறப்புகளின் வாழ்க்கையும் நல்ல முறையில் அமையும். உங்களின் வாழ்க்கையின் செல்வ நிலையில் பல மடங்கு உயரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: தீராத நோயை தீர்க்கும் பரிகாரம்.

இந்த முறை பரிகாரம் வழிபாடுகளை காட்டிலும் உயர்த்து என்றே சொல்லலாம். நம் உடன்பிறப்புகளுக்கு நாம் செய்யும் இந்த ஒரு காரியம் சந்தோஷத்தையும், குடும்பத்திற்குள் நல்ல சூழ்நிலையும், மகிழ்ச்சியும் ஏற்படும். ஆகையால் இந்த பரிகாரத்தை உடன்பிறப்பு இருப்பவர்கள் அனைவரும் செய்து பலன் அடைவதுடன் உடன்பிறப்புகளின் வாழ்க்கை நல்ல முறையில் அமையவும் வழி செய்யலாம்.

- Advertisement -